பணத்தை மீட்டுக் கொடுங்க: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவாதாக மோசடி – பெண் புகார்

கோவில்பட்டி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உள்ள ஆலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சூட்டுடையார் என்பவரின் மனைவி கோமு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க … Read more

எலி பேஸ்ட்டை தனி நபர்களுக்கு விற்கக்கூடாது என கடைகளுக்கு அறிவுறுத்தல் – அமைச்சர்

எலி பேஸ்ட்டை தனி நபர்களுக்கு விற்கக்கூடாது என அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் என்ற திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இத்திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கும் என்றும் சில ஆண்டுகளில் அனைத்து கல்லூரிகளிலும் இத்திட்டம் தொடங்க உள்ளதாகவும் கூறினார். Source link

கடைகளில் எலி பேஸ்ட்டை தனி நபர்களுக்கு விற்கக் கூடாது: தமிழக அரசு

சென்னை: எலி பேஸ்ட்டை தனி நபர் வாங்க வந்தால், அவர்களுக்கு தரக் கூடாது என்று அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் (மனம்) திட்டம் துவக்க விழா மற்றும் ஊடகவியலாளர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மனம் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மனம் … Read more

தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் – நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் மது போதையில் வாகனத்தில் செல்வோரால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க … Read more

இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் சாலை விபத்தில் இறந்த மணமகன் உடல் தானம்

திருப்போரூர்: திருப்போரூரில் இன்று காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில், கடந்த 9ம் தேதி சாலை தடுப்பில் பைக் மோதியதில் மணமகன் படுகாயம் அடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11 மணியளவில் மணமகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். இதனால் அவரது உடலை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு, அண்ணா நகரை சேர்ந்தவர் கஜேந்திரன்-கலா தம்பதி. இவர்களின் மகன் ராஜ் (32). இவர், திருப்போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் … Read more

செந்தில்பாலாஜி பதவி விலக வலியுறுத்தல்: கரூரில் பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு

கரூர்: பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததால் உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தெரிவித்தார். மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தப்போது வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கை மீண்டும் உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அமைச்சர் செந்தில்பாலாஜி பதவி விலக வலியுறுத்தி கரூர் … Read more

அதிமுக உட்கட்சித் தேர்தல் வழக்கு: இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்!

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி கே.சி. பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அதிமுக … Read more

சேலத்தில் இன்று மாலை அரசியல் பயணம்; எம்ஜிஆர், ஜெ. சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்க அதிமுக எதிர்ப்பு: போலீசில் எம்எல்ஏ புகார்

சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று மாலை சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அவர் மாலை அணிவிக்க அனுமதிக்க கூடாது என எம்எல்ஏ போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதிமுகவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு இரு பிரிவாக பிரிந்துள்ளனர். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்த நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் … Read more

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி-கவனக்குறைவாக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றதால் நேர்ந்த விபரீதம்

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையை இருசக்கர வாகனத்தில் கவனக்குறைவாக கடக்க முயன்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார் தட்டான்மலை தெருவைச் சேர்ந்த மரியதாஸ், தனது நண்பர் விமலுடன் இருசக்கரவாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மெத்தனமாக கடக்க முயன்ற போது, சென்னை நோக்கி அதிவேகத்தில் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மரியதாஸ் உயிரிழந்த நிலையில், விமல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் Source link

அதிமுக உட்கட்சித் தேர்தல் | தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை 

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவின் உட்கட்சி தேர்தலை எதிர்த்து, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் உரிமையியல் வழக்கு தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், … Read more