141 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்க நடவடிக்கை : கோவை எஸ்.பி

கஞ்சா வியாபாரிகளின் 141 பேரின் வங்கி கணக்குகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 62 புதிய கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டினை காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று துவக்கி வைத்தார். இதில் மூன்றாவது கண் எனப்படும் 10 அதிநவீன வாகன எண்களை கண்டறியும் கேமராக்கள் ( Advanced number plate recognized camera ) உள்ளிட்ட 62 கேமராக்கள் ரூ.10.40 லட்சம் மதிப்பில் … Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: இபிஎஸ் கண்டனம்

சென்னை: “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் வீட்டிலும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு இந்த அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் வீட்டிலும், அவரது உறவினர்கள் மற்றும் … Read more

பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு எடுக்கும் அதிரடி முடிவு?

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கருத்து கேட்கப்பட்டு வருகிறது. மாநில அளவில் ஏற்கனவே கல்வித் துறையைச் சார்ந்த அலுவலர்களுடன் இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று, மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான குழுவின் ஆலோசனை … Read more

பிரசவத்தின்போது குழந்தையின் தொடையில் எலும்பு முறிவு: டாக்டர்களின் அலட்சிய காரணம் என புகார்

சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் பிரசவத்தின் போது மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தையின் இடது தொடை பகுதி எலும்பு முறிவு, ஏற்பட்டதாக குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆடுர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் பாரதிராஜா – அருள்மொழி தம்பதியினர். இந்நிலையில் அருள்மொழி நிறைமாக கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரசவ வலி ஏற்பட்டவுடன் குழந்தையை மருத்துவர்கள் அலட்சியத்தோடு வயிற்றில் இருந்து … Read more

சென்னையில் உணவுத் திருவிழா: ஒரு கட்டுகட்டலாம் வாங்க!

Chennai Tamil News: சென்னை மக்களுக்கு மற்றொரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உணவுத் திருவிழா-2022 இன்று களமிறங்குகிறது. சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் இருக்கும் தீவுத் திடலில் ஆகஸ்ட் 12 முதல் 14 வரை பாரம்பரிய உணவு வகைகளுடன் கோலாகலமாக நிகழவிருக்கிறது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து நடத்தும் இவ்விழாவில், விழிப்புணர்வு நடைப்பயணம் ஆகஸ்ட் 14ஆம் நாள் நடைபெறவுள்ளது. மேலும், இத்திருவிழாவில் பங்கேற்கும் குழந்தைகள், தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்படுவார்கள். … Read more

தமிழகத்தில் மேலும் ஒரு யானைகள் காப்பக பகுதி – மத்திய அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் நான்கு யானைகள் காப்பக பகுதிகள் உள்ளது. இந்த நிலையில் ஐந்தாவது யானைகள் காப்பகமாக மேலும் ஒரு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வகையில் நெல்லை அகத்திய மலையை யானைகள் காப்பகமாக மாற்றப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். I am very happy to share with you all that later today, India will witness the establishment of one more Elephant Reserve, … Read more

கோவைக்கு வந்து சென்ற பிரெஞ்சு விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள்.!

பிரெஞ்சு விமானப்படையின் ரபேல் போர் விமானங்கள் கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பிய பின் புறப்பட்டுச் சென்றன. பிரான்சில் இருந்து தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு ஆட்சிப்பகுதியான நியூ கலிடோனியாவை 72 மணி நேரத்தில் அடையும் வகையில் 3 ரபேல் போர் விமானங்களும், துணையாக ஒரு விமானமும் புறப்பட்டன. 16 ஆயிரத்து 600 கிலோமீட்டர் பயணத் தொலைவில் இடையே பிரெஞ்சு விமானங்கள் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் புதன் மாலை தரையிறங்கின. எரிபொருள் நிரப்பிக்கொண்டு … Read more

“தாய்மொழியை ஆழமாக நம்பினேன்… இந்த உயரத்தை எட்டினேன்” – விஞ்ஞானி கலைச்செல்வி

சிவகங்கை: “தாய்மொழியை முழுமையாக உள்வாங்கிக் கொண்டால், நம்மால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மிக எளிதாக, மிகச் சரியாக புரிந்துகொள்ள முடியும்” என்று சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் கலைச்செல்வி கூறியுள்ளார். இந்திய அறிவியல் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநர் கலைச்செல்வி காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தாய்மொழியை நான் முழுமையாக புரிந்து கொண்டதாலும், அதனை உள்வாங்கிக் கொண்டதாலும் என்னால் இனிமேல் எந்த மொழியையும் உள்வாங்கிக் கொள்ள முடியும். தாய்மொழியை முழுமையாக உள்வாங்கிக் … Read more

திமுகவை டேமேஜ் செய்த அண்ணாமலை – மு.க.ஸ்டாலினுக்கு பாஜக நெருக்கடி!

ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.அண்ணாமலை விமர்சித்து உள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தனது நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். ஆனால் இங்கோ, சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மேடைக்கு … Read more

‘ரேஷன் கடைக்கு சென்றவர் திரும்பி வரல’.. திருமணம் நிச்சயமான இளம்பெண் காணாமல் போனதாக புகார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காணாமல் போன நிலையில், அவரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காமுட்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராசு என்பவரின் மகள் மஞ்சு, (21). கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவருக்கும், ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்த (24) வயது இளைஞர் ஒருவருக்கும், கடந்த 10 ஆம் தேதி நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை ரேஷன் கடைக்கு … Read more