மதுரை | மது அருந்திவிட்டு வந்தால் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க தடை: அதிரடி காட்டும் ஊராட்சி

மதுரை: மது குடித்துவிட்டு வந்தால் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க மதுரை கம்பூர் ஊராட்சி தடை விதித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. இந்தக் கூட்டங்களில் பங்கேற்க கிராம பஞ்சாயத்துகள் சார்பில் போஸ்டர் அடித்தும், வாட்ஸ் அப் மூலமும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியம், கம்பூர் ஊராட்சியில் மற்ற கிராம பஞ்சாயத்துகளை போல் நாளை ஆகஸ்ட் 15 ஆம் … Read more

பாஜகவுக்கு அடுத்த ஷாக்; தலைவரை தட்டி தூக்கியது போலீஸ்!

இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த 11ம் தேதி தமிழக பாஜக சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணை தலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டார். அப்போது பாப்பாரப்பட்டி பழைய பஸ் நிலையத்தில் இருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரையில் ஊர்வலமாக பாஜகவினர் சென்றனர். இதை தொடர்ந்து தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைக்கப்பட்டு உள்ள … Read more

அதிமுக பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் தனித்தனியே பிரிந்துள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்நிலையில் சேலம் மாநகர் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்க ஆலோசனை கூட்டத்திற்கு கலந்து கொள்ளும்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் எம்ஜிஆர் அவர்கள் அதிமுக கட்சி தொடங்கிய 1972 ஆம் ஆண்டு கட்சியின் சட்ட விதிகளை உருவாக்கி அதில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கி … Read more

சென்னை தினம் – சமூக வலைதள ரீல்ஸ் போட்டிகளில் பங்கேற்க மக்களுக்கு மாநகராட்சி அழைப்பு 

சென்னை: ஆகஸ்ட் 22ல் ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுவதை ஒட்டி சமூக வலைதள ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை தினத்தைக் கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி உங்களை அழைக்கிறது. 1639 ஆம் ஆண்டு மெட்ரசாக உருவான நம்முடைய சென்னை, சிங்கார சென்னையாக வளர்ந்து இன்று பிரம்மாண்ட பரிமாணத்தில் பல பகுதிகளைச் சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி, எல்லோருடைய மனதிலும் … Read more

ரஜினிக்கு இதே வேலையா போச்சு… படம் ரிலீஸ்னா அரசியல் பேச்சு – இளங்கோவன் கலாய்

75 ம் ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு மாவட்ட கட்சியினர் சார்பாக துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மரப்பாலத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற பின்னர் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் ஈவிகேஎஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ப. சிதம்பரம் பதவியேற்றால் அதை முழுமையாக வரவேற்கிறேன். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசியது, பாஜகவினர் என்றாலே அவர்கள் வீசிய பொருளில் இருந்தே தெரிகிறது … Read more

நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை

தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. வேலூர் மாவட்டம் குடியாத்தம், காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரது மகள் கார்த்திகாதேவி (22) இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் (அப்பல்லோ நர்சிங் இன்ஸ்டியூட்) பிஎஸ்சி நர்சிங் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரியில் இருந்து இரவு தனது சொந்த ஊரான குடியாத்தம் வந்துள்ளார். இதனிடையே இன்று அதிகாலை கார்த்திகாதேவி வீட்டில் … Read more

கட்சியில் இருந்து நீக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.. நன்றி சொன்ன டாக்டர் சரவணன்!

கட்சியிலிருந்து டாக்டர் சரவணன் நிரந்தரமாக நீக்கப்பட்டதற்கு அவர் கட்சி விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சரவணன் கட்சி கட்டுப்பாட்டை மீறியதுடன், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதனால் சரவணனை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக கூறியுள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் சரவணனிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக … Read more

'இது தமிழ்நாடு; உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது' – பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ” மதுரை விமான நிலையப் பகுதியில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியும், விடுதலையின் 75-ஆம் ஆண்டு பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் … Read more

பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு: முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..!

மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சியில் நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அதனையடுத்து, மதுரை விமான நிலையம் நோக்கி வந்தபோது அவரது காரை வழி மறித்த பாஜகவினர் ” பாரத் மாதா கி ஜே” என்று கோஷமிட்டு கொலை வெறியுடன் அந்த காரை நோக்கி பாய்ந்தனர். பின்னர் அந்த கும்பலில் இருந்த பெண் ஒருவர் ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் அணிந்திருந்த செருப்பை கையில் எடுத்து வைத்திருந்த நிலையில் … Read more

இது தமிழ்நாடு! உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது – பாஜகவுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது நேற்று பாஜகவினர் காலணிகளை வீசினர். இதுதொடர்பாக ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிடிஆரிடம் மன்னிப்பு கேட்ட டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகுவதாகவும் நேற்று இரவு அறிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் … Read more