மக்கள் கோரிக்கைகளை துரிதமாக நடைமுறை படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் அறிவுறுத்தல்

தஞ்சை: தஞ்சாவூரில் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் உஷா புன்னியமூர்த்தி தலைமையில் துணை தலைவர் முத்துச்செல்வன், ஊராட்சி செயலர் முன்னிலையில் நேற்று காலை பனகல் கட்டடத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கூறினார். இதில் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் கூறியதாவது: அனைத்து புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அனைத்து ஆணையர்களுக்கும் வலிவுறுத்தினர். மேலும் அடுத்த கூட்டத்தில் … Read more

சென்னை: கனமழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – ஆவடி மக்கள் அவதி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக ஆவடி மாநகராட்சியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது இதன் காரணமாக தாழ்வான பகுதி மட்டுமின்றி பிரதான சாலைகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பிருந்தாவனம் நகர் பகுதியில் குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் … Read more

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மையங்கள்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் 3-வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து அமைச்சர் கணேசன் பேசியதாவது: தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சீரமைக்கப்படும். அதன் செயல்பாடுகள் சிறப்பாக அமைய, செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பயிற்சி … Read more

ராமநாதபுரம் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

National Award for Teachers: 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை, தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஓர் ஆசிரியர் அதுவும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் பெற்றுள்ளார். மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, இந்த நாளில் மத்திய … Read more

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள சுடுகாடுகள் சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் உள்ள அனைத்து சுடுகாடுகளையும் சீரமைக்கவேண்டும் என்று மக்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் அடங்கிய 27 ஊராட்சிகளில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என மூன்று மதத்தினருக்குமான சுடுகாடு, இடுகாடுகள் தனித்தனியாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான சுடுகாடு, இடுகாடுகள் பராமரிப்பின்றி விடப்பட்டதால் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் அனைத்து சுடுகாடு … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவிரி … Read more

ஆதார், வாக்காளர் அட்டை நகல் வழங்க அவசியம் இல்லை; வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைக்க ‘6பி’ படிவம் போதும்: தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்புக்காக ‘6பி’ படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். ஆதார், வாக்காளர் அட்டை யின் நகல்களை அளிக்க வேண்டியது இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரிசெய்யும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தரவேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் … Read more

உறவினர் மகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு பத்தாண்டு சிறை தண்டனை

கடலூர்: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. உறவினரே 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர், தன்னைப் பற்றி யாரிடாமவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார். ஆனால், அச்சத்தில் மாணவி பெற்றோரிடம் விஷயத்தை சொன்னதால் குற்றவாளிக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை கிடைத்திருக்கிறது. இது போன்ற … Read more

7-வது வார்டு நேரு பஜார் பகுதி கழிவுநீர் கால்வாய்களில் உற்பத்தியாகும் கொசுக்கள்; மருந்து அடிக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை போரூராட்சியில் உள்ள 7வது வார்டான நேரு பஜார் பகுதியில், உற்பத்தியாகும் கொசுக்களால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மருந்து அடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அம்பேத்கர் நகர், சிட்ரபாக்கம், ரெட்டி தெரு, செட்டி தெரு, சாவடி தெரு, கலைஞர் தெரு, சிவன் கோயில் தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, அண்ணா நகர், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை, கால்வாய் கரை என 15 வார்டுகள் … Read more

தீபாவளிக்கு முன்கூட்டியே பட்டாசு விற்க உரிமம் வழங்க வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்டாசு விற்பனை உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்க சாத்தியம் இருந்தாலும், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கான உரிமமும், இதர மாவட்டங்களில் ஓராண்டுக்கான உரிமமும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உரிம அனுமதிக்கு மார்ச் மாதத்திலேயே விண்ணப்பித்தாலும், விற்பனைக்கான உரிமம் தீபாவளிபண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டு வருகிறது. இது பட்டாசு வணிகர்களை பெருமளவு பாதிப்பதுடன், விற்பனைக்கான முன்னேற்பாடுகளை செய்வது, பாதுகாப்பாக விற்பனை செய்வது … Read more