மஞ்சள் வெயில் மாலையிலே…அட அருமை வினுமா #PhotoGallery

சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருபவர் வினுஷா தேவி. சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜோலிக்க நிறம் ஒரு தடையில்லை என்பபை பலருக்கும் உணர்த்திய விணுஷா தற்போது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்த இவர், திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. … Read more

மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல்: விழி பிதுங்கும் மக்கள்!

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆரம்பகட்டத்திலேயே எதிர்த்த நிலையிலும் மின்சார சட்ட திருத்த மசோதா 2022 இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பல நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியிருந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தாக்கல் செய்தார். மின்சாரச் … Read more

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அதிசயம்.! தங்கத்தால் ஆன பட்டயம் கண்டுபிடிப்பு.!

ஆதிச்சநல்லூர் cஅகழாய்வில் தொடரும் அதிசயம்.! தங்கத்தால் ஆன பட்டயம் அகழாய்வில் கண்டுபிடிப்பு.! பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டுபிடிப்பு  தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிப்பு மேலும், வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கியுடன் கூடிய அலங்கார கிண்ணம் பறவை வடிவத்துடன் கண்டுபிடிப்பு இவை தவிர, ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 18 இரும்பு பொருட்கள் கண்டுபிடிப்பு – தொல்லியல்துறை அதிகாரிகள் தகவல் Source … Read more

நீலகிரியில் கடும் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கியது; பள்ளிகளுக்கு 4-வது நாளாக விடுமுறை

உதகை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தால் 4-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. கேரள எல்லையை ஒட்டிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. விடிய விடிய … Read more

கொந்தகை அகழாய்வு பணி: முதன் முதலாக ஈமத்தாழியில் கண்டறியப்பட்ட சூதுபவள மணிகள்

கொந்தகை அகழாய்வில் ஈமத்தாழியில் 29 சூதுபவள மணிகள் முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளன. தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிவதற்காக சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், ஏற்கெனவே 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கொந்தகை அகழாய்வு தளத்தில் நடைபெற்ற 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியின்போது, ஒரே குழியில் அருகருகே 10 முதுமக்களின் தாழி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது … Read more

வெங்காயம், தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்

சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி விலை தொடர் வீழ்ச்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த சில மாதங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கிட்டத்தட்ட 25,000 ஹீட்டர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தக்காளி அறுவடை காலங்களில் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் விவசாயம் செய்த கூலி … Read more

என் சாவுக்கு அந்த 3 பேர் தான் காரணம்.. விஷம் குடித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி உயிரிழப்பு.!

கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஜோதிடர் பிரசன்னசாமி (வயது 41) இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவராக இருந்து வந்தார் . இந்நிலையில் பிரசன்னசாமி, அவரது மனைவி அஸ்வினி ஆகியோர் 25 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகை மோசடி செய்துள்ளதாக சென்னையை சேர்ந்த கருப்பையா என்பவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . அந்த புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரசன்னசாமி … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் … Read more

சென்னை: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் அடித்ததால் தப்பிய பணம்

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடிய நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில ஆர்.எம்.ப்ளாசா என்ற வணிகவளாகம் உள்ளது. இன்று அதிகாலை இங்கு இயங்கிவரும் எச்.டி.எப்.சி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலிக்கவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வளசரவாக்கம் … Read more

இலங்கையில் நடப்பது இங்கும் நடக்கும்: இ.பி.எஸ் எச்சரிக்கை

இன்னும் 46 அம்மாவசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பழனியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “ மக்கள் விரோத ஆட்சியை திமுக செய்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஆட்சி செய்தால், இலங்கையில் நடந்ததுபோல் தமிழகத்திலும் நிகழும். கிட்டதட்ட 14 அம்மாவாசைகள் சென்றுவிட்டது. இன்னும் 46 அம்மாவாசனைகள்தான் இருக்கிறது ஸ்டாலின் அவர்களே.  2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் … Read more