லால்குடி தேரோட்டம்; தாழ்த்தப்பட்டோர் உரிமை மறுப்பு: அதிகாரிகளே தேரை இழுத்தனர்

க. சண்முகவடிவேல், திருச்சி திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த ரெட்டிமாங்குடி கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் திருவிழா கடந்த 5 ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டு விழா நடைபெற்றது. பிறகு 6ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை இரவு மண்டகப்படியும் கடந்த 12ஆம் தேதி பொங்கல் வைத்து இரவு குதிரை வாகனத்தில் செல்லி அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து ஜூலை 13-ம் தேதி நேற்று காலை 11.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும், கிடா வெட்டுதலும் நடைபெற்றது. … Read more

புதுச்சேரி – விழுப்புரம் நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகரிப்பு: புறவழிச்சாலை பணியை தொடங்குவது எப்போது?

புதுச்சேரி: புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் இந்திராகாந்தி சிலையிலிருந்து மூலக்குளம் வரை விபத்துகள் நாள்தோறும் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அச்சத்திலுள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டிய புறவழிச்சாலை பணியை தொடங்காமல் புதுச்சேரி அரசு காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்குநாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. ஆனால் சாலைகள் விரிவாக்கம், புதியதாக உருவாக்குவது உள்ளிட்டஏதும் நடைபெறவில்லை. போக்குவரத்து போலீஸார் யாரும் இச்சாலையில் பணியில் இருப்பதும் இல்லை. அத்தியாவசிய பகுதிகளிலும், வாய்ப்புகள் உள்ள பகுதிகளிலும்கூட சாலை விரிவாக்கமோ, புதியதாக … Read more

இரவில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – நீலகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தொடர் மழை காரணமாக  கூடலூர் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில தினங்கள் மாவட்டத்தில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பகல் நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம்  என்றும் காற்றின் தாக்கம் இருக்கும் என்பதால் மரங்கள் தடுப்பு சுவர்கள் அருகில் … Read more

#தமிழகம் || மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவிகள்.! தமிழக அரசிடம் விசாரணை கோரும் பாமக தலைவர்.!

சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவிகளின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்வலியுறுத்தியுள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கனியாமூர் தனியார் பள்ளியில் … Read more

மேட்டூர் அணை நீர் மட்டம் 111.30 அடியாக உயர்வு: டெல்டா பாசனத்துக்கு 20,000 கன அடி நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர் மட்டம் 111.30 அடியாக உயர்ந்துள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. டெல்டா பாசனத்துக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், காவிர ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 98,208 கன அடியாக இருந்த நீர் வரத்து, … Read more

ஆங்கிலேயர்கள் உப்புக்கு வரி; தற்போது அரிசிக்கு ஜி.எஸ்.டியா? – உடனடியாக நீக்க கோரிக்கை!

அரிசி மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க கோரி, தமிழ்நாட்டில் வரும் 16 ஆம் தேதி அரிசி ஆலைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் இதனை தெரிவித்துள்ளனர். “தமிழகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது. வருடத்திற்கு ஒரு கோடி டன் நெல்லை அரைத்து அரிசியாக தயாரித்து வருகின்றோம். மத்திய அரசு உடனடியாக அரிசி மீதான 5% ஜிஎஸ்டி வரியை நீக்காவிட்டால் அடுத்த … Read more

ஓபிஎஸ் மகன்கள் உட்பட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: ஓபிஎஸ் மகன்கள் உட்பட் 18 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.பிராபகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், ஓபிஎஸ் மகன்கள் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நீக்கப்பட்டவர்கள் விவரம்: முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன் முன்னாள் எம்.பி கோபால கிருஷ்ணன் திருச்சி மாநகர் … Read more

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை: இடைக்கால தடையை நீட்டித்தது உயர்நீதிமன்றம்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்குக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் … Read more

டெல்லி முன்னாள் நீதிபதி உள்பட மூவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுப்பு!

நுபுர் சர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை விமர்சித்த டெல்லி முன்னாள் நீதிபதி உள்பட மூவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அனுமதி மறுத்துவிட்டார்.தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது.அவருக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்றன. அவர் மீது நாடு முழுக்க பல்வேறு இடங்களில் வழக்குகள் பதியப்பட்டன. இது தொடர்பான வழக்கை ஜூலை … Read more

#BigBreaking || அதிமுக மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம்… அதிமுக தலைமை அதிரடி.!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 18 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, சற்று முன்பு அதிமுகவின் தலைமை எடப்பாடி கே பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இந்த 18 பேர்களும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், தஞ்சை வடக்கு … Read more