இன்னும் பழைய பழனிசாமி மாதிரி நினைச்சுட்டு இருக்கீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்-உடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தியிருப்பதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் ஏற்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக வலுப்பெற ஒற்றைத்தலைமை அவசியம் என்றார். தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற சுயநலத்துடன் ஓபிஎஸ் செயல்பட்டதாகவும் அவர் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சாடினார். திமுக ஆட்சிக்கு வந்தது விபத்து என விமர்சித்த அவர், மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க பாடுபடுவதே தனது லட்சியம் என்றார். … Read more

கலைஞர் குடும்பத்தின் அடுத்த ஹீரோ… கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ரகசியம்

சினிமாவில் தயாரிப்பாளர் நடிகர் என தொடங்கி தற்போது அரசியலில் தடம் பதித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவதாக உதயநிதியின் மனைவி கிருத்தினா உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், ஆதவன் மன்மதன் அம்பு,7-ம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்துளளார். இதில ஆதவன் படத்தின் கெட்ஸ்ட் ரோலில் நடித்த உதயநிதி, இயக்குநர் ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி … Read more

வரதட்சணைக்காக கொல்லப்பட்ட இளம்பெண்.. கணவன், மாமனார்& மாமியார் கைது..!

வரதட்சணைக்காக மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ரெட்டிபகுதியை சேர்ந்தவர் தனுஸ்ரீயா.  இவருக்கு கீர்த்திராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து, கடந்த மாதம் அவர் தனுஸ்ரீயா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, இந்த்ன சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முதற்கட்ட விசாரணையில் கீர்த்திராஜ் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. விசாரணையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. … Read more

அதிமுக பொதுச்செயலாளருக்கு கட்சியில் உள்ள அதிகாரங்கள்.!

அதிமுகவில் பொதுச் செயலாளரின் அதிகாரங்கள், பணிகள் குறித்துச் சட்ட விதிகளில் பல்வேறு திருத்தங்களைச் செய்து பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.  அதிமுகவின் பொதுச்செயலாளர் கட்சியின் நிர்வாக முறையிலான அனைத்துப் பொறுப்புகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார். நிர்வாக வசதிக்காகப் பொதுக்குழு உறுப்பினர்களில் இருந்து துணைப் பொதுச்செயலாளர்களையும் பொருளாளரையும் நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு. அவைத்தலைவர், பொருளாளர், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நியமன உறுப்பினர்களைக் கொண்டு செயற்குழுவைப் பொதுச்செயலாளரால் மட்டுமே அமைக்க முடியும். செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டுதல், … Read more

அதிமுக சண்டைக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

சென்னை: “அதிமுக சண்டைக்கும், திமுகவுக்கும் தொடர்பில்லை” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.‌ இதற்கிடையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்த வன்முறை காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-வது பிரிவின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தச் சூழலில் அதிமுகவில் நடக்கும் சண்டைக்கு … Read more

வேகம் காட்டும் இபிஎஸ் – பொதுக்குழு தீர்மானம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வான தீர்மானமும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருமாத காலமாக ஒற்றைத் தலைமை விவகாரம் நீடித்து வந்தநிலையில், அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இதுதொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, வளர்மதி உள்ளிட்டோர் தீர்மானத்தை முன்மொழிய, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் வழிமொழிவதாக அக்கட்சியின் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம் வாசித்தார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, மலர்தூவி மரியாதை … Read more

டோனி சொன்னாக… கோலி சொன்னாக… இப்போ ரோகித் சர்மாவும் அதையே சொல்றாக!

Cricket News in tamil: முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்று ஃபார்மெட்டுகளிலும் சதமடித்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாககியுள்ளது. இதனால் ஆடும் லெவனில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருவது குறித்து பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி கருத்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் சமீபத்தில், ஃபார்மில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இந்திய அணி நிர்வாகம் மோசமான முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வீரர்களுக்கு … Read more

கணவனை கவர்ந்த கள்ளகாதலி… 20 முறை புகார்.. கண்டுகொள்ளாத போலீஸ்.! கைக்குழந்தையுடன் நடுத்தெருவில் கட்டிய மனைவி.!

திருப்பூர் எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில்  சுமதியின் கணவருக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து, சுமதியின் கணவர் தன் மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சுமதியின் கணவர் பழக்கம் ஏற்பட்ட அந்த பெண்ணுடன் பாண்டியன் நகரில் வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக, சுமதி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், திருவாரூர் காவல் … Read more

‘நிழல் குதிரைக்காக சண்டை’ – அதிமுகவை முன்வைத்து சசிகலா சொன்ன குட்டி ஸ்டோரி

புதுக்கோட்டை: அதிமுக இடைக்காக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ”நிஜத்தை தொலைத்தவர்களை நம்பி ஒரு குதிரை கூட செல்லாது” என்று உருவகக் கதை ஒன்றை சொல்லி விமர்சனம் செய்துள்ளார் வி.கே.சசிகலா. அதிமுகவில் தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக பணபலம், படைபலத்தைக் கொண்டு பதவியை பிடிக்க நினைப்போரை நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இன்று (ஜூலை 11) நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட அமமுக நிர்வாகியின் திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் … Read more

மதிப்பெண்-மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த TNPSC

மதிப்பெண் – மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் விவகாரத்தில் டி.என்.பி.எஸ்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டி.என்.பி.எஸ்.சி செயாலளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் … Read more