போலீசாரின் விசாரணைக்கு பயந்து கல்லூரி இளைஞர் உள்பட 4 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி

உதகையில், போலீசாரின் விசாரணைக்கு பயந்து கல்லூரி இளைஞர் உள்பட 4 பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். உடல்நலக்குறைவு காரணமாக இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற பானுப்பிரியாவுக்கு சிகிச்சையளிக்க தாமதமான நிலையில், அதுகுறித்து செவிலியருடன் பெண்ணின் உறவினர்கள் 4 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. செவிலியர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்களை விசாரணைக்கு அழைத்த நிலையில், மன உளைச்சல் அடைந்த 4 பேரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். காவல்துறையினர் இரு … Read more

“எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” – டி.ராஜேந்தர் உருக்கம்

சென்னை: உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், “எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இந்த இடைப்பட்ட நாளில் நான் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், என்னைப் பற்றிய, என் மகன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த நிலைக்கு இன்று நிற்கிறேன் … Read more

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை – கணவர், மாமியாருக்கு 7 ஆண்டுகள் சிறை

மதுரை அருகே வரதட்சணை கொடுமையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கணவர் மற்றும் மாமியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கும் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த பிரீத்தா என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தையுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் ராஜசேகர், நகை மற்றும் பணம் வரதட்சணையாக கேட்டு மனைவி பிரித்தாவை … Read more

நான் அமெரிக்க விவசாயி… ட்விட்டரில் கெத்து காட்டும் நடிகர் நெப்போலியன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நெப்போலியன். 1963-ம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவர் பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகப்படத்திலேயே இளம் நடிகரான நெப்போலியன் வயதான தோற்றத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். மேலும் புது நெல்லு புது நாத்து படத்தை பார்த்த இயக்குநர் இமயம் பாலச்சந்தர் நெப்போலியன் வயதான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளதாக பெரிய பாராட்டுக்களை தெரிவித்ததாக நெப்போலியன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். … Read more

குடிபோதையில் அடிக்க வந்த அப்பாவுக்கு பயந்து தோட்டத்துக்குள் ஓடிய 4 வயது பெண் குழந்தை.! பாம்பு கடித்து உயிரிழந்த சோகம்.!

குடிபோதையில் அடிக்க வந்த அப்பாவுக்கு பயந்து தோட்டத்துக்குள் ஓடிய 4 வயது பெண் குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுரேந்திரன். இவர் குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை அடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பயந்து அருகில் இருந்த ரப்பர் தோட்டத்திற்குள் குழந்தைகள் ஓடிய நிலையில் 4 வயதான சுஷ்விஷாவை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த குழந்தை அழுதுகொண்டே கூறியதால் அக்கம்பக்கத்தினர் சுஷ்விஷாவை, ஆசாரிபள்ளம் … Read more

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை வைப்பதற்கான தடை நீங்கியது..

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிட்ட நிலத்துக்கான பட்டா சட்டவிரோதமாக பெறப்பட்டுள்ளதால் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்படவில்லை என்றும் பட்டா நிலத்தில் சிலை அமைப்பதை ஆக்கிரமிப்பு என கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து, பட்டாவை எதிர்த்து வழக்கு … Read more

“காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை… கும்பகோணம் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” – மநீம

சென்னை: “வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச் சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் … Read more

ஆடு திருட முயன்றவரை ரத்தம் வர காலால் எட்டி உதைத்த சிறப்பு உதவி ஆய்வாளர்!

சத்தியமங்கலம் அருகே ஆடு திருட முயன்ற நபரை பொதுமக்கள் முன்னிலையில் அவரை தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். இவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை, கடந்த ஜூன் இரண்டாம் தேதி திருப்பூர் மாவட்டம் கொட்டகாட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகளை திருட முயன்றனர். அங்கிருந்த மக்கள் அந்த கும்பலைச் சேர்ந்த, குமார் என்பவரை பிடித்து … Read more

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; 52 பணியிடங்கள்; டிகிரி, பி.இ, பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Anna University recruitment 2022 invites application for various posts: அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட மேலாளர், இளநிலை மென்பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 52 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2022 Project Manager காலியிடங்களின் எண்ணிக்கை – 1 கல்வித் தகுதி : B.E/B. Tech/MCA/M. Tech/M.E/MS in Computer Science/Information Technology. மேலும் 3-4 வருட பணி அனுபவம் அவசியம். … Read more

#விழுப்புரம்.! குடிபோதையில் தகராறு செய்த கணவனின் முகத்தில் சூடான ரசத்தை ஊற்றிய மனைவி.!

விழுப்புரம் மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவனின் முகத்தில் மனைவி சூடான ரசத்தை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி குப்பம்மாள். நடராஜன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி குப்பம்மாளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் குறித்து குப்பம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குப்பம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் இரண்டு முறை நடராஜனை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதையடுத்து நேற்று … Read more