8 மாதங்களாக மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது நிறுத்திவைப்பு

சிவகங்கை: ​மாற்​றுத் திற​னாளி உள்​ளிட்​டோருக்​கான உதவித்​தொகைக்கு ஒப்​புதல் கொடுப்​பது கடந்த 8 மாதங்​களாக நிறுத்​திவைக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் வரு​வாய்த் துறை​யின் சமூக பாது​காப்​புத் திட்​டம் மூலம் மாற்​றுத் திற​னாளி​கள், முதி​யோர், கணவ​ரால் கைவிடப்​பட்​டோர், முதிர்​கன்​னிகள் ஆகியோ​ருக்கு உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. தகு​தி​ உள்​ளோர் ஆன்​லைன் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும். 2023 செப்​டம்​பரில் இருந்து மாதந்​தோறும் மாற்​றுத் திறனாளிகளுக்கு ரூ.1,500-ம், மற்​றவர்​களுக்கு ரூ.1,200-ம் உதவித்​தொகை​யாக வழங்​கப்​படு​கிறது. கடந்த 2 ஆண்​டு​களாக விண்ணப்​பித்​தவர்​களுக்​கு, முதலில் உதவித்​தொகை பெறு​வதற்​கான அனு​மதி ஆணை மட்​டும்வழங்​கப்​படு​கிறது. … Read more

தொடர் விடுமுறைக்காக சென்னையிலிருந்து 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை: சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகளில் சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். போக்குவரத்துத் துறை சார்பில் வார இறுதி நாள் மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பட்டன. அதன்படி, நேற்று அதிகாலை 3 மணி வரை வழக்க மாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும் 1,160 சிறப்புப் பேருந்துகளும் என 3,252 பேருந்துகள் இயக்கப்பட்டன. … Read more

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

புதுடெல்லி/ சென்னை: நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க, பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது எம்.ஐ-16 ரக ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. அனைத்து ஹெலிகாப்டர்களிலும் ‘ஆபரேஷன் … Read more

பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் மொகிதீனுக்கு தகை​சால் தமிழர் விருதை முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். பல்​வேறு துறை​களில் சாதனை புரிந்​தவர்​களுக்கு அப்​துல் கலாம், கல்​பனா சாவ்லா விருதுகளை​யும் வழங்​கி​னார். சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், இந்த ஆண்​டுக்​கான விருதுகள், சிறப்பு பரிசுகளை முதல்​வர் ஸ்டா​லின் வழங்​கி​னார். அந்த வகை​யில், ‘தகை​சால் தமிழர்’ விருதை இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் பேராசிரியர் கே.எம்​.​காதர் … Read more

மலைப்பகுதிகளில் விடியல் பேருந்து பயணம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்  என்ன?

சென்னை: கட்​ட​ணமில்லா விடியல் பேருந்து பயணத்​திட்​டம், மலைப் பகு​தி​களில் உள்ள மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் விரிவுபடுத்​தப்​படும் என்​பது உட்பட 9 அறி​விப்​பு​களை சுதந்​திர தின உரை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டார். நாட்​டின் 79-வது சுதந்​திர தினத்​தையொட்​டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் தேசி​யக் கொடியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஏற்​றி​வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: நாட்​டுக்​காக உழைத்த தியாகி​களைப் போற்​றும் அரசே திமுக அரசு. சுதந்​திரப் போராட்ட வீரர்​களின் நினை​விடங்​களில் ஒலி-ஒளி காட்​சிகள் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. … Read more

சென்னை மக்களே… நாளை இந்த பகுதிகளில் மின்தடை – நோட் பண்ணுங்க!

Chennai Power Outage: சென்னையில் நாளை (ஆகஸ்ட் 16) வெவ்வேறு பகுதிகளில் பராமரிப்பு காரணமாக முழு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களை என்பதை இங்கு காணலாம்.

பிஹார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் தொடங்கியது. 4 நாள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதை, திருப்பூரில் இருந்து வந்த தியாகச்சுடர் பெறுதல், தியாகிகளுக்கு நினைவஞ்சலி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஏற்றி, மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். மாநாடு தொடங்கியதும் … Read more

அண்ணா சாலையில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் – ஆக.17 முதல்… காவல்துறை அறிவிப்பு

Anna Salai Traffic Diversion: சென்னை தேனாம்பேட்டையில் மேம்பாலக் கட்டுமானப் பணியை எளிதாக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்

சென்னை: பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.15) மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தஞ்சாவூரில், 16.2.1945-ல் இலக்குமிராகவன் – அலமேலு தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர் இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை முகவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், அண்ணன்களின் அரவணைப்பிலேயே … Read more

வெற்று விளம்பர ஆட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தேவையில்லை: இபிஎஸ் கண்டனம்

சென்னை: மற்றவர்களைப் பார்த்து, காப்பியடித்து, வெட்டி விளம்பரம் செய்யும் வெற்று விளம்பர ஆட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தேவையில்லை என்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் நிதி அமைச்சர், 2024-ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி அன்று சமர்ப்பித்த 2024- 2025ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், பக்கம் 25ல் ‘தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து, அதுபற்றிய … Read more