தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! 

இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் சந்தித்து உள்ளார். இன்று மாலை நடந்த இந்த சந்திப்பு குறித்து பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் தமிழக ஆளுனர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.  தொடர்வண்டித்துறையின் முன்னாள் இணை அமைச்சரும், … Read more

திருநெல்வேலி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை.!

நெல்லை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கணவருடன் திருப்பூரில் வசித்து வந்த ராமலட்சுமி, கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து நெல்லை மாவட்டம் தெற்கு வாகைகுளத்தில் உள்ள தந்தை வீட்டில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு … Read more

“பல பள்ளிகளுக்குத் தெரிவதில்லை” – 3 வயது மகளுக்கு ‘சாதி, மதம் இல்லை’ என சான்று பெற்ற தந்தை பேட்டி

கோவை: கோவை மாவட்டத்தில் முதல்முறையாக ஒரு குழந்தைக்கு சாதி, மதம் இல்லை என சான்று வழங்கப்பட்டுள்ளது. கோவை கே.கே.புதூரைச் சேர்ந்தவர் எஸ்.நரேஷ் கார்த்திக் (33). இவர் தனது மூன்றரை வயது மகளை எல்கேஜி வகுப்பில் சேர்க்க பல பள்ளிகளை நாடினார். விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிடவில்லை என்பதால், பல பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனது குழந்தைக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழைப் பெற கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்த 5 … Read more

திருச்சி: யாசகம் பெற்ற பணத்தில் இலங்கை தமிழர்கள் துயர்நீக்க தானம் வழங்கிய யாசகர்

தனக்காக யாசகம் கேட்பவர்களுக்கு மத்தியில், தான் யாசகமாக பெற்றதை இலங்கைத் தமிழர்கள் துயர்நீக்க நிதியாக வழங்கியுள்ளார் தூத்துக்குடி யாசகர் ஒருவர்.  தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் புல்பாண்டியன். இவருடைய மனைவி இறந்துவிட்ட நிலையில் தனது குடும்பத்தினரைவிட்டு பிரிந்து ஆங்காங்கே யாசகம்பெற்று வாழ்ந்துவரும் இவர், தனது தேவைக்கான பணம் போக எஞ்சிய பணத்தை கல்வி மற்றும் ஏனைய மக்கள் பணிகளுக்காக தானமாக வழங்கிவருகிறார். அந்தவகையில் கொரோனா காலத்தில் மக்கள்படும் துன்பத்தையறிந்து யாசகம்பெற்று அவர்களின் துயர்நீக்க நிதி வழங்கியுள்ளார். இந்நிலையில் … Read more

தமிழகத்தில் போட்டி பா.ஜ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் தான்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்து அறிவித்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. தொடர்ந்து, மாநில அரசுகளும் உள்ளூர் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால், மத்திய அரசு இதுவரை பலமுறை … Read more

தினம் தகராறு.. மூன்றாவது மனைவி, மாமனார் , மாமியாரை கொலை செய்த கணவன்.. பஞ்சாப்பில் நடந்த கொடூரம்..!

குடும்ப தகராற்றில் மனைவி மற்றும் மாமனார் மாமியாரை கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரில் ஷிவ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுனில். இவர் முதல் 2 மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில் ஷில்பி என்பவரை    திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் மகன் ஒருவன் உள்ளான். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. சம்பவதன்று, இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை … Read more

தமிழக அரசு பணிகளில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. ஒரே நாளில் 2,000 பேர் ஓய்வு..

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்ட பின்பு இன்று முதன் முறையாக, இரண்டாயிரம் பேர் ஓய்வு பெறுவதால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கான ஒய்வு பெறும் வயது இரண்டு ஆண்டுகளுக்கு முன் 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது ஓய்வு பெறுபவர்களால் … Read more

தூர்வாரும் பணிகளால் குறுவையில் 5.20 லட்சம் ஏக்கர், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கர் சாகுபடி உயரும்: தமிழக அரசு எதிர்பார்ப்பு

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்டுள்ள தூர்வாரும் பணிகளின் மூலம் கடந்த ஆண்டைவிட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். இரண்டாவது நாளான இன்று (மே 31) நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் … Read more

தமிழ் வழி கல்வியில் பள்ளிப் படிப்பு – 24 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய தஞ்சை மாணவி

மைக்கேல்பட்டியை சேர்ந்த ரெனிட்டா என்ற இளம்பெண், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மைக்கேல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ரவி – விக்டோரியா தம்பதியினரின் மகள் ஏஞ்சலின் ரெனிட்டா. இவர், மைக்கேல்பட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்துள்ளார். 10-ம் வகுப்பில் 500-க்கு 490 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1200-க்கு 1158 மதிப்பெண்களும் பெற்று உள்ளார். தமிழ்வழி கல்வியில் பள்ளி படிப்பை முடித்த … Read more

விஜய் டி.வி ராமர் ஒரு அரசு அதிகாரி… அதுவும் மதுரையில்!

தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் என்றாலே நினைவுக்கு வருவது விஜய் டி.வி பிரபலங்கள். அதிகமான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி ரசிகர்கள் மத்தியில் காமெடி கலைஞர்களை பிரபலப்படுத்திய பெருமை விஜய் டிவிக்கு உண்டு. இதில் என்னம்மா இப்படி பண்றீங்ளேமா என்ற ஒற்றை வரியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் ராமர். என்னம்மா ராமர் என்றால் அனைவருக்கும் அத்துபடி என்று சொல்லும் காலம் போய் தற்போது ராமர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஒரு நபராக மாறிவிட்டார் ராமர். ஆத்தாடி என்ன … Read more