அரசுப் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை; மாணவர்கள் அவதி

Government schools waiting for textbooks supply: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நோட்டு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதையும் படியுங்கள்: பாலிடெக்னிக் … Read more

1 முதல் 5-ம் வகுப்பு வரை.. காலை 8.45 மணிக்குள்.. அரசு உத்தரவு..!

தமிழகத்தில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தொடங்கிவிட்டது. அதன்படி, காலை 5.30 முதல் 7. 45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும், காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் குழந்தைகளுக்கு உணவு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 15 மாவட்டங்களில் உள்ள 292 … Read more

நீலகிரியில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு

உதகை: நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிள்ள அப்பர்பவானி, காட்டு குப்பை, பார்சன்ஸ்வேலி, மரவ கண்டி, பைக்காரா உட்பட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், குந்தா மற்றும் பைக்காரா மின் வட்டத்திற்கு உட்பட்ட அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பைக்காரா, பார்சன்ஸ்வேலி, மாயார் ஆகிய அணைகளுக்கு, இன்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, … Read more

`வெட்கக்கேடு' டூ `பாலியல் தொல்லை' – நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் லிஸ்ட்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளாக இருப்பவை: `வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் தெரிவிக்க கூடாது என்பதற்கு, … Read more

மலைப் பூண்டு விளைச்சலும் இல்லை; விலையும் இல்லை: கொடைக்கானல் விவசாயிகள் வேதனை

கொடைக்கானலில் மருத்துவக் குணம் வாய்ந்த, ‘புவிசார் குறியீடு’ பெற்ற மலைப் பூண்டு போதிய விளைச்சலும் இன்றி, விலையும் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கொடைக்கானலில் கிளாவரை, பூண்டி, கவுஞ்சி, மன்னவனூர், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் சிங்கப்பூர், மேட்டுப்பாளையம் ரக மலைப் பூண்டு சாகுபடி நடைபெறுகிறது. இதில் சிங்கப்பூர் ரக பூண்டுக்கு மருத்துவக் குணம் இருப்பதால், புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பூண்டு சாம்பல் நிறத்தில் இருக்கும். காரத்தன்மையும் அதிகம். 6 முதல் … Read more

கட்டப்பட்ட 14 ஆண்டுகளில் இடிந்துவிழுந்த மருத்துவமனை மேற்கூரை – அச்சத்தில் நோயாளிகள்

வேதாரண்யத்தில் அரசு மருத்துவமனை உள்ள பிரசவ வார்டு கட்டட மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் மருத்துவமனைக்கு பிரசவம் பார்க்க வந்த பெண்ணின் தாயார் காயமடைந்தார். வேதாரண்யத்தில் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை கடந்த ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. வேதாரண்யம் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு சிகிச்சைபெற்று செல்கின்றனர். தாலுகாவில் பிரசவம் பார்க்கும் அளவிற்கு உள்ள ஒரே அரசு மருத்துவமனை என்பதால் இந்த மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த … Read more

‘யார் எட்டப்பர்கள்?’: இ.பி.எஸ்- சசிகலா திடீர் யுத்தம்

யார் எட்டப்பர் என்பதை தொண்டர்களும் மக்களும் முடிவு செய்வார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் பெரிதாக வெடித்தது. இந்நிலையில் ஜீன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்டது என்று கூறி பன்னீர் செல்வம் புறக்கணித்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை ஓபிஎஸ் நாடியபோது, அவர் தோல்வியை தழுவினார். இதனால் அவர் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்தார். இதனால் … Read more

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வழக்கில் இன்று விசாரணை

அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக்  கோரி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த தனித் தனி மனுக்கள்  சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன. சீல் வைத்த உத்தரவுக்கு தடை விதித்து, கட்சி அலுவலகத்தை  ஒப்படைக்கக் கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும், சீல் வைத்த … Read more

வலுவடைந்து வரும் பருவ மழையால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிய தேக்கடி

வலுவடைந்து வரும் பருவ மழையால், தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் குறைந்தது. இதனால் ஏராளமான ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சுற்றுலா சார்ந்த தொழில்களில் தினமும் ரூ.10 லட்சம் அளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழக – கேரள எல்லையில் குமுளி அமைந்துள்ளது. கேரள வனத்துறையின் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் தேக்கடி படகுப் போக்குவரத்து, ஜீப், யானை சவாரி, பசுமை நடை என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஏராளமான … Read more

போதையில் ஆட்டோ ஓட்டி கால்வாயில் கவிழ்த்த டிரைவர்.. கோவையில் மூவருக்கு படுகாயம்!

கோவை துடியலூரில் மதுபோதையில் அதிவேகத்தில் வந்த ஆட்டோ மோதியதில், நடந்து சென்ற பள்ளி மாணவி உட்பட 3 பேர் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்தனர். கோவை துடியலூர் காவல் நிலையம் அருகே மது போதையில் அதிவேகமாக ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர், பள்ளி மாணவி உட்பட 3 பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்திருக்கிறார். இந்த விபத்தில் நடந்து சென்ற மாணவி உட்பட 3 பேர் கால்வாயில் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநரும் அதே கால்வாயில் விழுந்தார். இதைப் பார்த்த … Read more