தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் பரிசு அறிவிப்பு.. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா.?

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க உள்ளார். தமிழகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. அது மட்டும் இல்லாமல் நடைபாண்டில் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் … Read more

தேவையற்ற உரங்களை வாங்க கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை

சென்னை: விவசாயிகள் விரும்பும் உரங்களைத் தவிர வேறு உரங்களை கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தும் சங்க செயலாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு தேவையான உர வினியோகம் தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்களை தமிழகத்தில் உள்ள சுமார் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கூட்டுறவுத் துறை விநியோகம் செய்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் … Read more

ரஜினிகாந்தை போல மற்ற நடிகர்களும் தேசியக்கொடியை டிபி-யாக வைக்க வேண்டும் – எல். முருகன்

நெல்லையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 20ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செய்ய மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் வருகை தர உள்ளனர். அதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மத்திய அரசு சார்பில் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகை தந்த … Read more

ஆவின் பால் விற்பனை – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஆவின் பாலை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா என தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நெகிழி தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பி. டி. ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், பெரும்பாலான உணவுப் … Read more

ரோலெக்ஸ் ஆக நினைத்து லாக்கப் போன போட்டோ ரவுடிஸ்..!

விக்ரம் திரைப்பட ரோலக்ஸ் போல நிஜ போலீஸ் வாகனத்தை வைத்து போல ரீல்ஸ் எடுத்த போட்டோ ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் CISF படை போலீசார் புதுவண்ணாரப்பேட்டை துறைமுக பொறுப்புக் கழக குடியிருப்பு பகுதியில் தங்கி உள்ளனர். இவர்களை, புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் நவீன் குமார் என்பவர் காவல் வாகனத்தில் ஏற்றிச்சென்று உயர்நீதிமன்றத்தில் இறக்கிவிட்டு மீண்டும் துறைமுக பொறுப்புக் கழக குடியிருப்பு வளாகத்தில் காவல் … Read more

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் நாளை மதுரை வருகை

சென்னை: காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை விமானம் மூலம் அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டுவரப்படுகிறது. காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் மதுரை மாவட்டம், து.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்படுகிறது. ராணுவ வீரர் உடல் நாளை இரவு 1.05 … Read more

பாஜகவின் புதுச்சேரி ஆப்பரேஷன்; பல்லை உடைக்க ரங்கசாமி ப்ளான்!

தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இதன் மூலம் 4 எம்எல்ஏக்களை மட்டுமே பாஜகவால் உருவாக்க முடிந்தது. அதே சமயம் தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து போட்டியிட்டது. இதில் பாஜக மொத்தமாக 5 சதவீத வாக்குகளை பெற்றது. இதன் மூலம், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி எக்கச்சக்கமாக உயர்ந்து … Read more

தமிழகத்தை உலுக்கிய ஈமு கோழி மோசடி: பண்ணை உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஈமு கோழி நிறுவனம் மூலம் முதலீட்டாளர்களிடம் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபருக்கு கோவை நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் சாலையில் ரோஜா நகர் என்ற பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஈமு கோழிப்பண்ணை செயல்பட்டு வந்தது. இவருடன் லோகநாதன், புவனேஸ்வரி, செல்வம், சாந்தி ,ஆகியோரும் பணிபுரிந்து வந்தனர். பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு விளம்பரம் செய்து ஈமு கோழி நிறுவனத்தில் இரண்டு … Read more

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலின் 3-வது இடம்: இந்தியா டுடே கணிப்பு

நாட்டின் சிறந்த முதலமைச்சர் பட்டியலில் மு.க. ஸ்டாலின் மூன்றாம் இடத்தில் உள்ளார். பிரதமர் வேட்பாளர் தேர்வில் ராகுல் காந்திக்கு 9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.பிரபல ஆங்கில இதழான இந்தியா டுடே, நாட்டின் சிறந்த முதலமைச்சர் குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக்கணிப்பில் நாட்டின் சிறந்த முதலமைச்சர் பட்டியலில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முதலிடமும், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த சர்மா இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். மூன்றாம் இடத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. … Read more

போதைப்பொருள் தடுப்பு போல டாஸ்மாக் கடைகளையும் மூடவேண்டும்: எல்.முருகன்

தூத்துக்குடி: “டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். தமிழக முதல்வரும், படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை எல்லாம் சுலபமாக மறந்துவிட்டார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “போதைத் தடுப்பு என்பது மிகத் தீவிரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை. இது இன்றைய இளைஞர்கள் மத்தியில், … Read more