அ.தி.மு.க நாளிதழில் ஓ.பி.எஸ் பெயர் நீக்கம்: நிறுவனராக இ.பி.எஸ் மட்டும் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமைப் பதவிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையேயான மோதல் ஓவ்வொரு நாளும் உச்சகட்டத்தை அடைந்துவரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டிருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை பேச்சு எழுந்தது … Read more

இதெல்லாம் வெட்கக் கேடானது – கொந்தளிப்பில் டிடிவி தினகரன் போட்ட டிவிட்.!

தமிழகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய லாக்அப் மரணம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இத்தகைய லாக்அப் மரணங்களைத் தடுக்க காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்?  ஒவ்வொரு முறை … Read more

அறிவித்தபடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கவில்லை – எல்.முருகன்.!

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது போன்ற வாக்குறுதிகள் ஏதும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், அடித்தட்டு மக்களுக்காக பல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியதாக கூறினார்.  Source link

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டம்: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் குறித்து நந்தனத்தில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பல்வேறு பயணிகளின் வசதிகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் குறித்து நந்தனத்தில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள … Read more

அடுத்த 2 நாட்களுக்கு மழை எப்படி இருக்கும்? – வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்

தமிழகம், புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் … Read more

திங்கட்கிழமை 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ‘செக்’ செய்வது எப்படி?

தமிழகத்தில், 2022 மே மாதத்தில் நடைபெற்ற 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 27) வெளியாகிறது. அதனால், தேர்வு எழுதிய மாணவர்கள் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளலாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுஎழுதினர். இந்த பொதுத்தேர்வு முடிவுகள் நாளை திங்கட்கிழமை (ஜூன் 27) வெளியாகிறது என்று தேர்வுத் … Read more

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிநியமன முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்.!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், “அரசுப்பள்ளி ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தின் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர் பணிக்காக இரவு பகல் பாராது முயற்சித்துக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் அரசுப்பணி கனவினை கானல் நீராக்கும் திமுக அரசின் இக்கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு மாதம் வெறும் ரூ 7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை … Read more

34  உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்: அதிமுக வேட்பாளர்களின் படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? 

சென்னை: 34 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜூன் 30ம் தேதிக்குள் இந்த படிவங்களை சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 30 ம் தேதி பல்வேறு காரணங்களுக்காக காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாவட்ட ஊராட்சி … Read more

’சரக்கடிச்சு தேடிக்காத நரகத்த..’ : போதைப்பொருளை ஒழிக்க கானா பாடல் தயாரித்த சென்னை போலீஸ்!

போதைப்பொருள் ஒழிக்க “கானா” பாடல் மூலம் விழிப்புணர்வை கையில் எடுத்துள்ள சென்னை காவல்துறை. சென்னையில் போதைபொருள் விற்பனையை தடுக்கவும், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் சென்னை காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிப்பதற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆபரேஷன் கஞ்சா வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்கென குழு ஆரம்பித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பிடிபட்ட 2 கோடி மதிப்பிலான … Read more

தமிழக அரசு அதிரடி: பண இழப்பு ஏற்படுத்திய கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சொத்து ஏலம்!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள தச்சங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதால், சங்க முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 7 பேரின் அசையா சொத்துகளை ஏலம் விட கூட்டுறவுத் துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிராம அளவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வைப்புக் கணக்கு, நிரந்தர வைப்பு, நகைக் கடன் மற்றும் பயிர்க் கடன் உள்ளிட்ட பிற கடன்கள் வழங்குதல், விவசாயிகளுக்குத் தேவையான உரம், பூச்சிக் கொல்லி … Read more