கோவையில் கஞ்சா விற்பனை செய்த 5 தனியார் கல்லூரி மாணவர்கள் கைது

கோவையில் கஞ்சா விற்றதாக 5 கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்ததில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். … Read more

பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு, ஊழல் புகாருக்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன: உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் பதில் மனு

சென்னை: முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக அறப்போர் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்ற பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததன் மூலம், அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி … Read more

மதுரை அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின்கசிவால் தீ விபத்து

மதுரை: புதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள 4 மாடி கொண்ட ஓட்டலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை விரைந்து சென்று தீயை அணைத்த நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் பார்.! சட்ட விரோதமாகவும் மதுபானம் விற்பனை.!

பூந்தமல்லியில் பாதுகாப்பு கருதி மூடப்பட்ட டாஸ்மாக் பார் தொடர்ந்து செயல்பட்டு வருவதும் மற்றும் சட்ட விரோதமாகவும் மது விற்பனை செய்து வருவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பூவிருந்தவல்லியிலிருந்து போரூர் வரை செல்லும் ட்ரங்க் சாலையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மெட்ரோ ரயில் பணி காரணமாக ட்ரங்க் சாலை கூறுகளாக காணப்படுகிறது. குறிப்பாக கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. … Read more

சென்னையில் 20.08.2022 (சனிக்கிழமை) இன்று எந்த ஏரியாவில் மின் தடை?

Chennai Power Shutdown: சென்னையில் 20.08.2022 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாசாலை, தாம்பரம், போரூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பொன்னேரி ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அண்ணாசாலை பகுதி: போர்ட் டிரஸ்ட் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, தம்புசெட்டி தெரு, அங்கப்பா நாய்க்கன் தெரு, … Read more

ஆளைப் பார்த்தே எந்த சாதி என்று சொல்லிவிடுவேன்.. கல்லூரி பேராசிரியையின் சர்ச்சை பேச்சு.!

சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் துறை தலைவர் பேராசிரியர் அனுராதா என்பவர் தன்னிடம் படிக்கும் மாணவனிடம் செல்போனில் பேசும் சர்ச்சை ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் குறித்தும், அந்த மாணவர்களுடைய சாதி என்ன என்று குறித்தும் கேட்கிறார். மேலும் சில மாணவர்களுடைய பெயரை சொல்லி அந்த மாணவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவனா.? நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் உன்னுடைய முகத்தை பார்த்தாலே தெரிகிறது எந்த சாதினு என்று சர்ச்சைக்குரிய வகையில் … Read more

தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்தார்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளை, புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற தமிழிசை சவுந்தரராஜன், அங்கு தயாளு அம்மாளை சந்தித்து, நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு … Read more

கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு ஒன்றிய அரசின் அதிகபட்ச உயர்தர அங்கீகாரம்

கோவை: கோவை காருண்யா நகரில் வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் இயங்கி வரும் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் உயர்தர அதிகபட்ச அங்கீகாரம் 5 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக்கழகம் 36 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி செயல்பாடுகள் மேற்கொள்ள தங்கும் வசதிகளோடு அனைத்து வசதிகளுடன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய … Read more