சென்னை: தங்கக் காசுகள் எனக் கூறி பித்தளை காசுகளை விற்று ரூ.30 லட்சம் மோசடி

(கோப்பு புகைப்படம்) தங்க காசுகள் எனக்கூறி பித்தளை காசுகள் கொடுத்து, 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டை தங்கசாலைப் பகுதியை சேர்ந்தவர் ஜீத்மல் (74). இவர் சவுகார்ப்பேட்டை காசி செட்டி தெருவில் பை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு ஜீத்மலுக்கு பழக்கமான நபர் ஒருவர் கடையில் அணுகி, தன்னிடம் ஒரு கிராம் எடையுள்ள 4 தங்கக் காசுகள் இருப்பதாகவும், அதை வைத்து வெறும் … Read more

குரங்கு அம்மை; விமான பயணிகளை கண்காணிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

Health department order to vigil international passenger on monkey box prevention: குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகளை கண்காணிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு மனிதருக்கு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, … Read more

#தமிழகம் || காதலிக்க மறுத்த சிறுமியை 10 முறை கத்தியால் குத்திய நாடக காதலன் தப்பி ஓட்டம்.! வெளியான பரபரப்பு தகவல்.!

திருச்சி, மணப்பாறை அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த, மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலின்படி, அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி கீழ்கண்ட செய்தி சொல்லப்படுகிறது, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து … Read more

கோமாவில் நித்தி மாமா.. ரஞ்சிதா சொல்வது என்ன..? சமாதின்னா ஆரோக்கியமாம்..!

பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக இருக்கும்  நித்தியானந்தா இறந்து விட்டதாகவும், சமாதியில் இருப்பதாகவும் கோமாவில் இருப்பதாகவும் வேறு வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் நித்தியின் பெயரில்  நித்தி பெயரில் மீண்டும் ஒரு அறிக்கை  முக நூலில் வெளியாகி உள்ளது. பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றும் ராஜமாதாவாக ரஞ்சிதா மாறிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… ஒரு காலத்தில் நான் தான் கடவுள் என வித விதமான கெட்டபுகளில் கிராபிக்ஸ் உதவியுடன் … Read more

வழக்குப் பதிவு செய்யாத எஸ்ஐ-க்கு மனித உரிமை ஆணையம் விதித்த அபராதத்துக்கு ஐகோர்ட் தடை

மதுரை: வழக்குப் பதிவு செய்யாததற்காக சார்பு ஆய்வாளருக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. கரூர் டவுன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜி.நாகராஜன். இவர் வாங்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது வழக்கறிஞர் கனகராஜ் என்பவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக மாதவன் என்பவர் புகார் அளித்தார். விசாரணைக்கு பின் புகாரில் உண்மை இல்லை என்று கூறி முடிக்கப்பட்டது. இந்நிலையில், மாதவன் மாநில மனித … Read more

‘நிலக்கரி கையிருப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்’ – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தை விட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாகவே உள்ளது என்றும், அதை மறந்து, மறைத்து எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன என்றும் கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் … Read more

அமைச்சர் ஆக மாட்டேன் என உதயநிதி உறுதி கூறுவாரா? சீமான் கேள்வி

Seeman said Udhayanidhi Stalin going to minister soon: உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக மாட்டேன் என உறுதியாக சொல்வாரா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற தி.மு.க செயற்குழுவில் தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து, இது போன்ற … Read more

கணவனுடன் பழகிய பெண்… கொடூரமாக பழிவாங்கிய மனைவி.. தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கணவனுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை ஆட்களை வைத்து கூட்டு பாலியல்வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கோண்டாபூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவரது கணவர் சிவில் சர்வீஸ் தேர்விற்காக தயாராகி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இந்தத் தேர்வுக்கு தயாராகி வந்தார்.  இதனால், இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. இதனை அறிந்த காயத்திரி இருவரையும் எச்சரித்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆயினும் அவரது … Read more

மன்னார்குடி அருகே குளிக்க சென்ற போது குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி.!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தொடர்பாக வடுவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரக்கோட்டை கிராமத்தில் உள்ள பழமையான குளத்தில் அக்கிராமத்தை சேர்ந்த 6 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, குளத்தின் ஒருகரையில் இருந்து மற்றொரு கரைக்கு நீந்தி சென்றபோது சிறுவர்கள் டேனியல் , மகேந்திரன் ஆகியோர் நீரில் முழ்கியதாக கூறப்படுகிறது. இதில், இருவரும் மூச்சு திணறி பரிதாபமாக உயிரழந்த நிலையில் தகவலறிந்து வந்த போலீசார் சிறுவர்களின் … Read more

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெயரில் பணம் பறிப்பு: கல் குவாரி அதிபர்கள் குற்றச்சாட்டு

சேலம்: ”சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் பலர் குவாரி அதிபர்களை மிரட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரசர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரசர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி கூறியது: ”திருநெல்வேலி கல்குவாரி … Read more