பணத்தை தேடும் புதையல் வேட்டை… 30 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க ‘லக்கி’தான்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வருகிறது. கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி தருகிற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்களுக்கு விடை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுகிற கதைதான். அதனால்தான், அது சுவாரசியமானதாக இருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பணத்தை வேறு யாராவது கண்டுபிடிக்கும் முன் … Read more

புதுச்சேரியில் ஆக.10-ல் தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்: பேரவைக்குள் பதாகை, பேனருக்கு தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஆகஸ்ட் 10-ல் துணைநிலை ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. பேரவைக்குள் பதாகைகள், பேனர்கள் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது என்று பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேரவைத் தலைவர் செல்வம் கூறியது: ”புதுவை 15-வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையுடன் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை அலுவல் நாட்களை முடிவு செய்யும். … Read more

"ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட இயலாது" – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனத்திற்குள் வீசிச் செல்லும் போது, அப்பகுதி மக்களை மட்டும் எப்படி குற்றம் சாட்ட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜட்கா எனும் நிறுவனத்தின் சார்பில் அங்கு பணியாற்றும் அவிஜித் மைக்கேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியில் 3.77 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இடத்தில் கொடைக்கானல் பகுதி கழிவுகள் கொட்டப்படுகின்றன. காய்கறி சந்தை … Read more

Chess Olympiad Latest News: தமிழகம் வந்த ஒலிம்பியாட் ஜோதி; பா.ஜ.க-வினர் புறக்கணிப்பு

Chess Olympiad Tamil News: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது. 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் … Read more

“குடும்ப பிரச்சனை காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி”… கடிதத்தை கைப்பற்றிய காவல்துறை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், தனியார் பி.பார்ம் கல்லூரி மாணவி, கல்லூரியின் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மாணவி எழுதியதாக கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதில், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மாணவி எழுதிவைத்திருந்தாகத் தெரிகிறது. Source link

“பள்ளிகளில் மத, மூட நம்பிக்கை நிகழ்ச்சிகள் கூடாது” – தமிழக அரசுக்கு வீரமணி வலியுறுத்தல்

சென்னை: “பள்ளி வளாகத்துக்குள் ஷாகா, யோகா என்ற பெயரால் மத, மூட நம்பிக்கை தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த யாரும் அனுமதிக்கக் கூடாது” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பள்ளிக் கல்வித் துறை மூலம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு 77 அம்சங்கள் கொண்ட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் இவையெல்லாம் தேவையே – கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில், மேலும் … Read more

குடும்ப பிரச்னை: மன உளைச்சலில் இருந்த தலைமைக் காவலர் எடுத்த விபரீத முடிவு

ஆவடியில் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆவடி அருகே கோவில்பதாகை இந்திராகாந்தி நகர், கிருபா தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (39). இவர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திருநாவுக்கரசுக்கு குடிப் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி … Read more

சர்க்கரை, உப்பு, வெங்காயம்.. இப்படியும் யூஸ் பண்ணலாம்

நம் அனைவருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. நீங்களும் அந்த ‘கெட்ட நாட்களில்’ ஒன்றை அனுபவித்து கொண்டிருந்தால், சில லைஃப் ஹேக்ஸ் இங்கே உள்ளன, அவை நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை ஒரு மென்மையான அனுபவமாக மாற்ற உதவும். சர்க்கரை, வெங்காயம், உப்பு எப்போதும் நம் கிச்சனில் இருக்கக் கூடிய ஒன்று. ஆனால் இவை வெறும் சமையலுக்கு மட்டுமில்லாமல், செடிகளில் பூச்சி வராமல் தடுக்க, பாத்திரங்களை … Read more

அலுவலக நேரம் முடிந்தும் பணியாற்றியதால், இளைநிலை உதவியாளரை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டிய தலைமை ஆசிரியை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு பள்ளியில், அலுவலக நேரம் முடிந்தும் பணியாற்றிய இளநிலை உதவியாளரை, தலைமை ஆசிரியை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி விட்டுச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இப்பள்ளியை தலைமை ஆசிரியர் உமா பூட்டிவிட்டுச் செல்வது வழக்கம். மாலை 4.15 மணி வரையில் பள்ளி செயல்படும் நிலையில், வேலை பளு காரணமாக சில ஊழியர்கள் இரவு 7 மணி வரை இருந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அலுவலக நேரம் முடிந்தும் … Read more

“புதுச்சேரியில் ரவுடிகள் ஒடுக்கப்படுவர்; கஞ்சா புழக்கம் தடுக்கப்படும்” – புதிய டிஜிபி மனோஜ்குமார் லால் உறுதி

புதுச்சேரி: “புதுச்சேரியில் ரவுடிகளை ஒடுக்கவும், கஞ்சா புழக்கத்தைத் தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி மனோஜ்குமார் லால் உறுதியளித்தார். புதுச்சேரி டிஜிபியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற ரன்வீர் சிங் கிருஷ்ணியா தற்போது டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய டிஜிபியாக மனோஜ்குமார் லால் நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த அவர் நேற்று மாலை புதுச்சேரி டிஜிபியாக பதவியேற்றார். அவரை டிஜிபி இருக்கையில் ரன்வீர் சிங் கிருஷ்ணியா அமர வைத்து பொறுப்புகளை … Read more