தொடர் மழையால் மகசூல் அதிகரிப்பு: சூளகிரி சந்தையில் கொத்தமல்லி விலை வீழ்ச்சி

தொடர் மழையால் மகசூல் அதிகரித்துள்ளதால், சூளகிரி சந்தையில் கொத்தமல்லி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதேபோல, சூளகிரி தாலுகாவில் உள்ள 42 ஊராட்சிகளில் 600-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சூளகிரி, புலியரசி, செம்பரசனப்பள்ளி, மாரண்டப்பள்ளி, அத்திமுகம், ஒம்தேபள்ளி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொத்தமல்லி அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இதேபோல, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி … Read more

திருட்டு பைக்கில் ஆடுகளை திருட முயற்சி… கையும் களவுமாக பொதுமக்களிடம் சிக்கிய நபர்கள்!

திருவாரூர் அருகே திருட்டு பைக்கில் ஆடு திருடிய இரண்டு நபர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். திருவாரூர் அருகே தப்பலாம்புலியூர் கடைவீதியில், கடந்த வாரம் அதே ஊராட்சிக்குட்பட இலங்கைசேரியை சேர்ந்த அன்புதாஸ் என்பவரது இருசக்கர வாகனம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று தப்பலாம்புலியூர் கடைவீதி வழியாக காணாமல் போன இரு சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடி சென்றுள்ளனர். அப்போது வண்டியின் … Read more

கலவரத்தால் பாதித்த தனியார் பள்ளியைச் சேர்ந்த 907 மாணவர்கள் வேறு பள்ளியில் சேர விருப்பம் – அமைச்சர் தகவல்

சேலம்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளி மாணவர்களில் 907 பேர், வேறு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்துக்கு நேற்று வந்தார். ஏற்காட்டில் உள்ள புளியங்கடை, நாராயணதாதனூர், செங்கரடு ஆகியவற்றில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்தார். பின்னர், சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் … Read more

இன்று முதல் வண்டலூர் பூங்கா பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! பூங்கா நிர்வாகம் அறிவிப்பு.!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் வண்ணத்துப்பூச்சி பூங்காவை காணுவதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.  சென்னை அருகே இருக்கும் வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்த நிலையில், கொரானா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட 7 பார்வையாளர்கள் காணுமிடம் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றது.  இத்தகைய சூழலில், இரவு விலங்குகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா பயோ சென்டர், பாம்புகள் இருப்பிடம் உள்ளே சென்று காணும் பறவைகளின் … Read more

தமிழகத்தில் 12 இடங்களில் நவீன அரிசி ஆலை – அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

பழநி: தமிழகத்தில் 12 இடங்களில் நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். பழநி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பேசியதாவது: நத்தம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அடுத்த ஆண்டு அரசு கல்லுாரி தொடங்கப்படும். 25 ஆண்டுகள் பழமையான ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை பாக்கெட்களில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் … Read more

`குரங்கு அம்மை பற்றி வெளியான செய்தி உண்மையா இல்லையா?’- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

நேற்று தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டதாக வந்த செய்தி உண்மை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கருணாநிதி 4 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 7ஆம் தேதி, கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு சென்னை வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகே அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் பலர் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். இந்நிகழ்வுக்கு பின்னர் செய்திகளிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வரும் … Read more

பள்ளிகளுக்கும் தரக் கட்டுப்பாடு, அங்கீகார முறை அவசியம் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தல்

சென்னை: உயர்கல்வி நிறுவனங்கள்போல, பள்ளிகளுக்கும் தரக் கட்டுப்பாடு, அங்கீகார முறை அவசியம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தேசிய கல்வி மற்றும் பயிற்சிக்கான அங்கீகார வாரியம் (என்ஏபிஇடி), இந்திய கல்வி மேம்பாட்டு அமைப்பு ஆகியவை சார்பில், பள்ளிகளுக்கு தரக் கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த மாநாடு சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு … Read more