மாணவிக்கு பாலியல் தொல்லை.. சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது..!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டார். கடந்த மே மாதம் முதல் பொறுப்பு பதிவாளராக பதவி வகித்து வரும் கோபி, ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு நெறியாளராக இருந்துள்ளார். இந்நிலையில், ஆராய்ச்சி பாடம் தொடர்பான விளக்கம் அளிப்பதாக கூறி அம்மாணவியை தனது விடுதி அறைக்கு வரவழைத்த கோபி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தனது உறவினர்களிடம் இது தொடர்பாக மாணவி தெரிவித்த நிலையில், அவர்கள் கோபியை தாக்கியதாக … Read more

“மக்கள் கடனில் தவிக்கிறார்கள்… கடலில் பேனாவுக்கு சிலை அவசியமா?” – செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை: “திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள்தான். திமுகவிற்கு அடுத்து நாங்கள்தான் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும்” என மதுரையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்தார். மின் கட்டண உயர்வை கண்டித்தும், அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் மதுரை முனிச்சாலை பகுதியில் இன்று மாநகர அதிமுக செயலாளரும், அமைப்பு செயலாளருமான செல்லூர் ராஜூ தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் … Read more

ராஜராஜனின் புகழால் ராஜேந்திர சோழனின் பெருமைகள் மறைந்துபோனதா?..பிரமிக்கும் போர் சாதனைகள்!

சோழப் பேரரசின் தவிர்க்க முடியாத பெயர்! ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் ஒற்றை ஆளாக ஆண்ட சரித்திரப் பெயர்! ராஜேந்திர சோழன்..! பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழனின் மகன் தான் இவர். ஆனால் தந்தையை விட அதிக போர்களில் வென்று, அதிக நிலப்பரப்பை சோழப் பேரரசின் குடைக்கு கீழ் கொண்டுவந்த சிறப்புக்கு உரியவர். சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்று கூறப்படும் அளவுக்கு புகழ்பெற்றவர். ஆனால் தந்தையை விட சற்று குறைவாகவே தற்போது நினைவு கூறப்படுகிறார். கொண்டாடப்படுகிறார். … Read more

இந்தக் கடலின் அடியில் அபாயகரமான குளம்: யார் நீந்தினாலும் மரணம்தான்!

விஞ்ஞானிகள் செங்கடலின் அடிப்பகுதியில் கண்டுபிடித்துள்ள அபாயகரமான குளத்தில் எந்த உயிரினம் நீந்தினாலும் அல்லது யார் நீந்தினாலும் மரணம்தான் என்று அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். மியாமி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செங்கடலின் அடிப்பகுதியில் உள்ள ஒரு அபாயகரமான கொடிய குளத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் யார் நீந்தினாலும் மரணம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் படி, நீருக்கடியில் ரிமோட் மூலம் இயக்கப்படும் வாகனம் மூலம் மேற்பரப்பில் இருந்து கடலுக்கு அடியில் 1.7 கிலோமீட்டர் தொலைவில் உப்புநீர் குளம் … Read more

கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவன்.. காதலர்களை ஏவி கொலை செய்த மனைவி..!

கள்ளகாதலை தட்டி கேட்ட கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், சிங்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைகனி.  இவருக்கு சாந்தி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற நேரத்தில் சாந்தியின் சகோதரர் முறையுள்ள பார்த்திபன், கலைமோகன் என்ற இருவருடன் முறையற்ற தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த பிச்சைகனிக்கு விஷயம் தெரியவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சாந்தி கள்ளகாதலர்களுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்டுள்ளார். … Read more

காதல் திருமணம் செய்த மகளையும் காதலனையும் வெட்டிக் கொன்ற தந்தை..! குடிகார காதலுக்கு எதிர்ப்பு..!

காதல் திருமணம் செய்த மகளையும், மகளின் காதல் கணவனையும் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் ரேஸ்மா. 20 வயதான இவர் கோவில்பட்டி கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ரேஸ்மாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த உறவுக்கார இளைஞர் மாணிக்கராஜ் என்பவருக்கும் காதல் இருந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வெளி நாட்டில் இருந்து திரும்பி பணம் … Read more

டி-23 புலியை உயிருடன் பிடிக்க முக்கிய பங்காற்றிய 3 காவலர்களுக்கு சிறந்த களப்பணியாளர் விருது

சென்னை: டி-23 புலியை உயிருடன் பிடிப்பதில் முக்கியப் பங்காற்றிய 3 காவலர்கள், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சிறந்த களப்பணியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுற்றிவந்த 13 வயதான டி-23 புலி நான்கு பேரை வேட்டையாடிக் கொன்றது. அதேபோல் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியது. 20 நாட்களுக்கு மேலாக வனத்துறையினர் போராடி இந்தப் புலியை உயிருடன் பிடித்தனர். இந்தப் பணியின்போது தினமும் காலையில் … Read more

`நீ ஓட்டு பஸ்ஸை…’- ஆட்டோ ஓட்டுநரிடம் பேருந்தை கொடுத்த அரசு ஓட்டுநர்! இறுதியில் ட்விஸ்ட்!

தேனியில் அரசு பேருந்தை லுங்கி அணிந்தவாறு ஆட்டோ ஓட்டுனரொருவர் இயக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பேருந்து ஓட்டுனரை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தேனியில் பழனிச்செட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பனிமனையில் இருந்து, தேனி வீரபாண்டியில் இயங்கும் அரசு சட்டக் கல்லூரிக்கு தினமும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதில் கடந்த ஜூலை 11ம் தேதி தேனி டூ சட்டக்கல்லூரி அரசு பேருந்தை அரசு ஓட்டுநர் பாண்டி விஸ்வநாத் என்பவர் இயக்கச் சென்றுள்ளார். பாண்டி … Read more

சுகர் பாதித்த பெண்களுக்கு செக்ஸில் திருப்தி இன்மை: ஆய்வு கூறுவது என்ன?

நீரிழிவு என்பது உடலில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காததால் ஏற்படுகிறது. பொதுவாக இந்த நோய் சிறியவர்கள், நடுத்தரம் மற்றும் முதியவர்கள் என வித்தியாசம் பார்ப்பதில்லை.எனினும் பெண்களை காட்டிலும் ஆண்களே பெருமளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் எனக் ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், நீரிழிவு பாதிக்கப்பட்ட பெண்கள் உடலுறவில் முழு திருப்தியை எட்ட முடியாதாம். அதாவது அவர்கள் உடலுறவு கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களால் இயல்பாக ஒரு தம்பதி அனுபவிக்கும் இன்பத்தை முழுமையாக … Read more

திருவள்ளூர் || 12ம் வகுப்பு மாணவி தற்கொலை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சரளா என்ற மாணவி 12ம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இதனை அடுத்து,     காலை உணவு சாப்பிட சென்ற அவர் திரும்பி அறைக்கு சென்றுள்ளர. நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் அறைக்கு … Read more