ஹோட்டல்களில் சேவை கட்டணத்துக்கு தடை – 1915 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

ஹோட்டல்கள், உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிரிவு 18(2)(1)-ன் கீழ் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஹோட்டல்கள் அல்லது உணவகங்கள் உணவுக் கட்டணத்தில் சேவைக் கட்டணத்தை சேர்க்கக் கூடாது. ஹோட்டல்களில் நுகர்வோரிடம் சேவைக் கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. உணவுக் கட்டணத்துடன் … Read more

சரத்குமாருக்கு சமூக அக்கறை வேண்டாமா? நெட்டிசன்ஸ் கொதிப்பு

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த சிலர் தற்கொலை செய்துகொண்டதால், அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பெரும் தொகையை இழந்த சிலர், நெருக்கடிக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டனர். ஆன்லைன் ரம்மியால் அதிகரித்து வரும் தற்கொலைகளால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள், … Read more

திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நர்சிங் மாணவி, விடுதியில் தற்கொலை செய்துகெண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே விடுதியுடன் கூடிய தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரியில்,ஈரோட்டைச் சேர்ந்த மாணவி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு நர்சிங்க படித்து வந்தார். இந்நிலையில், நேற்று அந்த மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். நேற்று பகல் வழக்கம்போல், அனைத்து மாணவிகளும் உணவருந்த சென்றபோது, மேலே உள்ள அறைக்கு சென்ற … Read more

திருவள்ளூர் நர்சிங் மாணவி விடுதியில் தற்கொலை செய்த விவகாரம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதிராவேடு சாலை பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதில், படித்து வந்த ஈரோட்டை சேர்ந்த சுமதி என்ற மாணவி, கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே விரைவில் விடுதியை காலி செய்ய … Read more

காலி கோப்பையை 8 நொடிகளில் கண்டுபிடிச்சா… நிஜமாவே நீங்க ஷார்ப் பாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் வெறுமனே ஒரு பொழுதுபோக்கு புதிர்களாக மட்டும் இல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருக்கிறது. அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காலி கோப்பையைக் கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்க ஷார்ப் பாஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாகி இருப்பதால் புதிர்களுக்கான விடையை வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் ஒரு சூறாவளி போல … Read more

நடுக்கடலில் பழுதான விசைப்படகு: தமிழக மீனவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இலங்கை கடற்படையினர்

ராமேசுவரம்: நடுக்கடலில் விசைப்படகு பழுதானதால் தவித்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் உதவிய சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சேகர் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் சரவணன், அலெக்சாண்டர், அந்தோணி, முருகன், சுப்பையா, சசி என 6 பேர் சென்ற விசைப்படகு இன்ஜின் பழுது ஏற்பட்டு தலைமன்னார் அருகே தத்தளித்துக் கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை … Read more

’எங்கள் கனவை அழித்தது அந்த பள்ளி நிர்வாகம்தான்!’ – கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை பேட்டி

சட்டம் சரியாக செயல்பட்டால் நாங்கள் ஏன் தனியாக போராடப் போகிறோம். அரசு அதிகாரிகள், காவல்துறையினரும் மெத்தனமாக நடப்பதற்கு காரணம் எங்களுக்கு புரியவில்லை. பள்ளிக் கல்வித்துறையில் இருந்து ஒரு அதிகாரி கூட இன்னும் எங்களை வந்து பார்க்கவில்லையே, ஏன்? – கள்ளக்குறிச்சி மாணவி தந்தை கேள்வி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதோடு காவல்துறை … Read more

EPFO News: உங்க பி.எஃப் அக்கவுண்டுக்கு இந்தத் தொகை வரப் போகுது; செக் பண்ணுங்க!

உங்களிடம் பிஎஃப் கணக்கு உள்ளதா? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்குதான். இபிஎஃப் (EPFO) சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் ரூ.40 ஆயிரம் வட்டியாக பெற உள்ளார்கள். தங்களின் கணக்குகளில் ரூ.5 லட்சம் வைத்திருக்கும் அனைத்து சந்தாதாரர்களும் இந்தப் பணம் கிடைக்கவுள்ளது.இதற்கு நீங்கள் யூஏஎண் (UAN) என்ற எண்ணை உருவாக்க வேண்டும். இதை உருவாக்குவது மிக எளிது. ஆது குறித்து பார்க்கலாம்.1) முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface இணையதள முகவரிக்கு செல்லவும்.2) பக்கத்தின் வலதுபக்கம் தொழிலாளர்களின் நேரடி யூஏஎண் ஒதுக்கீடு என்பதை தேர்வு … Read more

அக்காவுடன் விளையாடி கொண்டிருந்த போது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது கடப்பாக்கல் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இளவரசி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.  இந்த தம்பதியினருக்கு சுபத்ரா(வயது 9) என்ற மகளும், சுசிவின்ராஜ்(வயது 7), சுபிராஜ்(வயது 3) என்ற மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் சுபத்ரா தனது தம்பிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த … Read more

கரூரில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் முயற்சி: ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் 21 பேர் கைது

கரூர்: விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் 21 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும், மின்கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்பனபோன்ற எழுத்துமூலம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கரூர் மாவட்ட சம்யுக்தா கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் கரூர் ஆர்எம்எஸ் … Read more