சந்திரமுகி -2 செட்… ஃபேமஸ் காமெடியை ரீகிரியேட் செய்த வடிவேலு… வீடியோ வெளியிட்ட ராதிகா!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு சில ஆண்டுகளுக்கு பிறகு ரீ- எண்ட்ரி கொடுத்துள்ள நிலையில், சந்திரமுக 2 படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பழைய காமெடி ஒன்றை நினைவு படுத்திய அவரது வீடியோவை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இந்த படம் மலையாளத்தில் வெளியான மணிச்சித்திரதாழ் … Read more

சொந்த ஊரில் அனுமதிக்கப்படாத அமைச்சர் பொன்முடி! வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த அவலம்! உள்ளே வீடியோ!

உயர்கல்வி அமைச்சர் பொன்முடியின், சொந்த ஊரில் கல்லூரி மாணவன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் அருண். இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.  அருணுக்கும், அதே ஊரை சார்ந்த இருசக்கர வாகனங்கள் திருடுவது, கஞ்சா விற்பனை செய்வது,கஞ்சா போதையில் மிதப்பது என திரியும் சரத் (20 ) கீர்த்தி (17 ) சத்தியன் (16) … Read more

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு -நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, உயிரிழப்பதற்கு முன்தினம் அந்த பள்ளியில் இரவு நேர வகுப்பில் பங்கேற்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கடந்த 12 ஆம் தேதி இரவு மாணவி ஸ்ரீமதி, படிக்கும் அறையில் இருந்து வராண்டா வழியாக நடந்து, மாடியில் தான் தங்கியிருக்கும் தளத்திற்கு செல்வது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளன. இந்த சிசிடிவி காட்சிகளை மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி … Read more

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை நிச்சயமாக அமல்படுத்தப்படும்: தமிழிசை உறுதி

புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் நிச்சயமாக அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். அரவிந்தோ சொசைட்டியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்கும் நிகழ்வில் பங்கேற்ற பிறகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் கல்வியில் தரத்தை உயர்த்தவும், டிஜிட்டல் வகுப்பறை அமைத்து நவீனமாக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியையும் திணிக்க வழியில்லை. மொழி சொல்லி தருவதை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளலாம். … Read more

மேட்டூர் அணைக்கு 76,905 கனஅடி நீர் வரத்து: காவிரியில் 68,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்

சேலம்: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 76,905 கனஅடி நீர் வரத்து இருக்கும் நிலையில், அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 68 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கடந்த 16-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் நீர் வரத்து முழுவதும் காவிரி ஆற்றில் … Read more

உளவுத்துறை ஐஜி அதிரடி மாற்றம் – கள்ளக்குறிச்சி வன்முறை எதிரொலி?

உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போதைய ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது உளவுத்துறை ஐஜியாக செந்தில்வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல் திருவல்லிக்கேணி காவல்துறாஇ துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பியாக மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் வன்முறை … Read more

உங்க கண்ணுக்கு தெரிவது இதுதானே..? நீங்க ரொமான்ஸ்ல ரொம்ப வீக் பாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களால் வெறித்தனமாக பார்க்கப்பட்டு விடை காணப்பட்டு வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்‌ஷனாகி உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியும். முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதன் அடிப்படையில் அவர்களின் ஆளுமையைப் பற்றியும் கூறுகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. இந்த படத்தில் உங்களுக்கு முதலில் … Read more

தமிழகத்தில் 2ம் உலகப் போரில் சிதைந்த ரயில் பாதை மீண்டும் அமைகிறது – திட்ட அறிக்கைக்காக நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: இரண்டாம் உலகப் போரின்போது சிதிலமடைந்த ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி-ஒசூர் ரயில் பாதை மீண்டும் அமையவுள்ளது. கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி செல்லக்குமார் முயற்சியால் இந்த ரயில் பாதை அமைவதற்கான விரிவானத் திட்ட அறிக்கைக்காக ரயில்வே ரூ.2.45 கோடி ஒதுக்கி உள்ளது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1942 வரை, ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றவர ரயில் பாதை செயல்பாட்டில் இருந்துள்ளது. இரண்டாம் உலக யுத்தம் 1942ல் நடைபெற்ற போது, அந்த ரயில்பாதையின் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. இதன்பிறகு சுமார் 75 … Read more

இப்படியெல்லாம் கஞ்சா விற்பனையா? – வடமாநில இளைஞரிடமிருந்து 40 கிலோ பறிமுதல்

கோவையில் கஞ்சாவை சாக்லெட் வடிவில் விற்பனை செய்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாகவும், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரெங்கே கவுடர் வீதியில் டீக்கடை நடத்திவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சேத்தன் என்பவர் கஞ்சா சாக்லெட்டுகளை விற்று வருவது தெரியவந்தது. … Read more

Explained:  5ஜி ஏல போட்டியாளர்களின் வைப்புத் தொகை என்ன வெளிப்படுத்துகிறது?

நாடு 5ஜி நெட்வொர்க்குக்கு தயாராகிவருகிறது. இதற்கான ஏலம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 5ஜி நெட்வொர்க்கை பெற ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிப் போட்டு ஏலத் தொகையை செலுத்தியுள்ளன. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.1400 கோடியும், பார்தி ஏர்டெல் ரூ.5,500 கோடியும், வோடபோன் ஐடியா ரூ.2,200 கோடியும், அதானி குழுமம் ரூ.100 கோடியும் வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளன எனத் தகவல்கள் கூறுகின்றன.இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கும், அதானி குழுமத்திற்கும் வைப்புத் தொகை விஷயத்தில் ஒரு பெரும் … Read more