விமானத்தில் மயங்கிய சக பயணி: முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: விமானத்தில் மயங்கிய சக பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசைக்கு சக பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று அதிகாலை 3 மணியளவில் டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் பயணித்தார். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த நிலையில், காலை 4 மணியளவில் ‘‘யாராவது மருத்துவர் இருக்கீங்களா? சக பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார்’’ என்று விமான பணிப்பெண் ஒருவர் அறிவிப்பு விடுத்தார். இந்த அறிவிப்பை … Read more

பரிசுத் தொகையை உயர்த்தினால் காணாமல்போன கிளி கிடைக்கும் – மெய்யான ஜோதிடரின் வாக்கு

ஜோதிடரின் ஆலோசனையை ஏற்று பரிசுத் தொகை உயர்த்தப்பட்ட அறிவிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே காணாமல் போன கிளி அதன் உரிமையாளரிடம் திரும்பியது. கர்நாடக மாநிலம் தும்கூரில் ஜூலை 16ஆம் தேதி காணாமல் போன கிளி இறுதியாக அதன் உரிமையாளரிடம் திரும்பியுள்ளது. ஜெயநகரைச் சேர்ந்த ரவி, ரஞ்சிதா தம்பதியினர் தாங்கள் வளர்த்த ருஸ்துமா என்ற கிளி காணாமல் போனதை அடுத்து அவர்கள் தும்கூர் நகரின் தெருக்களில் கிளிகளைத் தேடி அலைந்தனர். ஆனால், கண்டுபிடிக்க முடியாததால் கிளியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.50 … Read more

சென்னை இ.சி.ஆர்-ல் ஆன்மீக- கலாச்சார பூங்கா: 223 ஏக்கரில் தமிழக அரசு பிரமாண்ட திட்டம்

சென்னை திருவிடந்தை அருகே இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் நெடுஞ்சாலையில், 223 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக மற்றும் கலாச்சார பூங்கா அமைக்க தமிழ்நாடு சுற்றுலா மற்றும் மனிதவள துறையானது திட்டமிட்டுள்ளது. இது சென்னைவாசிகளுக்கு ஈ.சி.ஆர். பகுதியில் மற்றொரு சுற்றுலாத்தலமாக அமையவிருக்கிறது. ஆன்மீகம், கலாச்சாரம், தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒரு ஆன்மீக தலமாக தமிழ்நாட்டிற்கு மற்றொரு அடையாளத்தை கொடுக்கும் முயற்சியில், நீர்முனை சுற்றுலா தளங்களை உருவாக்குவதற்கு கடற்கரையின் பெரும்பகுதியை பயன்படுத்தவிருக்கின்றனர். இத்திட்டத்தை மேற்கொள்வதற்காகவும் இப்பகுதியை மேம்படுத்துவதற்காகவும் … Read more

குட்கா ஊழல்: சி.விஜயபாஸ்கர் உட்பட 12 பேர் வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 12 பேர் வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கடந்த 2017-ம் ஆண்டு சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தொடர்பாக அமைச்சர், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ் உட்பட … Read more

என்னடா செல்லம் கரும்பு லாரியவே காணாம்: குட்டியுடன் சாலையில் உலாவந்த காட்டுயானை

சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே குட்டியுடன் நடமாடிய காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது பகல் நேரங்களில் சாலையில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை தனது குட்டியுடன் … Read more

ஹரோ ஹரா… முதல் முறையாக பிரதமர் மோடி போட்ட டிவிட்.! அதுவும் தமிழில்.! 

முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம் என்று, பிரதமர் நரேந்திர மோடி ஆடி கிருத்திகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இன்று தமிழகம் முழுவதும் உள்ள ‘தமிழ் கடவுள் முருகன்’ கோயில்களில் ‘ஆடி கிருத்திகை’ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  கடந்த இரு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடு இருந்த காரணத்தினால் முருகன் கோயில்களில் ‘ஆடி கிருத்திகை’ விழா காலை இழந்து காணப்பட்ட நிலையில், இந்த வருடம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு பிரதமர் … Read more

காவல்துறை ஒத்துழைப்புடன் அதிமுக அலுவலகத்தில் கொள்ளை: மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் 

சென்னை: ” காவல்துறை பாதுகாப்பு மற்றும் முழு ஒத்துழைப்போடு அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, அங்குள்ள பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது” என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,” தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அவருடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், புகழேந்தி மற்றும் கீதா உள்பட ஓபிஎஸ் தலைமயில் … Read more

மூத்த நிர்வாகிகளை மதிக்காத ஓபிஎஸ் அரசியல் அனாதையாகி விட்டார் – ஆர்பி. உதயகுமார்

மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உதாசீனப்படுத்தியதால் ஒபிஎஸ் இன்று அரசியல் அனாதையாகி விட்டார் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் பேசினார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் உள்ள ஜெயலலிதா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசும்போது… அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு திமுக அரசு உடந்தையாக இருந்தது. மூத்த நிர்வாகிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையை ஒபிஎஸ் உதாசினப்படுத்தினார், மாவட்டச் … Read more

“ஆடி கிருத்திகை… முருகப்பெருமானின் அருள் கிடைக்க பிரார்த்திப்போம்” – பிரதமர் மோடி

சென்னை: “முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம்” என்று ஆடி கிருத்திகையை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆடி கிருத்திகையை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் … Read more

கள்ளக்குறிச்சி மாணவி உடல் அடக்கம் – ஊர் மக்கள் கண்ணீர்

கள்ளக்குறிச்சியில் மரணமடைந்த பள்ளி மாணவி  உடல் இறுதிச் சடங்குக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது பெற்றோர் மட்டுமல்லாமல் ஊர் மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது காண்போரை கலங்கச் செய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் பிளஸ் 2 மாணவி கடந்த 12-ம் தேதியன்று பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் குற்றம்சாட்டி வந்தனர். … Read more