ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து பறந்த நோட்டீஸ்.. நாள் குறித்த வருவாய்த்துறை.!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில், நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   அதிமுக பொது செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதனிடையே, ஓ பன்னீர்செல்வம் நேற்று அதிமுக … Read more

சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டோர் மீது எடுத்த நடவடிக்கை செல்லும் – உயர்நீதிமன்றம்

பணமதிப்பிழப்பு கரன்சி நோட்டுக்கள் மூலம் சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கை செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிழப்பு செய்த கரன்சிகள் மூலம், சொத்துக்களை வாங்க பினாமியாக செயல்பட்டதாகக்கூறி கங்கா பவுண்டேஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட … Read more

மதுராந்தகம் | அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த 2 பேர் விபத்தில் உயிரிழப்பு

மதுராந்தகம்: திருவண்ணாமலை மாவட்டம் கொடுங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வேனில் திருச்சி – சென்னை சாலை வழியாக நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த சிறுநாகலூர் ரெட்டை ஏரிக்கரை அருகே சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ளே சென்டர் மீடியனில் ஏறிச் சென்று எதிரே வந்துக் … Read more

Tamil News Live Update: இ.பி.எஸ் அணியினர் 14 பேர் சிறையில் அடைப்பு: ஓ.பி.எஸ் தரப்பு மீதும் போலீசில் புகார்

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamil News Latest Updates அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், கழக … Read more

தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது தீ வைத்த மனைவி.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!

குடும்ப தகராறில் கணவர் மீது தீ வைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஜீவா நகரில் லிங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கயற்கண்ணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அங்கயற்கண்ணி தூங்கிக் கொண்டிருந்த போது தன் மீது தீ வைத்ததாக லிங்கநாதன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை … Read more

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் முதலிடம்.!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 81 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் 95 ஆயிரத்து 401 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். Source link

கடலூர் எம்எல்ஏ மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: துரைமுருகன் அறிவிப்பு 

சென்னை: திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட கடலூர் தொகுதி எம்எல்ஏ கோ.அய்யப்பன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இதற்கிடையே, கடலூர் மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தேர்தலில், கட்சித் தலைமை அறிவித்த சுந்தரிக்கு எதிராக, கடலூர் தொகுதி எம்எல்ஏ, கோ.அய்யப்பன், கவுன்சிலர்களைத் திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வருத்தம் தெரிவிப்பு இந்த விவகாரத்தில் … Read more

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு – தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு

OPS files petition in Election commission demand to reject EPS selection: அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க.,வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட … Read more

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து.. புத்தகங்கள் மற்றும் சீருடைகள் எரிந்து நாசம்.!

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் எரிந்து நாசமானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல்மேல் குடி அய்யனார் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருக்கும் ஒரு அறையில் புத்தகம் மற்றும் பள்ளி சீருடைகள் வைக்கப்பட்டிருந்தது.  நேற்று திடீரென அந்த அறையில் இருந்து புகை வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அறையில் … Read more