'தமிழக மக்களுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்கிறேன்' – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக மக்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பதாக ஆளுநர் மாளிகை ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் தமிழக மக்களுடன் இணைந்து பிரதமர் மோடியை வரவேற்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது … Read more

சென்னைவாசி ஒருவரின் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னையை சேர்ந்த ஒருவருக்கு மாநகராட்சி சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் சொந்தமாக வீடு வைத்திருப்பவர்களுக்கு சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அரசாணை பிறப்பித்தது. முன்பு விதிக்கப்பட்ட சொத்து வரியை விட இதில் பல மடங்கு வரி உயர்த்தப்பட்டது. இதற்கு சென்னைவாசிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், சொத்து வரி உயர்வு திரும்பப் பெறப்படவில்லை. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை எதிர்த்து … Read more

பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – தொழிலாளி உயிரிழப்பு

பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி நாகராஜ்(54). இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு, கரிசல்பட்டியை சேர்ந்த மலைசாமி(48) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மேலக்கோட்டை பெரியார் காலனி சர்வீஸ் சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் அமர்ந்திருந்த நாகராஜ் சம்பவ … Read more

சாத்தூர் | பாலியல் வழக்கில் கைதான -ஆசிரியரை விடுவிக்கக் கோரி வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்

சாத்தூர் அருகே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்யக் கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி அரசு உயர்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் தாமோதரன் (50) பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் கூறப்பட்ட புகாரையடுத்து, அவரை போக்ஸோ வழக்கில் திங்கள்கிழமை சாத்தூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர். இதனால், ஆசிரியர் தாமோதரனை தற்காலிக பணி நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது. … Read more

Tamil Nadu Rains: 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Rains and Weather LIVE: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தலா 13 செமீ மழை பதிவாகியுள்ளது. #ExpressNews || 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்! https://t.co/gkgoZMIuaK … Read more

தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கி வைக்க இரண்டுநாள் சுற்றுப்பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் வருகை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். மாலை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கும் … Read more

`என்ன பெட்ரோல் கம்மியா இருக்கு? போடு அபராதத்தை’- ட்ராஃபிக் போலீஸின் செயல் சரிதானா?

கேரளாவை சேர்ந்த TJ’s Vehicle Point என்ற யூ-ட்யூப் சேனலில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் குறைவான பெட்ரோலுடன் பயணம் செய்ததால் இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. கேரளாவை சேர்ந்த தன்கச்சன் என்பவர் TJ’s Vehicle Point என்றொரு யூ-ட்யூப் சேனலை நடத்தி வருகிறார். இன்சூரன்ஸ் பிசினஸில் சர்வேயர் மற்றும் இழப்பு மதிப்பீட்டாளராக 10 வருட அனுபவமும், 15 ஆண்டுகள் மோட்டார் வாகனத் துறையில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றிய அனுபவமும் உள்ளவரான … Read more

பதவி விலக சொல்லி திமுக நிர்வாகி மிரட்டுகிறார்: இளையான்குடி பெண் பேரூராட்சித் தலைவர் புகார்

பேரூராட்சித் தலைவர் பதவியி லிருந்து விலகுமாறு என்னை திமுக நகரச் செயலாளரும், அவரது மகனும் மிரட்டுகின்றனர், என இளையான்குடி பெண் பேரூராட்சித் தலைவர் புகார் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு திமுக நகரச் செயலாளர் நஜூமுதீன் முன்னிறுத்தப்பட்டார். ஆனால், அவர் கவுன்சிலர் தேர்தலில் தோல்வி அடைந்தார். திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த செய்யது ஜமீமா தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தோல்வி அடைந்த நஜூமுதீன் மீண்டும் போட்டியிடுவதற்காக 13-வது வார்டு திமுக … Read more

கொத்திக்க வைத்த தண்ணீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் : எது சிறந்தது?

நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று நீர். ஆனால் நம்மில் பலர் அதை சரியாக கண்டுகொள்வதில்லை. இந்நிலையில் கொதிக்க வைத்த தண்ணீர் குடிப்பதால் பல தொற்று நோய்கள் வராது என்று கூறப்படுகிறது. மஞ்சள் காமாலை, , டைபாய்டு காய்ச்சல் ஆகியவை வராமல் தடுக்க முடியும். ஆனால் இதேவேளையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரால் எந்த பயன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குழாய் தண்ணீர் நமது வீட்டின் குழாய்களிலிருந்து வரும் தண்ணீரானது, ஏற்கனவே குளோரின் கலந்து வருவதால் அதில் பேக்டீரியா இருக்காது. … Read more

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னை : சூளைமேடு  சொக்கவேல் சுப்பிரமணியர் கோவில் சொத்துக்களுக்கான வாடகை பாக்கியை வசூலிக்க கோரி, இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று, சுகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், அறநிலை துறைக்கு ஒரு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. இந்நிலையில், தனிநபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவப்படுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று, சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு … Read more