தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

கோடை விடுமுறையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு தாம்பரத்திலிருந்து மதுரை வழியாக நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை காலம் தொடங்க உள்ளதையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்குவதாக அறிவித்துள்ளது. அதில், ‘பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – நாகர்கோவில் மற்றும் தென்காசி வழியாக திருநெல்வேலி – தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர கோடை விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் … Read more

அசிங்கமான பெண் – கவர்ச்சிகரமான வரதட்சணை., பாடநூல் விவகாரம் – மருத்துவர் இராமதாஸ் கொந்தளிப்பு.!

வரதட்சணையை புனிதப் படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “செவிலியர் படிப்புக்கான Textbook of Sociology for Nurses  என்ற நூலில்  வரதட்சணையை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துகள் இடம் பெற்றுள்ளன.  TK Indrani என்பவர் எழுதிய இந்த நூல்  நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள் & பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது. வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் வீட்டை கட்டமைக்க … Read more

தமிழகத்தில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மக்களைப் பற்றி சிந்திக்காமல் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளதாக கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, சொத்து வரியை உயர்த்த வேண்டும் என மத்திய … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: பக்தர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கரோனா கட்டுப்பாடுகளின்றி பக்தர்கள் பங்கேற்புடன் திருவிழா நடைபெறவுள்ளதால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவிழா சார்ந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய திருவிழாவானது சித்திரை திருவிழா இதில் மீனாட்சியம்மன் திருகல்யாணம், தோரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கு நிகழ்வு ஆகியன நடைபெறும். இந்த நிலையில், 12 நாட்கள் நடைபெறும் … Read more

’கார்ப்பரேட்டில் வேலை செய்த மதுரை அமைச்சருக்கு ஏழை மக்களின் நிலை தெரியுமா?’-செல்லூர் ராஜூ

கார்ப்பரேட்டில் வேலை செய்தவர் அமைச்சராக உள்ளதால் ஏழை, எளிய மக்களின் நிலை தெரியாது என நிதி அமைச்சரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்தார். சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக பெத்தானியாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து … Read more

சொத்துவரி உயர்வு: தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது… ஓபிஎஸ்-இபிஎஸ் போராட்டம்

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அரசின் 15ஆவது நிதிக்குழு வழிகாட்டுதலின்படியே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார். தமிழ்நாட்டில் 7 சதவீத வீடுகளுக்கு மட்டுமே 100சதவீதம் முதல் 150சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்படுவதாக விளக்கமளித்தார். இந்நிலையில், சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக தரப்பில் இன்று … Read more

தங்கத்தின் விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம்.?

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.  சென்னையில் நேற்று, 22 … Read more

வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம்

கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் கணேஷ்குமார், இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் இருந்து வந்த தனிப்படை … Read more

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா இன்று (ஏப்.5) கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக விழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ள நிலையில், பங்குனி பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதில், கடந்த 30-ம் தேதி திருவிழாவுக்காக நாட்டுகால் நடும் விழா நடந்தது. இதைதொடர்ந்து, இன்று பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் … Read more

துறைவாரியான மானியக் கோரிக்கைகள்: நாளை முதல் சட்டப்பேரவையில் தொடங்குகிறது விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் நாளை முதல், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. மார்ச் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவற்றின் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர், நாளை முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை வரை நடைபெறவுள்ளது. நாளை நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், நாளை மறுநாள் நகராட்சி நிர்வாகம் துறை மீதான விவாதமும் நடைபெற … Read more