பணம் திருடு போகாமல் இருக்க பீரோவுக்கு மின் இணைப்பு கொடுத்த மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசான்ய தெருவை சேர்ந்தவர் அன்பழகி (68). சீர்காழி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். தனியாக வசித்து வந்த இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணம் அடிக்கடி திருட்டு போனதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பணத்தை பாதுகாப்பதற்காக நேற்றுமுன்தினம் இரவு அன்பழகி தூங்குவதற்கு முன்பு, சுவிட்ச் பாக்சில் பிளக்கை மாட்டி அந்த வயரை எடுத்து வந்து பீரோவின் கைப்பிடியில் சுற்றி விட்டு தூங்க சென்றார். … Read more

சோனாலி போகத் மரணம்: போதைப் பொருள் வியாபாரி கைது

ஹரியானா பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத் மரணத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் 42 வயதான சோனாலி போகத் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் கொலையில் போகத்தின் உதவியாளர்கள் கதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. சோனாலியின் மரணத்தை விசாரித்துவரும் காவலர்கள் சோனாலிக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். இந்தப் போதைப் பொருள்கள் அவருக்கு உணவில் கலந்துகொடுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் சோனாலி கொலையில் கைதுசெய்யப்பட்ட … Read more

போலி ஆதார்கார்டை வைத்து சிம் கார்டு விற்பனை செய்த இளைஞர் கைது..!

வேலுார் மாவட்டம் சத்துவாச்சாரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு காந்திநகர் பகுதியில் வாகன பரிசோதனையில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக் ஒன்று வந்ததில் அந்த பைக்கில் முன்பக்கத்தில் மட்டும் பதிவெண் எழுதப்பட்டிருந்தது. பின் பக்கம் எழுதப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அதில் வந்த இரண்டு பேரை விசாரித்தனர். அப்போது, அவர்கள் கொணவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் (வயது 23) ஷேக் தஸ்தகீர் (21) என்பது தெரியவந்த நிலையில், அவர்கள் கையில் … Read more

விநாயகர் சதுர்த்தியை அமைதியாக நடத்துவது குறித்து இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை: மெரினாவில் சிலைகளை கரைக்க தடை

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து இந்து அமைப்பினருடன் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31-ம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் ஊர்வலம், அசம்பாவித சம்பவங்கள் இன்றி … Read more

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மேட்டூர் பாமக எம்எல்ஏ மீது வழக்கு: விசிக புகாரில் நடவடிக்கை

சேலம்: கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர் காவேரிபுரத்தில் கடந்த வாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி அக்கட்சியினர் சுவர் விளம்பரம் வரைந்தனர். அதனை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த பாமகவை சேர்ந்த 2 பேர் தகராறு செய்தனர். தகராறு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி 5 நாட்களுக்கு முன்பு விசிகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்நிலையில், கடந்த 24ம் … Read more

‘விக்ராந்த்’ மறுஅவதாரம்: நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல்!

நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் (IAC-1) செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று இந்திய கடற்படை அறிவித்துள்ளது. ‘விக்ராந்த்’ எனப் பெயரிடப்படும் இந்தப் போர்க்கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விக்ராந்த் என்பது இந்தியாவில் இதுவரை கட்டப்பட்டதிலேயே மிகப்பெரிய போர்க்கப்பலாகும். மேலும் இந்திய கடற்படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இந்த மாபெரும், சக்தி வாய்ந்த … Read more

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு செயல்படும் ரேடார்..!

இதுவரை தமிழகத்தில் மழை பற்றிய தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வந்ததில், இந்த மழை பற்றிய தகவல்களை கணிக்க பயன்படுவதில் ரேடார் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம், மழை மேகங்களின் தன்மை, மேகங்களின் நகரும் திசை, மேகங்கள் கொடுக்க வாய்ப்புள்ள மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு கணித்து வருகிறது. இந்த ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின்காந்த அலைகள் மூலமாக கிடைக்கும் தரவுகள் மூலம் வானிலை … Read more

கோயம்பேட்டில் இருந்து செல்லும் 50% பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டம்

சென்னை: சென்னை பெருநகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலில் பேருந்துகளை இயக்குவது போக்குவரத்துத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. அதிக நெரிசல் மிக்க பகுதியான பிராட்வேயில் இருந்துதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளியூர் பேருந்துகள் இயங்கி வந்தன. அங்கு நிலவிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே, சென்னை கோயம்பேட்டில் 37 ஏக்கர் பரப்பளவில் ரூ.103 கோடி செலவில் பேருந்து முனையம் கட்டப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு முதல் செயல்படும் இந்த முனையத்தை நாள்தோறும் சுமார் … Read more

கோயில் விழாவில் பல்பு பழுதால் 100பேருக்கு கண் பார்வை பாதிப்பு

நாங்குநேரி: நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தில் ஊய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா கடந்த 25, 26ம் தேதிகளில் நடந்தது. இதையொட்டி எல்இடி அலங்கார பல்புகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சில எல்.இ.டி பல்புகள் பழுந்தடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோயில் கொடை விழாவிற்கு வந்திருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு ஒளியால் கண் பாதிப்பு ஏற்பட்டது. கண்ணில் பார்வை மங்கல், வீக்கம், நீர் வடிதலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை  பெற்றனர்.

ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்: தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்

சென்னை: ஆட்டோ கட்டணத்தை விரைவில் மாற்றியமைக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத் துறை ஆணையர் நிர்மல் ராஜ், போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் மணக்குமார் ஆகியோரை உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் மற்றும் மண்டல செயலாளர் மு.மகேஷ் ஆகியோரும் ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளும் சந்தித்து … Read more