புதுவை மாநில அந்தஸ்துக்காக வழக்கு தொடர முடிவு: தமிழக முதல்வரை சந்திக்க காரைக்கால் திமுக திட்டம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நோக்கில், தமிழக முதல்வரை காரைக்கால் திமுகவினர் சந்திக்கவுள்ளனர். புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களாக தமிழகம் அருகே புதுச்சேரியும், காரைக்காலும், ஆந்திரம் அருகே ஏனாமும், கேரளம் அருகே மாஹேயும் உள்ளன. மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு இதுவரை தரப்படவில்லை. மக்களால் தேர்வான அரசை விட ஆளுநருக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. முக்கிய முடிவுகள் ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகே நடைமுறைப்படுத்த முடியும். புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கோரி பல போராட்டங்கள் … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிக்காக ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்

சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர்ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027 ஆகஸ்ட் வரை உள்ள நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் தனது பதவியை கடந்த ஜூலை 21-ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதை … Read more

தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: அதிமுக, பாஜக வலியுறுத்தல்

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்ள பாஜக​வின் மூத்த தலை​வரும், மகா​ராஷ்டிர மாநில ஆளுநரு​மான சி.பி.​ரா​தாகிருஷ்ணனை, அனைத்து தமிழக அரசி​யல் கட்​சிகளும் ஆதரிக்க வேண்​டுமென அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்​சிகளின் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் குடியரசு துணைத் தலை​வர் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு வாழ்த்​துகள். இது அவரது பொது சேவைக்​கும், மக்​கள் மீதான அர்ப்​பணிப்​புமிக்க சமூக செயல்​பாடு​களுக்​கும் … Read more

தமிழகம் முழுவதும் பரவும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

சென்னை: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடரும் என உழைப்போர் உரிமை இயக்கம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்க ஆலோசகர் வழக்கறிஞர் குமாரசாமி, “13 நாட்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை பொது நல வழக்கு என்ற நாடகத்தை நடத்தி, காவல் துறையைப் பயன்படுத்தி கலைத்தனர். எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை. இது தொடரும். காவல் துறையிடம் … Read more

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

மதுரை: மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை மாநகராட்சியை சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் இன்று (ஆக.18) இரவு கைது செய்துள்ளனர். தனியார்மய அரசாணையை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சியின் வளாகத்தில் இன்று (ஆக.18) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். Source link

“நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும்” – ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்திய நயினார் நாகேந்திரன்!

சென்னை: சினிமாவில் 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த நயினார் நாகேந்திரன் இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “இந்தியாவின் பத்ம விபூசண், தாதா சாகிப் பால்கே விருது பெற்ற கலைஞன், ஆறிலிருந்து ஐம்பது வரையில் அனைவருக்குமான சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்தை இன்று … Read more

தொண்டையில் சிக்கிய மிட்டாய்! உயிரைக் காப்பாற்றிய ரயில்வே போலீசார்! குவியும் பாராட்டு..

Railway Police Saves Kid : குழந்தையின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை துரிதமாக செயல்பட்டு வெளியே எடுத்து உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலர்களின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

மதுரை தவெக மாநாடுக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும்: காவல் துறை

மதுரை: மதுரை தவெக மாநாடுக்கு வருபவர்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது. மதுரை – தூத்துக்குடி சாலையில் பாரபத்தியில் என்ற இடத்தில் தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு ஆக.21-ல் நடக்கிறது. இதையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அன்றைக்கு போக்குவரத்தில் வழித்தட மாற்றங்களை செய்து மதுரை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. இதன்படி பார்க்கிங் 1-ஐ வந்தடையும் வாகனங்களின் வழித்தடம்: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் … Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு!

kanyakumari Local Holiday: கன்னியாகுமாரி மாவட்டத்தில் 3 வட்டங்களுக்கு மட்டும் வரும் 30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

3 ஆண்டுகளுக்கும் மேலான நிலுவை வழக்குகள்: சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

சென்னை: மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு, முடித்து வைக்க ஏதுவாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு, விரைந்து முடிக்க, உச்ச நீதிமன்ற குழு, விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை … Read more