வங்கக் கடலில் கலைஞருக்கு பேனா வடிவ நினைவிடம்; தமிழக மக்களின் நன்றிக் கடன்: அமைச்சர் எ.வ வேலு

வங்கக் கடலில் அமையயுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் தமிழக மக்களின் நன்றிக்கடன் என அமைச்சர் எ.வ. வேலு குறிப்பிட்டுள்ளார்.மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதி பயள்படுத்திய பேனா வடிவ நினைவிடத்தை மெரினா கடற்கரைக்குள் அமைக்க உள்ளனர். இந்த நினைவிடத்தை ரூ.80 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அமைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பேனா சிலை, 134 அடி உயரத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.இந்தத் திட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மாநில … Read more

நாமக்கல்லில் பெரியார் சிலை சேதம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலை அமைந்துள்ள பகுதியில் அசம்பாவிதத்தை தவிர்க்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாமக்கல் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் நேதாஜி சிலை எதிரே பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரது மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் சார்பில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று மாலை பெரியார் சிலை மட்டும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூன்று சிலைகளையும் உடனடியாக … Read more

கலைந்த மருத்துவக் கனவு! தடை செய்யப்பட்ட தடாகத்தில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் பலி!

நெல்லை மாவட்டம் நம்பி கோயில் மலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்க சென்ற மருத்துவக் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 5 பேரும், மாணவிகள் 6 பேரும் என 11 பேர் வள்ளியூரை அடுத்த திருக்குறுங்குடி மலைப்பகுதியில் உள்ள நம்பி கோயிலுக்கு இன்று காலை சென்றுள்ளனர். பின்பு அவர்கள் நம்பி பெருமாள் கோயிலுக்கு மேலே வனத்துறையால் தடைசெய்யப்பட்ட பகுதியான அடர்ந்த வனப்பகுதியில் … Read more

சேலம் | கொளத்தூரில் மின் வேலியில் சிக்கி  யானை உயிரிழப்பு: வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சேலம்: சேலம் அருகே கொளத்தூரில் விவசாய தோட்டத்தில் இருந்த மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர், ஆலமரத்துபட்டி கிராமத்தில் கூழ் கரடுதோட்டம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் வசிக்கும் விவசாயி புஷ்பநாதன். இவர் தனது விவசாய நிலத்தில் வன விலங்குகள் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுக்க, மின் வேலி அமைத்துள்ளார். இன்று காலை சென்னம்பட்டி … Read more

திருச்சியில் விரைவில் சித்தா மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் – கே.என் நேரு தகவல்

KN Nehru says Siddha and Dental medical colleges will starts soon in Trichy: திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா சித்த மருத்துவர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவினை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் … Read more

இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு.!

இருசக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே கார்ணாம்பூண்டியை சேர்ந்தவர் தொழிலாளி கனகராஜ் (40). இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கனகராஜ் உறவினரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் களஸ்தம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கழிக்குளம் கிராமம் ஏரிக்கரை பகுதி அருகே, சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்ததை கவனிக்காமல் கனகராஜ் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கனகராஜை … Read more

''பேருந்து நிறுத்தம் வசதி இல்லா தேர்வு மையம்'' – காலதாமதம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டவர்கள் ஆதங்கம்

திட்டக்குடி: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வெழுத தாமதாமாக வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் காவலர்கள் அனுமதி மறுத்ததால், மிகவும் ஆதங்கத்தோடு தேர்வெழுத முடியாமல் அங்கிருந்து திரும்பினர். தமிழ்நாடு தேர்வாணையத்தால் நேற்று நடத்தப்பட்டு குரூப்-4 தேர்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12.30 வரை நடைபெறும் எனவும் தேர்வர்கள், தேர்வு மையத்தில் 9 மணிக்குள் ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி தேர்வுக்கு தயரான தேர்வர்களில் சிலர் 9 மணிக்கு பின் அதாவது 9.05 மணிக்கு … Read more

தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி இல்லை – போராட்டம் நடத்திய குரூப் 4 தேர்வர்கள்!

ஓசூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுத தாமதமாக வந்த தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படாததால் அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர். தமிழக முழுவதும் டிஎன்பிஎஸ்சி  தேர்வுகள் இன்று காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வினை எழுதினர். ஓசூர் பகுதியில் பல்வேறு மையங்கள் அமைக்கப்பட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றது. ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 3,000க்கும் மேற்பட்ட … Read more

மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்தது

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 30 ஆயிரத்து 723 கன அடி நீர் வரத்து சரிந்துள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்த நிலையில், கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் நீர் வரத்து விநாடிக்கு 35 ஆயிரத்து 237 கன … Read more

“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” -ஆடியோ அனுப்பிவிட்டு 4 மாத கர்ப்பிணி விபரீத முடிவு

“என் சாவுக்கு மாமியார்தான் காரணம்” என்று வாட்சப்பில் தன் அக்காவிற்கு ஆடியோ அனுப்பிவிட்டு திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் 4 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை வேளச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் 25 வயதான இந்துமதி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரை சேர்ந்த 37 வயதான குமரன் என்பவரை பெற்றோர்கள் ஏற்பாட்டின் பேரில் திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆன நாள் … Read more