டெல்லி முன்னாள் நீதிபதி உள்பட மூவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுப்பு!

நுபுர் சர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை விமர்சித்த டெல்லி முன்னாள் நீதிபதி உள்பட மூவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அனுமதி மறுத்துவிட்டார்.தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது.அவருக்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்றன. அவர் மீது நாடு முழுக்க பல்வேறு இடங்களில் வழக்குகள் பதியப்பட்டன. இது தொடர்பான வழக்கை ஜூலை … Read more

#BigBreaking || அதிமுக மாவட்ட செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம்… அதிமுக தலைமை அதிரடி.!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 18 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, சற்று முன்பு அதிமுகவின் தலைமை எடப்பாடி கே பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் உள்ளிட்ட 18 பேர் தற்போது நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இந்த 18 பேர்களும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான், தஞ்சை வடக்கு … Read more

தமிழறிஞர்களுக்கு வீடுகள் வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சம்: சீமான் குற்றச்சாட்டு

சென்னை: “தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிய சான்றோர் பெருமக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய உரிமையைத் தரமறுத்து, அதிலும் தமிழ்நாடு அரசு பாகுபாடு பார்க்கிறது என்கிற குற்றச்சாட்டு ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய மத்திய, மாநிலங்கள் மற்றும் பன்னாட்டு அளவில் வழங்கப்பெறும் இலக்கியத்திற்கான உயரிய விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துப் பல மாதங்களாகியும், எழுத்தாளர்கள் … Read more

’’துரோகத்தின் வரலாற்றில் ஒரு புரூட்டஸ் ஒரு யூதன் வரிசையில் பழனிசாமி மட்டுமே’’ – புகழேந்தி

அதிமுகவின் சின்னமான இரட்டை இலைக்கு சொந்தக்காரர் பன்னீர்செல்வம் மட்டுமே! துரோகத்தின் வரலாற்றை எழுதினால் சிலுவம்பாளையம் பழனிசாமி மட்டுமே என ஒபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் புகழேந்தி அவரை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,’’அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த புதிய நிர்வாகிகள் நியமனம் செல்லாது. அதிமுகவில் அவர் இல்லை; அவருக்கும் அதிமுகவிற்கும் சம்மந்தம் கிடையாது. ஆடியோவை வெளியிட்ட … Read more

அ.தி.மு.க தொண்டர்கள் இடையே சாதிச் சண்டையை மூட்டி விட முயற்சி: டி.டி.வி தினகரன் திடீர் புகார்

TTV Dinakaran says caste discrimination in ADMK: அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 14) நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டு பேசும்போது, ”தற்போது அ.தி.மு.க.,வில் நடைபெறக்கூடிய அனைத்து செயல்களையும் அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளதாக வெளிவந்துள்ள ஆடியோவில், அ.தி.மு.க.,வில் நடப்பவை குறித்து உண்மையாக பேசியுள்ளார். இதையும் படியுங்கள்: ‘யார் எட்டப்பர்கள்?’: இ.பி.எஸ்- சசிகலா திடீர் … Read more

“ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே” – மக்களவையில் ‘வார்த்தைத் தடை’ குறித்து கமல் காட்டம்

சென்னை: “ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே” என்று மக்களவையில் பேசுக்கூடாத வார்த்தைகள் என இடப்பட்டுள்ள பட்டியல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு, மக்களவைச் செயலாளர் அறிவிப்பு … Read more

TNPSC மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு கோரிய வழக்கு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி மதிப்பெண் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்கக்கோரிய வழக்கு  ஆகஸ்ட் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டி.என்.பி.எஸ்.சி செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக … Read more

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்… ஆனால், இங்கே 20 நொடிகளில் பாம்பைக் கண்டுபிடிக்க சவால்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இதனால், இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நெட்டிசன்கள் வெறித்தனமாகப் பார்த்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில், ஒரு மாதிரியாகவும், இரண்டாவது பார்வையில் குழப்பமானதாகவும் இருக்கும். இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், … Read more

#BigBreaking || ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு,!

அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக்  கோரி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடங்கியவுடன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, “அதிமுகவின் கட்சி விதிமுறைகளை படி தலைமை நிலைய செயலாளர்தான் தலைமைக் கழகத்தின் பொறுப்பாளர். தலைமை அலுவலக சொத்தை பொறுத்த வரை அதன் உரிமை என்பது அதிமுகவிடம் உள்ளது. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டபோது, காவல்துறையினர் … Read more

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை; இடைக்கால தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002-2006 ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா … Read more