25 நாளாக 100 அடியாக நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்: 30 நாளில் காவிரியில் 150 டிஎம்சி உபரி நீர் வெளியேற்றம்

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று வரை 25 நாட்களாக 120 அடியாக நீடித்து வருகிறது. கடந்த ஜூலை 12-ம் தேதி முதல் இன்று வரை 30 நாட்களில், அணைக்கு 210 டிஎம்சி நீர் வந்துள்ளது. அணையில் இருந்து உபரி நீராக காவிரி ஆற்றில் 150 டிஎம்சி வெளியேற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1.45 லட்சம் கன அடியாக நீர்வரத்து … Read more

தடை அதை உடை… போர்க்குணம் கொண்ட அரசியல் பாய்ச்சலில் ஜோதிமணி!

ஜோதிமணி என்றாலே அவரது போராட்டக் குணம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். சொந்த மாவட்டமான கரூரில் தொடங்கி டெல்லி வரை தனது ஆவேசக் குரலை தீப்பிழம்பாய் வெளிப்படுத்தியுள்ளார். உள்ளாட்சி அமைப்பாக இருந்தாலும் சரி. மத்திய அரசாக இருந்தாலும் சரி. தவறு என்றால் தவறு தான். உடனே எதிர்வினை ஆற்ற தயங்க மாட்டார். இவர் குறித்த எதிர்மறை விமர்சனங்களை எல்லாம், அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு பதிலடி கொடுக்க வேண்டிய விஷயங்களுக்கு சரவெடியாய் வெடித்து விடுவார். தற்போது கரூர் … Read more

மீண்டும் ஏன் பொதுச்செயலாளர் பதவி? ஈபிஎஸ் தரப்பிடம் நீதிபதி எழுப்பிய சரமாரி கேள்விகள் இதோ!

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது. உள்நோக்கம் கொண்ட முடிவை எடுத்துள்ளனர் – வைரமுத்து: வைரமுத்து தனது தரப்பு வாதத்தில், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி எந்த கூட்டமும் கூட்டக் கூடாது என்பதே என் கோரிக்கை. பொதுக்குழு குறித்த நிகழ்ச்சி நிரல் வெளியிடுவதில்லை என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கெனவே நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்ட … Read more

பெயிண்ட் அடிக்கும் பணியின் போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியின் போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கல்லுகுழி முதல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவர் தர்மபுரி மாவட்டம் அரூர் திரு.வி.க நகரில் உள்ள எல்.ஐ.சி அலுவலக கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கால் தவறி மணிகண்டன் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை … Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நெல்லையைச் சேர்ந்த முத்துராமன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிப்காட் வழங்கிய நிலத்தை விற்கவோ, வேறு நிறுவனங்களுக்கு மாற்றவோ சிப்காட் நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும். வேதாந்தா நிறுவனம் அவ்வாறு … Read more

1000 முதலைகள் குஜராத்திற்கு இடமாற்றம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் 1000 முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக இருக்கும் ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய மாநில அரசு துறைகள் அனுமதியளித்ததை எதிர்த்து சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ. விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் … Read more

ரூ.3000 உதவித்தொகையுடன்.. மீனாட்சி அம்மன் கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர் சேர்க்கை

(கோப்பு புகைப்படம்) உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் திருமுறை இசைமணி பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதில் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் திருமுறை இசைமணி பட்டத்திற்கான 3 ஆண்டுகள் கால படிப்பு கற்பிக்கப்பட்டு அதற்கு பட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த படிப்பிற்கு உண்டான நடப்புக் கல்வி ஆண்டின் … Read more

6 வயது சிறுமியை கரும்பால் அடித்தே கொன்ற கொடூரத்தாய்…! செல்போன் பேச்சு அம்பலமானதால் ஆத்திரம்..!

திருவண்ணாமலை அருகே 6 வயது சிறுமி கரும்பால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாயின் செல்போன் பேச்சை காட்டிக் கொடுத்ததால் சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பூபாலன் இவரது மனைவி சுகன்யா . இவர்களுக்கு எட்டு வயதில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் பிரசன்னதேவ் என்ற மகனும், ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் ரித்திகா … Read more

களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசிய கொடி பேரணி – குமரி ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க உத்தரவு

மதுரை: களியாக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசிய கொடியுடன் வாகனத்தில் பேரணி நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு குமரி மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த விஷ்ணு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ஆகஸ்ட் 15-ல் மதியம் 2 மணிக்கு களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வரை இரு சக்கர வாகனத்தில் தேசிய கொடியுடன் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் நூறு கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர். … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன..?- மக்கள் நல்வாழ்வு துறை அறிக்கை..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 927 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் . இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 55 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 186 பேருக்கு … Read more