தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தள்ளுமுள்ளு

தூத்துக்குடியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி பிரச்சனை காரணமாக இருதரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கூட்டத்தின் போது கட்சியை பலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மகிளா காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவரும், மாநில பொதுக் குழு உறுப்பினருமான முத்துவிஜயா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மாநகராட்சி கவுன்சிலர் குறுக்கிட்டு பேசியதால் இருத்தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. Source link

நிரந்தர அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கும் ரிப்பன் மாளிகை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தொன்மை வாய்ந்த ரிப்பன் மாளிகை இரவில் வண்ணமயமாக ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின் விளக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை 109 ஆண்டு கால பழமையான கட்டடம். தொன்மை வாய்ந்த ரிப்பன் மாளிகையில், சுதந்திர மற்றும் குடியரசு தினங்களின்போது, தேசிய கொடியை குறிக்கும் வகையிலான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். அதேபோல், மார்பக புற்றுநோய் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இளஞ்சிவப்பு நிறத்தில் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். ரிப்பன் … Read more

கோயில் திருவிழா: தேவராட்டத்தில் பங்கேற்ற உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரம் அருகே கோயில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெயில் நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த விழாவில் கோயிலைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி ஏழு தினங்கள் சிறப்பாக வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோயில் திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்றிரவு திடீரென கோயிலுக்கு வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி … Read more

21 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஆளுநரிடம் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்

Stalin urged Governor RN Ravi to grant assent to 21 bills: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வலியுறுத்தினார். தமிழ்நாடு … Read more

அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்.! பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கிய திமுக உடன்பிறப்புகள்.!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திருவண்ணாமலையில் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, அம்மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அவரின் அந்த மனுவில், “திருவண்ணாமலை, வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவரால் 1992-ம் ஆண்டு 92.5 அடி நிலம் விற்கப்பட்டது. அந்த நிலத்தின் அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து, … Read more

தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு.. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்!

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தமைக்கு ஆளுநரிடம் முதலமைச்சர் நன்றி தெரிவித்ததாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. … Read more

தி.மலையில் கருணாநிதி சிலைக்கான இடைக்காலத் தடை தொடர்கிறது; வழக்கு ஜூன் 6-க்கு தள்ளிவைப்பு

சென்னை: திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் … Read more

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க தடையை நீக்க வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு

திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையும் மாநில நெடுஞ்சாலையும் இணையும் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க மாவட்ட திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்த பகுதியில் சிலை வைப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பக்தர் கார்த்திக் என்பவர் சிலை வைக்க … Read more

உயிரோடு இருப்போமா? திருச்சி முகாமில் கதறும் ஈழத் தமிழர்கள்

Sri lanka Tamil refugees hunger strike for release request in Trichy: திருச்சி சிறை வளாகத்திலுள்ள அகதிகள் முகாமில் வெளிநாட்டிலிருந்து முறையாக பாஸ்போர்ட் விசா மூலம் இந்தியாவுக்குள் வராமல் நேரடியாக வந்தவர்கள், காலாவதியான பாஸ்போர்ட் உள்ளவர்கள் என 84 இலங்கை தமிழர்கள் உட்பட பல்கேரியா, சூடான், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 பேர் திருச்சி அகதிகள் முகாமில் தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் இலங்கை அகதிகள் தங்களை விடுவிக்கக் கோரி துாக்கமாத்திரை … Read more

திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் கொண்டு போய் சேர்க்க வேண்டும் – அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் முக ஸ்டாலின்.!

சென்னை தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு அரசுத்துறை வாரியாக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இன்று 2-வது நாளாகவும் அரசுத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “நேற்றையதினம் இதேபோன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 16 துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.  ஆய்வின் இறுதியில், அரசுச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் எவ்வாறு அரசின் திட்டங்களை வடிவமைத்து, செயலாக்கத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று விரிவாக எடுத்துக் கூறியிருந்தேன். இன்று ஆய்வுக்கு எடுத்துக் … Read more