“ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யுங்கள்” – தமிழிசை மீது நாராயணசாமி கடும் விமர்சனம்

புதுச்சேரி: “ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யுங்கள்” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையை அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாத யாத்திரையை சகித்துக்கொள்ள முடியாமல் அவர் அணிந்திருந்த டீ-சர்ட் பற்றி பாஜகவினர் விமர்சித்துள்ளனர். அது திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீ-சர்ட். பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 3 முறை உடை மாற்றுகிறார். அவை இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்காவில் … Read more

ப்ளீஸ் நம்புங்கப்பா..! தமிழகத்தில் தான் மின் கட்டணம் கம்மி.. சொல்கிறார் செந்தில் பாலாஜி

இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். சென்னையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கேரள மாநிலத்தையும், தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பாருங்கள். இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், கேரளாவுடன் தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்த்து தமிழகத்தில் என்ன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது … Read more

இந்தியா இந்துக்களின் நாடு, ஆ ராசா கருத்து ஏற்புடையது அல்ல: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 18 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவின் கட்சி கொடியினை ஏற்றி 500 நபர்களுக்கு இலவச தண்ணீர் குடம் மற்றும் புடவை வழங்கினார்.  பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தேமுதிக 18 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி இன்று தமிழ்நாடு முழுவதும் கட்சித் தொண்டர்களால் … Read more

செங்கம் பகுதியில் பரபரப்பு பள்ளி சீருடையில் மாணவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ வைரல்-டிஎஸ்பி நேரில் விசாரணை

செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே பள்ளியில் சில மாணவர்கள் ராக்கிங் செய்து,  ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தற்போது, கஞ்சா புகைக்கும் வீடியோ வைரலாகி, பெற்றோர்களிடையே பெரும்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் அரசு பள்ளியில் மாணவர்களின் ஒழுங்கீனமான நடவடிக்கையால் அச்சமடைந்த  பெற்றோர் … Read more

நாட்டிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு – மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

நாட்டிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மாதவரத்தில் வடக்கு மண்டல மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொன்னேரி, திருவொற்றியூர், மாதவரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மின் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து, அவர்கள் பகுதியில் செய்து வரும் பணிகள் குறித்து விளக்க வேண்டும் என்றும் … Read more

சென்னையில் அதிகரிக்கும் தெரு நாய்கள்; மாநகராட்சி அதிரடி திட்டம்

Chennai Tamil News: சென்னையில் இரண்டு புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கவிருக்கின்றனர். கிரேட்டர் சென்னை மாநகராட்சி ஆணையர் (ஜிசிசி) ககன்தீப் சிங் பேடி தலைமையில் கால்நடை பொது சுகாதாரக் குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக் குறித்து ஆய்வு செய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.  நகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, 2018 கணக்கெடுப்பில், சென்னையில் சுமார் 57,366 தெரு நாய்கள் உள்ளன. இங்கு தற்போது லாயிட்ஸ் … Read more

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது அக்டோபரில் இறுதி விசாரணை

சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. நிலப் பிரச்சினை தொடர்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசு ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் … Read more

ஹாட்-ரிக் ஹிட் அடித்த ஸ்டாலின்… கடைசியில இப்படி ஆகிப்போச்சே!

திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. கலைஞர் கருணாநிதி இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார் . ஆனால், சொந்தக்கட்சியான திமுக உட்கட்சித் தேர்தலை நடத்துவதில் அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரே அப்செட் ஆகும் அளவுக்கு உடன்பிறப்புகள் அவருக்கு குடைச்சலை கொடுத்து வருவதாக தெரிகிறது. திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. … Read more

நீர்வரத்து 57 அயிரம் கன அடியானதால் ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்கு கொடுத்த அனுமதி மீண்டும் ரத்து-மேட்டூர் அணைக்கும் வரத்து 50 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது

பென்னாகரம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று மாலை அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் நேற்று காலை பரிசல் சவாரிக்கு கொடுத்த அனுமதி மாலையில் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாட்டிலும் மீண்டும் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே இவ்விரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் ஆணைகளின் பாதுகாப்பு … Read more

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 41 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது – வானிலை மையம்

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக மாறி மீண்டும் தாழ்வு பகுதியாக வழுவிழந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை  இயல்பைவிட 41 சதவீதம் அதிகபடியான மழை பதிவாகியிருக்கிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM