ஸ்கெட்ச் போட்டு சிலை கடத்தல் கும்பலை மடக்கிய போலீஸ்.. பஞ்சலோக சிலைகள் மீட்பு

தமிழக கோவிலில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிடப்பட்ட இரு பஞ்சலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீட்டனர். இரு கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர். பழங்கால கோவில்களில் இருந்து திருடி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட புராதன சிலைகளை மீட்க தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விருதாச்சலம் பகுதியில் உள்ள மகிமைதாஸ் என்பவரது வீட்டில் இரு பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை … Read more

தேசிய கல்விக் கொள்கையில் இதெல்லாம் ஆபத்து: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

இந்­திய அள­வில் கல்­வித்­து­றை­யில் தமி­ழ­கம் 15 ஆண்­டு­கள் முன்­னோக்­கிப் பயணித்­துக் கொண்­டி­ருப்­ப­தாக உயர் நீதி­மன்­றத்­தில் தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது. எனவே தமி­ழ­கத்­துக்கு புதிய தேசிய கல்­விக் கொள்கை அவசியம் இல்லை என்­றும் அரசு தாக்­கல் செய்­துள்ள மனு­வில் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது. தமி­ழ­கத்­தில் தேசிய கல்­விக் கொள்­கையை அமல்­ப­டுத்­தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நேற்று நீதிபதிகள் முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் மாலா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்பொது தமிழக அரசு சார்பில் முன்வகைப்பட்ட … Read more

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 7 கோபுர கலசங்கள் அனுப்பி வைப்பு.!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாரிலிருந்து 7 கோபுர கலசங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 108 அடி உயர கிழக்கு ராஜகோபுரத்தில் நிறுவப்பட உள்ள இந்த நான்கே முக்கால் அடி உயர செம்பு கலசங்களை நன்செய் இடையாரை சேர்ந்த விவசாய சகோதரர்கள் 2 பேர் நேர்த்தி கடனாக வழங்கி உள்ளனர். கலசங்களுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவகுமார், கலசங்களை ஏற்றி செல்லும் … Read more

“உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது திமுகவில் நடப்பதைப் பார்ப்போம்” – சி.வி.சண்முகம்

சென்னை: “முதல்வரே ரொம்ப சந்தோஷப்பட்டுக் கொள்ளாதீர்கள், விரைவிலே உங்களுடைய அருமை மகன் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது, உங்கள் கட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம். அடுத்தது இன்பநிதிக்கு நீங்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் … Read more

ரயில் பயணியின் சட்டையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் .. மிரண்டு போன அதிகாரிகள்!

ரயில் நிலையத்தில் சட்டை மற்றும் பைக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட 61 லட்சம் ரூபாயை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை விரைவு ரயில் வந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி மாவட்டத்தைச் சேர்ந்த அகுலா சாய்கிருஷ்ணா (27) என்பவரின் பை மற்றும் சட்டையை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் … Read more

IREvIND: விக்கெட் கீப்பர் யார்? அர்ஷ்தீப் – மாலிக்ற்கு வாய்ப்பு கிடைக்குமா?

Ireland vs India 2022 Tamil News: சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை எதிர்கொண்ட இந்தியா, தொடர் முழுதும் அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யாமல் விளையாடியது. இப்போது அதே அணியுடன் அயர்லாந்து சென்றுள்ள இந்தியா அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இது பல விஷயங்களில் ஒத்ததாக இருந்தாலும், இரண்டு முக்கிய வழிகளில் வேறுபட்டு இருக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் … Read more

உதயநிதி, இன்பநிதிக்கு பட்டாபிஷேகம் சூட்டும் போது…. முன்னால் அமைச்சர் சிவி சண்முகம் பதிலடி.!

எடப்பாடி கே பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, ஆர் பி உதயகுமார், ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்களுக்கு பதிலளித்து பேட்டியளித்தனர். அதன் விவரம் பிவருமாறு,  “நேற்றோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. தற்போது, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே.  அதேபோல், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில … Read more

அக்னி பாதைக்கு எதிராக புதுச்சேயில் ஜூன் 27-ல் காங்கிரஸ் 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்

புதுச்சேரி: “அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக புதுச்சேரியின் அனைத்து தொகுதிகளிலும் வரும் 27-ம் தேதி உண்ணாவிரதத் போராட்டம் நடத்த வேண்டும்” என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. அக்னி பாதை திட்டத்தைக் கண்டித்து டெல்லியில் பொதுக்கூட்டம் நடத்தி குடியரசுத் தலைவரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைமை புதுச்சேரியின் அனைத்து தொகுதியிலும் வரும் … Read more

நாகை: இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்து – இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

நாகை அருகே இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ். இவர், காரைக்கால் மேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார், இந்நிலையில், இவரும் இவரது நண்பர் முஹம்மத் இக்பால் ஆகிய இருவரும் திருநள்ளாரிலட இருந்து ஏர்வாடிக்கு செல்ல தனித்தனியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது ஈசனூர் அருகே வந்தபோது இவர்களுக்கு பின்னால் வந்த கார் திடீரென … Read more