Tamil News LIVE: ஸ்ரீமதி உடல் ஒப்படைப்பு

Go to Live Updates ஸ்ரீமதி உடல் ஒப்படைப்புகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடற்கூராய்வு ஆய்வில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் மீண்டும் ஆய்வு செய்யும் வகையில் புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னதாக மாணவியின் உடல் தகனம் செய்யப்பட இருந்தது. 11 நாள்களுக்கு பின்னர் மாணவியின் உடலை பார்த்ததும் அவரது பெற்றோர் கதறிஅழுதனர்.பெட்ரோல், டீசல் விலைசென்னையில் 63ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 எனவும், டீசல் … Read more

இபிஎஸ் கடிதத்தை நிராகரிக்க வேண்டும் – மக்களவை தலைவருக்கு ஓ.பி.ரவீந்திரநாத் கடிதம்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், ஓபிஎஸ், அவரது மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினார். இந்நிலையில், ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு இபிஎஸ் அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். இதனிடையே பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்குமாறு ஓ.பி.ரவீந்திரநாத், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம்அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ‘‘பழனிசாமி,தன்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.அவர் கூட்டிய சிறப்பு பொதுக்குழுவுக்கு எதிரான … Read more

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு! வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின் போது பருவமழை தொடங்கி விடும். ஆகையால், நெல் மூட்டைகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனுடைய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மத்திய அரசுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார்.  இந்த நெல் கொள்முதலை வழக்கமாக அக்டோபர் மாதத்திற்கு பதிலாக ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே செப்டம்பர் மாதத்தில் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர்  மு … Read more

கடலில் 360 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடி தளத்துடன் இரும்பு மேம்பாலம் – கருணாநிதி நினைவிடம் அருகில் 137 அடி உயர பேனா

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தை ஒட்டி வங்கக் கடலின் உள்ளே 137 அடியில் பிரமாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை நிறுவும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவிடத்தை ஒட்டிய வங்கக்கடலினுள் 137 அடி உயரபேனா சின்னத்தை நிறுவ மத்தியஅரசின் ஒப்புதலை தமிழக பொதுப்பணித் துறை கோரவுள்ளது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதிகாலமானார். அவரது உடல் மெரினாகடற்கரையில் அண்ணா … Read more

கள்ளக்குறிச்சி மாணவி சடலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி உயிரிழந்ததையடுத்து அவரது சடலம் இன்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 13ஆம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது. அவரது உடலுக்கு இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் இன்று பெரிய நெசலூர் கிராமத்தில் … Read more

ஒ.பி.எஸ் மகனுக்கு ஆதரவாக சசிகலா… இ.பி.எஸ் முடிவுக்கு எதிராக கண்டன அறிக்கை

அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் சார்பில் செயல்படுவ தடுக்கும் நடவடிக்கைகளை கட்சியின் கழக தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என சசிகலா கூறியுள்ளார். அதிமுகவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பெரும் அரசியல் பரபரப்புக்கு நடுவே கடந்த 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரை மாற்றம் செய்வதா அறிவித்தார். மேலும் கட்சியில் நலனுக்கு எதிரான செயல்பட்டதாக முன்னாள் … Read more

“இனி உன்னை என்னைக்கு பாக்கபோறேன்” – 11 நாட்களுக்குப் பிறகு சின்னசேலம் மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த மாணவியின் உடல் 11 நாட்களுக்குப் பிறகு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். அதில், தங்களது தரப்பு மருத்துவரையும் அனுமதித்து, ஸ்ரீமதியின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். … Read more

சென்னை மேயர் பங்கேற்ற கூட்டத்தில் ஜாலியாக 'விக்ரம்' படத்தை பார்த்து ரசித்த அதிகாரிகள்?

மேயர் பங்கேற்ற கூட்டத்தில் அலட்சியமாக செல்போனில் யு-டியூப், வாட்ஸ் அப் பார்த்து கேம் விளையாடி தூங்கி வழிந்த அரசு அதிகாரிகள் சென்னை போரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11-வது மண்டலத்தில் உள்ள வார்டுகளின் வளர்ச்சி மற்றும் திட்டபணிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், ,ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, மண்டல குழு தலைவர் நௌம்பூர் ராஜன் மற்றும் … Read more