பரபரப்பான சூழ்நிலையில் நாளை கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு.. முன்னேற்பாடுகள் தீவிரம்..!

சென்னை வானகரத்தில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஸ்ரீவாரு திருமண மண்டபத்தின் நுழைவாயிலில் மெட்ரோ ரயில் நிலையங்கள் போல், கியூ.ஆர். கோட் சோதனை செய்யும் எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. உறுப்பினர்களுக்கு நவீன நுட்பத்தில் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில், அதனை ஸ்கேன் செய்ய அந்த எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல், மண்டப வளாகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, … Read more

'நிதி தராமல் பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்கிறார்கள்' – பாஜகவை சாடும் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சி நடைபெறவில்லை. காட்சி நடக்கிறது என்றும் கூட்டணிக்கு குழி பறிக்கும் வேலையை பாஜக அமைச்சர்கள் செய்கின்றனர் என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”புதுச்சேரிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வளர்ச்சியில் மோடி அரசு அக்கறையோடு இருக்கிறது. … Read more

இந்த எக்ஸ்பிரஸ் அழகு எங்க போகுது? ரசிகர்களிடம் சிக்கிய சிவாங்கி

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருபவர் சிவாங்கி. சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.    விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக வரும் சிவாங்கிக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர் இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்துள்ள இந்நிகழ்ச்சியின் தற்போது … Read more

கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழப்பு.!

கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் நிஷாத் அஹ்மத், சண்முகி, அலீனா, சஜான், ரித்தின் மற்றும் சுப்ரீத் ஆகியோர் நேற்றிரவு சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இன்று அதிகாலை 4 மணி அளவில் மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சண்முகி உடல் நசுங்கி சம்பவ … Read more

“தமிழகத்தில் ஒரே சமயத்தில் 10,000 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்”-டி.ஜி.பி சைலேந்திர பாபு

தமிழகத்தில் தற்போது பயிற்சி பெற்று வரும் 10,000 காவலர்களும் ஒரே சமயத்தில் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், அப்போது காவல்துறை இளமையுடன் காட்சியளிக்கும் எனவும் டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து திருவள்ளூர் சென்ற அவர், ஆண், பெண் காவலர் பயிற்சி மையங்களில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திர பாபு, தற்போது பயிற்சி பெற்று வரும் 10,000 காவலர்களில் 30 சதவீதம் பேர் பொறியியல் பட்டதாரிகள் என்றார். … Read more

கோவையில் அதிமுக பிரமுகர் நிறுவனத்தில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

கோவை: கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய நிறுவனத்தில், ஐந்தாவது நாளாக இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர். வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, பீளமேட்டில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் சந்திரசேகர் தொடர்புடைய … Read more

கேரட் தோட்டத்துக்குள் வைர மோதிரம்… 10 நொடிகளில் கண்டுபிடித்தால் நீங்க ‘ஸ்மார்ட்’தான்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரசியமான பொழுது போக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக் கூடியவையாக இருக்கிறது. அவை முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பமாகவும் தெரியும். இறுதியில் விடை தெரியும்போது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும். இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உண்மையிலேயே கடினமானதுதான். கேரட் தோட்டத்தில் ஒரு வைர மோதிரம் மறைந்திருகிறது. அதை … Read more

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இனி இதற்கும் சிகிச்சை பெற்று கொள்ளலாம் – அமைச்சர் பேட்டி..!

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று கண் அறுவை சிகிச்சை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது,   “பார்வைத் திறன் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிப்பது கவலை அளிக்கிறது. ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளித்தால், பெரும்பாலான பார்வை இழப்புகளைத் தடுக்க முடியும்.  இந்த ஆண்டு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் … Read more

கட்டுமானப் பணியில் அதிக வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்,தமிழக தொழிலாளர்கள் ஈடுபடுபட்டால் பொருளாதாரம் மேம்படும் – அமைச்சர்

தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளில் அதிகளவில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுவதாகவும், அப்பணிகளில் தமிழர்களை ஈடுபடுத்தினால் தான் மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய அவர், தமிழகத்திற்கு கிடைத்த அந்நிய முதலீட்டில் 50% தொகை கட்டுமானத்திற்கு பயன்படுவடுவதாக கூறினார். Source link

உட்புற சாலைகளில் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணி : சென்னை மாநகராட்சி உத்தரவு 

சென்னை: உட்புற சாலைகளில் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ள அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலையோரங்கள் மற்றும் மையத்தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், நாளடைவில் சாலைகளில் உள்ள மழைநீர் … Read more