ஏ.ஆர் ரகுமான் கவனத்தை ஈர்த்த விஜய் டி.வி நடிகை: காரணம் என்னவாக இருக்கும்?!

விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வந்த நடிகை திவ்யா கிருஷ்ணனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யா கிருஷ்ணன். இந்த … Read more

ஸ்கூட்டி மீது மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து.. பெண் ஒருவர் பலி.!

ஸ்கூட்டி மீது மோட்டார் பைக் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுஉள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் வெள்ளச்சிவிளை பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை. இவரது மனைவி ஷைலஜா (வயது 42) நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டியில் வில்லுக்குறி சென்றுவிட்டு வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார். இந்த நிலையில் ஷைலஜா வெள்ளச்சிவிளையை சென்றடைந்தபோது எதிரே மோட்டார் பைக் ஒன்று வந்தது. அந்த மோட்டார் பைக்கில் தக்கலை பகுதியில் வசித்துவரும் செல்சோ என்பவர் ஓட்டிவந்துள்ளார்.  இந்நிலையில் … Read more

“மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு செய்ய ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?” – தமிழக பாஜக

சேலம்: “மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியதை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?” என பாஜக மாநிலத் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளும் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை கண்டித்தும், ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை, உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் பாஜகவினர் தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் … Read more

தஞ்சையில் கனமழை.. ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

தஞ்சையில் 2 நாட்கள் பெய்த கனமழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகி உள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் 17 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த திடீர் மழையினால் பல இடங்களில் இளம் பயிர்கள் தண்ணீரால் சூழ்ந்துள்ள நிலையில் நெல் மூட்டைகளும் சேதமடைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் முன்னைப் பட்டியில் அமைந்துள்ள நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் திறந்தவெளி சேமிப்புக்கிடங்கில் சேமித்து … Read more

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ஜூலை 28-ல் 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 28-ம் தேதி 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் இன்று (23-ம் தேதி … Read more

தாமிரபரணியில் கலந்த 17 பேரின் மூச்சுகாற்று.. வடுவாய் மாஞ்சோலை படுகொலையின் ரத்த சரித்திரம்!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் இருந்து 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது மாஞ்சோலை எஸ்டேட். அதற்கடுத்து காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என மொத்தம் உள்ள ஐந்து எஸ்டேட்களில், ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பின்னுள்ள அந்த ரத்த சரித்திரத்தை யாரும் மறக்க முடியாது. அந்த நாள் ஜூலை 23, 1999. எல்லோரையும் போல மாஞ்சோலை தொழிலாளர்களுக்கும் அது சாதாரண விடியலாகவே இருந்தது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் … Read more

மேற்கு வங்க ஆசிரியர் தேர்வு வாரிய முறைகேடு; மம்தா அரசின் மூத்த அமைச்சர் கைது

Santanu Chowdhury Mamata close aide Partha Chatterjee, Bengal minister who is in eye of SSC scam storm: மேற்கு வங்க மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பார்த்தா சாட்டர்ஜி, மாநில பள்ளிப் பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) ஆசிரியர் ஆட்சேர்ப்பு செயல்முறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பார்த்தா சாட்டர்ஜி முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான … Read more

“என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்” – கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை

கடலூர்: “என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும்” என்று கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் இறுதிச் சடங்கு, மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் இன்று நடைபெற்றது. மாணவியின் உடல் நல்லடக்கம் செய்த பின்னர் அவரது தந்தை ராமலிங்கம் கூறியது: “என் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும். என் மகளுக்கு ஏற்பட்ட ஆபத்துக்கான தண்டனையை அவர்கள் அனுபவித்தாக வேண்டும். எனது மகளின் … Read more

தருமபுரி: வனப்பகுதியில் கிடந்த 2 ஆண்களின் சடலங்கள்.. இரிடியம் மோசடியில் நிகழ்ந்த கொலை?

நல்லம்பள்ளி வனப் பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில், 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பூதனஹள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ள பழைய கல்குவாரி பகுதியில் கடந்த 19ஆம் தேதி மர்மமான முறையில் இறந்த 2 ஆண் சடலங்கள் கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் மற்றும் அதியமான்கோட்டை காவல் துறையினர்  உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து … Read more

டெல்லி ரயில் நிலையத்தில் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு: 4 ஊழியர்கள் சிக்கினர்!

டெல்லி ரயில் நிலையத்தில் 30 வயதான பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக 4 ரயில்வே ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.முன்னதாக ஜூலை 22ஆம் தேதி அதிகாலை 3.27 மணிக்கு ரயில்வே போலீசாருக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய அந்தப் பெண் தாம் டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், தாம் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற காவலர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். அப்போது, பெண்ணை ரயில்வே மின்துறை ஊழியர்கள் இருவர் … Read more