’10 வயது சிறுமிக்கு திருமண சான்றா?’.. பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்த வட்டவழங்கல் அலுவலர்!

நெல்லையில் 10 வயது சிறுமிக்கு திருமணச் சான்று கேட்ட திசையன்விளை வட்டவழங்கல் அலுவலரால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை வட்டம் முதுமொத்தான் மொழியை அடுத்துள்ள தலைவன்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள். இவரது மகளுக்கு புதிய குடும்ப அட்டை பெறுவதற்காக தனது குடும்ப அட்டையிலிருந்த பேரன் – பேத்தி ஆகியோரின் பெயர்களை நீக்குவதற்காக பொன்னம்மாள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இதனை பரிசீலித்த திசையன்விளை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பொன்னம்மாளின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்துள்ளார். இதனால்  வேதனையடைந்த … Read more

அதிமுகவின் முதல் எம்.பி மாயத் தேவர் மரணம்

எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக தொடங்கப்பட்டு முதலில் சந்தித்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆன அதிமுகவின் முதல் எம்.பி மாயத் தேவர் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 88. திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972 அதிமுக தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் தலைமயில் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அதிமுக சந்தித்த முதல் தேர்தல் இது. 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த … Read more

#செங்கல்பட்டு | பாரம்பரிய நெல் விதை வேண்டுமா? விவசாயிகள் கவனத்துக்கு.! 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் பாரம்பரிய நெல்ரகங்களை பயிர் செய்வதற்கு அரசு சார்பில் மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படுகின்றன.  இந்த வகையில் மதுராந்தகம் வேளாண் வட்டார அலுவலகத்தில், பாரம்பரிய நெல் விதைகளான தூயமல்லி, அறுபதாம் குறுவை, மாப்பிள்ளை சம்பா மற்றும் செங்கல்பட்டு சிறுமணி உள்ளிட்ட நான்கு வகையான நெல் விதைகள் வழங்கப்பட உள்ளன.  ஒரு கிலோ நெல் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. … Read more

“ரஜினியை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” – வைகோ

கோவை: “ரஜினிகாந்தை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள மதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: ”மதிமுக புத்துணர்ச்சி பெற்று தமிழகத்தின் அரசியல் சக்தியை தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. கோவை மதிமுகவின் கோட்டை. அறிஞர் அண்ணா பிறந்தநாளை மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் … Read more

அன்புமணி ராமதாசுக்கு மத்திய அமைச்சர் பதில்..!- என்ன சொன்னார் தெரியுமா..?

என்.எல்.சி நிறுவனத்தின் மூலம் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால், ஒட்டுமொத்த மாவட்டத்தையும்பாதிக்கப்பட்ட பகுதியாகமாவட்ட தாது அறக்கட்டளைஅறிவித்திருப்பதாகவும் மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிதெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் மருத்துவர் இராமதாஸ் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக மாவட்ட தாது அறக்கட்டளை மூலம் ஐந்தாண்டு முன்னோக்குத் திட்டம் தயாரிக்கச் செய்வதற்கான கொள்கைத் திட்டம் ஏதேனும் உள்ளதா? அத்தகைய திட்டத்தை தயாரிப்பதில் கிராம … Read more

வேலூர் “மார்க்” முதலீடு நிறுவனம் மீதான வழக்கு! நீதிமன்றத்தில் காவல்துறை கொடுத்த விளக்கம்

வேலூரை சேர்ந்த மார்க் என்கிற பங்கு சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிரான புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமது நண்பர்கள் மூலம் மோகன்பாபு விஜயன் என்பவருடன் தனக்கு அறிமுகம் ஏற்பட்டதாகவும், அவரும், ஜனார்த்தனன் சுந்தரம், வேதநாராயணன் சுந்தரம், லக்‌ஷ்மி நாராயணன் சுந்தரம் ஆகியோரும் வேலூரில் பங்குச்சந்தை முதலீட்டு தொழில் செய்யும் “மார்க்” (MARC) … Read more

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: பிரியாவிடை கொடுத்த ‘தம்பி’

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வீடியோவில் வந்து அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்தார் செஸ் ஒலிம்பியாட் நாயகன் ‘தம்பி’. சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிபியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நிறைவு விழா மேடையில் … Read more

நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுரை!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், நீதியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் முட்டத்தில் செயல்பட்டு வரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் பனங்குடி, நரிமணம் மற்றும் கோபுராஜபுரம் கிராமங்களில் இருந்து சுமார் 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கடந்த 2017ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன், இந்நிறுவனத்தை … Read more

”தியாகங்களுக்கு பதில் கோரத்தை நினைவுகூர்வது சரியா?”..நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் கேள்வி

‘நிதி சேவைத்துறையின் பிரிவினை கோரங்களின் நினைவு நாள்’ என்கிற ஆணை ஒற்றுமை என்ற செய்தியை சொல்லுமா? மாறாக கோரம் என்பதை மனதில் நிறுத்துமா? என்ற கேள்வி எழுகிறது என நிதியமைச்சருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- அரசு வங்கிகள் ஆகஸ்ட் 14ஆம் தேதியை பிரிவினை கோரங்களின் நினைவு நாளாக அனுசரிக்க உள்ளதாக ஊடகங்கள் வழியாக செய்தி பரவுகின்றன. இதற்கான கண்காட்சிகளை … Read more

“நெஞ்சில் ஈரம், இரக்கம் இல்லாதவருக்கு தலைமைப் பொறுப்பை கொடுக்க முடியுமா?” – இபிஎஸ் ஆவேசப் பேச்சு

கிருஷ்ணகிரி: “நெஞ்சில் ஈரம், இரக்கம் இல்லாதவரிடம் கட்சி தலைமைப் பொறுப்பை கொடுக்க முடியுமா, அவர் கட்சி தலைவராக இருக்க முடியுமா?” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் இருந்து இன்று சென்னைக்கு சென்ற அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிசாமிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பழனிசாமி பேசியது: “அதிமுகவில் மட்டுமே சாதாரண கிளை … Read more