அதிமுக பொதுக்குழு விவகாரம் – எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நீதிபதி சரமாரி கேள்வி..!

அதிமுக பொதுக்குழுகூட்டம் கட்சி விதிகள்படி நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து மட்டும் வாதிடும்படி இரு தரப்பு வழக்கறிஞர்களையும் நீதிபதி கேட்டுக் கொண்டார். பொதுக்குழுவின் போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார். ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னிர் செல்வம், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பில் ஆஜரான … Read more

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடதமிழக மாவட்டங்கள் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது … Read more

திருச்சியில் மின் கம்பங்கள் சாய்வது தொடர்கதை; உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Trichy people wants official to care damaged electric poles: திருச்சி புதுக்கோட்டை சாலையில் ஆடி மாத காற்றுக்கு 6 மின்கம்பங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மின் கம்பங்கள் சாய்வது தொடர் கதையாகி உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு : திருச்சி மாநகர பகுதிகளில் சாலையில் நடுவே சிமெண்ட் கட்டைகளை கட்டி அதன் நடுவே பூ செடிகளை வளர்த்து வைத்து அழகு … Read more

தென் தமிழகத்தில் முதல் முறை… மதுரை அரசு மருத்துவமனையில் அமைகிறது ‘கட்டண வார்டு’கள்

மதுரை; தென்தமிழகத்திலே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளை போல் நோயாளிகள் கட்டணம் அடிப்படையில் சிகிச்சைப் பெறுவதற்காக ‘பே வார்டு’கள் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் தினமும் சுமார் 10 லட்சம் மக்கள் உள் நோயாளிகளாகவும், … Read more

காலி டப்பாவில் கையை விட திட்டம்; கள்ளக்குறிச்சி மாணவி தாய் அதிரடி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அனைவரும் அறிந்த ஒன்று தான். எனவே, மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இது பெரும் போராட்டமாக உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் … Read more

முதன்முறையாக தமிழகத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா! எங்கு? எப்போது?

தமிழ்நாட்டில் முதன்முதலாக சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெற உள்ளது. இந்தாண்டுக்கான சர்வதேச காத்தாடி திருவிழா சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட ஆயிரக்கணக்கான அழகான காத்தாடிகள் திறந்த வெளியில் பறக்க உள்ளன. ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு 14 ஏக்கர் பரப்பளவில் மகாபலிபுரத்தில் உள்ள TTDC ஓஷன் வியூவில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு உணவுக் … Read more

விரைவில் மதுரவாயல்-துறைமுகம் சாலை; போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுமா?

Chennai Tamil News: சென்னை துறைமுகத்திற்கும் மதுரவாயலுக்கும் இடையே ரூ.5,855 செலவில் கட்டப்பட்டுள்ள 20.6 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலை டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் திறக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகின்றன. பிரதம மந்திரியின் ‘கதி சக்தி’ திட்டத்தின் கீழ், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு நான்கு வழிச்சாலையுடன் கூடிய உயர்த்தப்பட்ட தாழ்வாரம் அமைப்பதற்கான டெண்டர் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் உயர்த்தப்பட்ட தாழ்வாரம் நான்கு தொகுப்புகளாக அமைக்கப்படும். இத்திட்டம் முடிவடைய … Read more

சென்சார் உதவியுடன் கண்காணிக்கப்படும் ரயில்வே கேட்:  முதன்முறையாக திருச்சி கோட்டத்தில் அறிமுகம்

திருச்சி: ரயில்கள் வரும்போது ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காக, அவற்றில் சென்சார் கருவிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக திருச்சி ரயில்வே கோட்டத்தில், கடலூர்-மயிலாடுதுறை இடையே 10 ரயில்வே கேட்களில் சோதனை அடிப்படையில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 515 இடங்களில் ரயில்வே கேட்கள் உள்ளன. இவற்றில் 127 கேட்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்கள் கட்டுப்பாட்டிலும், மீதம் உள்ள 388 கேட்கள் இன்ஜினீயரிங் பிரிவுகட்டுப்பாட்டிலும் உள்ளன. இதில், ரயில் நிலையங்கள் … Read more

மாமியார் வழியில் சபரீசன்; பாஜகவால் வந்தது பலே சிக்கல்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன். முதல்வர் ஸ்டாலின் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றுபவராக இருந்தாலும், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மிகவாதியாக உள்ளார். இந்த நிலையில் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் போலவே அவரது மருமகன் சபரீசனும் கோயில்களுக்கு சென்று வழிபடுவதில் அதிக நாட்டம் உள்ளவராகவே அறியப்பட்டு வருகிறார். அந்தவகையில் அண்மையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற சபரீசன் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது சபரீசன் கோயிலில் யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. “உதயநிதி அப்புறம் இன்பநிதி” … Read more

‘அட இவ்வளவு கவனக்குறைவா?'- ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியின் பரிதாபங்கள்

வேலூரில், ஸ்மார்ட்சிட்டி பணிகளின் ஒரு பகுதியாக, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது, அடிபம்ப்புடன் சேர்த்து கட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தோடு சேர்த்து போடப்பட்ட சாலை, ஜீப்போடு சேர்த்து போடப்பட்ட சாலை… இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பது, அடிபம்புடன் சேர்த்து கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய். இத்தனையும் நடந்திருப்பது வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில்தான். ஸ்மார்ட் சிட்டி பணிகளின் ஒருபகுதியாக அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய் மற்றும் பாதாள சாக்கடைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சத்துவாச்சாரியை … Read more