சென்னை செஸ் ஒலிம்பியாட் | ‘தம்பி’ பெயர் காரணம் என்ன? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு ‘தம்பி’ என்ற பெயர் வைத்தற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னத்திற்கு ‘தம்பி’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெயரிட்டார். வெள்ளை வேட்டி, சட்டை போட்ட இந்த ‘தம்பி’ மூலம் செஸ் ஒலிம்பியாட் தொடரை நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது தமிழக அரசு. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் சின்னத்திற்கு ‘தம்பி’ என்ற பெயர் வைத்ததற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ளார். இது குறித்து செஸ் ஒலிம்பியாட் … Read more

நேரு அரங்கிற்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி – வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளித்த மக்கள்!

44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கை வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கிற செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளம் சென்ற பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா அரங்கிற்கு வருகை புரிந்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வழிநெடுகிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு … Read more

சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி – தமிழக அரசு வெளியிட்ட செய்தி.!

சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றும் ‘ஹர் கர் திரங்கா’ நிகழ்ச்சியை ஆகஸ்ட் 13, 14, 15-ம்தேதிகளில் கொண்டாட தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றும் ‘ஹர் கர் திரங்கா’ நிகழ்ச்சியை ஆகஸ்ட் 13, 14, 15-ம்தேதிகளில் கொண்டாட அரசு உத்தேசித்துள்ளது. இதையொட்டி, அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு … Read more

Chess Olympiad 2022: கோலாகலமாக தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்; போட்டி விதிமுறைகள் என்ன?

44th Chess Olympiad in Chennai: இந்தியாவில் முதன்முறையாக நடைபெறவிருக்கும் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டின் சென்னையில் இன்று மாபெரும் தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. இப்போட்டியானது சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஷெரட்டன் மகாபலிபுரம் ரிசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்பட உள்ளது, இப்போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. உலகெங்கும் உள்ள 180ற்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பாளர்களைக் கொண்ட இந்த போட்டியானது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் … Read more

“இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது தமிழகம்” – சென்னையில் பிரதமர் மோடி புகழாரம்

சென்னை: “தமிழகம் சதுரங்கத்துடன் வலுவான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளது. இதனாலேயே இந்தியாவின் சதுரங்க சக்தியாக தமிழகம் விளங்குகிறது” என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “மிகக் குறைந்த காலத்தில் ஒலிம்பியாட்டுக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளை நாம் செய்துள்ளோம். விருந்தினர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்ற நம்பிக்கை இந்தியாவின் சிறப்பம்சமாகும் உலகின் பழமையான மிகச் சிறந்த வரலாற்றை கொண்டது தமிழகம். இயற்கையாகவே தமிழ்நாடு … Read more

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: தனது கடையை தானே அடித்து நொறுக்கிய பழ வியாபாரி- வீடியோ வைரல்

காரைக்காலில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆத்திரமடைந்த பழக்கடை உரிமையாளர் தனது பழக்கடையை தானே அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறாக பலர் சாலைகளை ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஆணையர் செந்தில்நாதனுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். நகராட்சி ஆணையர் மற்றும் காரைக்கால் வட்டாட்சியர் செல்லமுத்து … Read more

செஸ் ஒலிம்பியாட்… கமல் ஹாசன் குரலில் தமிழரின் பெருமை… நடன நிகழ்ச்சியுடன் தொடக்கம்

சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி பிதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரலில் தமிழரின் பெருமையைக் கூற நடன நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரையாற்றி அனைவரையும் வரவேற்றார். இதையடுத்து, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி பற்றி கமல்ஹாசன் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் பெருமை மற்றும் தமிழர்களின் பெருமை பற்றி காட்சிப்படுத்தப்பட்டது. கமல்ஹாசன் … Read more

சென்னை செஸ் ஒலிம்பியாட் விழா மேடையில் பிரதமர் மோடி

சென்னை: ஐஎன்எஸ் அடையாறு தளத்தில் இருந்து சாலை வழியாக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் … Read more

கமுதி: 3000 ஆண்டு பழமையான மண் குவளைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

கமுதி அருகே 3000 ஆண்டு பழமையான சிறிய வகை மண் குவளைகள், முதுமக்கள் தாழியை அப்பகுதி இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்மாய் வரத்து கால்வாய் சீரமைப்பு பணியின்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 10 முதல் 20 வரையிலான முதுமக்கள் தாழிகள் பூமிக்கு அடியில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் கிராம மக்கள் அதனை பழைய மண்பானைகள் என கருதி, பொருட்படுத்தாமல் கண்டு கொள்ளாமல் விட்டுச் … Read more

Chennai Tamil News: ரூ20 கோடி செலவில் புதுப்பொலிவு பெற இருக்கும் கிண்டி பூங்கா: என்னென்ன புதிய வசதிகள்?

Chennai Tamil News: தமிழக அரசு 20 கோடி ரூபாய் செலவில் கிண்டி தேசிய பூங்காவை புதுப்பிக்கவுள்ளது. கிண்டி தேசிய பூங்காவின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறியதன்படி, கிண்டி சிறுவர் பூங்கா மட்டும் தான் ஆண்டிற்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட நகரத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. “கிண்டி குழந்தைகள் பூங்காவில் விலங்குகளை அடைக்கும் வசதி, திறந்தவெளி விளையாட்டுப் பகுதிகள், சிற்றுண்டிச்சாலை, குழந்தைகள் வனவிலங்கு நூலகம், இயற்கையை ரசித்தல் … Read more