குறைகளுக்குத் தீர்வு காண தொகுதி வாரியாக பொறியாளர்கள்: மின்னகத்தை ஆய்வு செய்து ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காண தொகுதி வாரியாக பொறியாளர்களை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, 10 லட்சமாவது நுகர்வோரான சுவாமிநாதன் உடன் மின்னகத்தில் இருந்து அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர் சேவை பற்றி கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் … Read more

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை அனுமதிப்பது ஏன்? – திமுக அரசுக்கு சீமான் கேள்வி!

கொற்றலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசு, கொற்றலை ஆற்றைப் பாதிக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தையும், ஆற்றின் குறுக்கே மின் கோபுரங்கள் அமைக்கிற திட்டத்தையும் அனுமதிப்பதேன்? என, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: கொற்றலை ஆற்றின் குறுக்கே, இரண்டு இடங்களில் அணைகட்டி, தமிழகத்திற்கு வரவேண்டிய நீர்வளத்தைத் தடுக்க முயலும் … Read more

‘நாங்கள் பந்திக்கு முந்த மாட்டோம், தேவை இல்லாத பேச்சு வேண்டாம்’: ஜெயக்குமார் பளிச் பேட்டி

அதிமுக சார்பில் ஓ. பன்னீர்செல்வத்தை துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து  நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை துணை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். சபாநாயகர் கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்பட கூடாது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அண்ணா தொழிற்சங்க உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என திமுக கொடுத்த … Read more

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு – ரேண்டம் எண் வெளியிடாதது குறித்து அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் கலந்தாய்வில் 431 கல்லூரிகள் கலந்துகொள்வதாக தெரிவித்தார். கேரள மாநிலம் கொல்லத்தில் படித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பதாகவும், மொத்தம் 133 மாணவ, மாணவியர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்களை பெற்றிருப்பதாகவும் கூறிய அமைச்சர், இந்த ஆண்டு ரேண்டம் எண் வெளியிடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றார். அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின்கீழ் 22 ஆயிரம் பேர் பொறியியல் படிப்புகளில் சேர உள்ளனர். இந்த இட ஒதுக்கீட்டில் பெயரை சேர்த்துக் கொள்ளாதவர்கள் வரும் … Read more

கர்நாடக அரசு செயல்படவில்லை; ஆளும் பா.ஜ.க அமைச்சர் ஆடியோவால் சர்ச்சை

Karnataka minister Madhuswamy’s audio clip on ‘govt not functioning’ triggers row, horticulture minister asks him to quit: கர்நாடகாவில் பா.ஜ.க அரசு செயல்படவில்லை என்றும், 2023ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை நிர்வாகத்தை சமாளித்து வருவதாகவும் கூறிய சட்ட அமைச்சர் ஜே.சி மதுசாமி தொடர்பான ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து கர்நாடகாவில் சர்ச்சை எழுந்துள்ளது. அமைச்சர் மதுசாமிக்கும், சன்னப்பட்டினத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற சமூக சேவகருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடல், அரசாங்க … Read more

மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நபரை சிசிடிவிக் காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்தனர். அதில், 15ஆம் தேதி நள்ளிரவில் ஏடிஎம்மிற்கு வந்த மர்மநபர், கல்லால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று, முடியாததால் திரும்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது மன்னார்குடியை சேர்ந்த கூலி தொழிலாளியான நாகேந்திரன் என்பதும், மதுபோதையில் பேருந்து நிலையம் அருகே மயங்கி கிடந்த அவரிடம் இருந்த, 170 … Read more

சாத்தான்குளம் வழக்கு | ‘தந்தை, மகனின் ரத்தக்கரை ஆடைகளை குப்பை தொட்டியில் வீசிய போலீஸார்’ – கூடுதல் குற்றப்பத்திரிகையில் தகவல்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை போலீஸார் குப்பை தொட்டியில் வீசியதாக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் காமராஜர் பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 19.6.2020-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் கடந்தும் கடையை திறந்து வைத்திருந்ததற்காக தந்தை, மகன் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரையும் போலீஸார் கடுமையாக … Read more

ட்விட்டர் பக்கம் பாரு… உஷாரய்யா உஷாரு: எடப்பாடி கவனித்தாரா?

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டு நிறைவேற்றப்பட்டன. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எடப்பாடி பழனிசாமி உள்பட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ள ஓபிஎஸ், புதிய நிர்வாகிகளை நியமித்து பட்டியலை வெளியிட்டு … Read more

நான் கிறிஸ்தவர் என்பதால் தேசிய கொடி ஏற்றமாட்டேன் – தலைமை ஆசிரியையின் செயலால் சர்ச்சை

தருமபுரி  மாவட்டம் இண்டூர் அடுத்த பேடரஅள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 282 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி உள்ளிட்ட  13 ஆசிரியர்கள் பணிசெய்து வருகின்றனர். தலைமை ஆசிரியை தமிழ்செல்வி இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக பணிசெய்கிறார். அவர் இந்தாண்டு ஓய்வு பெற  உள்ளார். இந்நிலையில் நேற்று 75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி அப்பள்ளியில் கொடியேற்ற ஏற்பாடு நடந்தது. விழாவில்  பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியை … Read more

அரசுப் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை மற்றும் வளர்ச்சி நிதி வழங்கிய கிராம மக்கள்

விளாத்திகுளம் அருகே அரசுப் பள்ளிக்கு கல்வி சீர் மற்றும் வளர்ச்சி நிதியை கிராம மக்கள் வழங்கினர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வெம்பூரில் 1979-ம் ஆண்டு முதல் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒருங்கிணைந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நிதி திரட்டியுள்ளனர். இதையடுத்து பள்ளி மேலாண்மை குழு … Read more