காவலர்களின் தனிப்பட்ட வாகனத்தில் ‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது – டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: காவல் துறை அலுவலக பயன்பாட்டுக்கான வாகனங்களில் மட்டுமே ‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். காவலர்கள் தங்கள் தனிப்பட்டவாகனங்களில் அவ்வாறு ஒட்டியிருந்தால் உடனே அதை அகற்றவேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 14-ம் தேதி ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. ‘காவல் துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களின் கண்ணாடிகளிலும் கருப்பு ஃபிலிம் ஒட்டக் கூடாது. காவலர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனத்தில் ‘போலீஸ்’ என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் … Read more

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – ஐகோர்ட் கிளை உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டிருந்தார். இப்பதிவு அவதூறு பரப்புவதாக இருக்கிறது எனக் கூறி சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதி சுவாமிநாதன் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கடுமையான விமர்சனங்களை ஏற்கலாம் என்றும் ஆனால் அவதூறுகளை ஏற்க முடியாது என்றும் தமது பல உத்தரவுகளை ஏற்க … Read more

கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட பள்ளி மீட்பு நடவடிக்கை.. புதிய அதிகாரி நியமனம்.!!

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி பள்ளி விடுதியில் தங்கி இருந்து பன்னிரண்டாம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.  ஆனால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவி தாயார் புகார் தெரிவித்து இருந்தார். இதனால், பொதுமக்கள் சாலை மறியல் … Read more

சைடிஷ் வாங்கித் தராததால் ஆத்திரம்… ரவுடி கொலை!!

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அடுத்த தொட்டிக்கலை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வேலு, அப்பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தனது நண்பர்களான செல்வா, கோகுல், ஸ்டாலின் ஆகியோருடன் ஒன்றாக மது அருந்தியுள்ளார். அப்போது மூவரும் சேர்ந்து ரவுடி வேலுவிடம் அருகில் உள்ள கடையில் சைடிஷ் போட்டி தரக்கோரி கேட்டதாக கூறப்படுகிறது. வேலு வாங்கித்தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவரை மூவரும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால்,  ஆத்திரம் அடைந்து வேலு அவர்களை அடிக்க தொடங்கியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த நண்பர்கள் மூவரும் சேர்ந்து, வேலுவை … Read more

13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று (ஜூலை 20) இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதியில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதி லேசான மழை பெய்யக்கூடும். Source … Read more

ஜீன்ஸ் அணிய தடை விதித்த கணவன் கத்தியால் குத்திக் கொலை!!

திருமணத்திற்கு பிறகு ஜீன்ஸ் அணிய தடை விதித்த கணவன், மனைவியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியில் உள்ள ஜோர்பிதா என்ற கிராமத்தைச் சேர்ந்த கர்ணேஷ்வர் டுடு என்ற நபருக்கு புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவரும் அண்மையில் கோபால்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு சென்றனர். கண்காட்சியை சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்பிய நிலையில், மனைவி புஷ்பாவின் உடை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருமணம் … Read more

மின்கட்டண உயர்வை கண்டித்து 23-ம் தேதி பாஜக போராட்டம்

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது. முதலில் சொத்து வரி உயர்வு, இப்போது மின் கட்டண உயர்வு. மத்திய அரசு, மாநில மின் பகிர்மான மையங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர ரூ.3.03 லட்சம் கோடி செலவிடவுள்ளது. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்துக்கு ரூ.35,981 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் … Read more

‘உதயநிதியின் பணிகள்; தந்தையாக அல்லாமல் தலைவராக மகிழ்கிறேன்’: ஸ்டாலின் கடிதம்

திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திமுக இளைஞரணியை உதயநிதி சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் அதைக் கண்டு தந்தையாக மட்டுமல்லாமல் தலைவராக மகிழ்கிறேன் என்று எழுதியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கழகம் வில்லென்றால் இளைஞரணி கணை என்றார் கலைஞர்! 42 ஆண்டுகள் கடந்தும் அக்கணையின் வேகமும் வலிமையும் கூர்மையும் குறையவில்லை! மாறாகக் கூடிக்கொண்டே போகிறது. காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ப கடமையாற்றி, கழகத்துக்கு இளைஞரணி துணைநிற்க வேண்டும்!எதையும் தாங்கும் … Read more

மீண்டும் பரபரப்பு.. சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. தமிழக அரசுக்கு பறந்த கடிதம்.!!

கடந்த 2016 ஆம் ஆண்டு குட்கா ஆலை அதிபர் மாதவராவின் குடோனில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் சிக்கிய டைரியில், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது.  இது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீரென சோதனை ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை நொளம்பூரிலுள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோன்று … Read more

மனைவி என்று நினைத்து மகனைக் கொன்ற தந்தை!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவர் செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகன் அர்ஜுன் (14) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான்.  குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு … Read more