பப்பாளியில் இவ்ளோ சுகர் இருக்கா? சுகர் பேஷியன்ட்ஸ் சாப்பிடலாமா?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத அல்லது இன்சுலினைத் தேவையான முறையில் பயன்படுத்தாத ஒரு நிலை தான் நீரிழிவு நோயாகும் இரத்த சர்க்ரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த பதிப்பு ஏற்படுகிறது. . தங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த சிலர் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள், இன்னும் சிலர் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு மூலம் உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவார்கள். … Read more

#சேலம் || காதல் மனைவிக்காக ஊர் ஊராக நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது.!

சேலம் காதல் மனைவிக்காக பல ஊர்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞரையும் அவரின் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 26ஆம் தேதி சேலம் சூரமங்கலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 4 சவரன் நகையை இரண்டு நபர்கள் பறித்து சென்றனர்.  இது குறித்து அந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.  மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி … Read more

கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்.. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தகவல்..!

தமிழகத்தின் தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் தொடர்புடைய 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட  90 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

‘ஸ்டாலின் படம்’, ‘மெட்ரோவில் இலவச பயணம்’… – சென்னை மாமன்றத்தில் கவனம் ஈர்த்த கோரிக்கைகள்

சென்னை: மாமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்க வேண்டும் என்றும், மெட்ரோ ரயிலில் இலவச பயணம் செய்யும் சலுகை வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய 139-வது ம.தி.மு.க., கவுன்சிலர் சுப்பிரமணி, “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேருந்தில் இலவச பயணம் போன்ற சலுகைகள் உள்ளது போல் கவுன்சிலர்களுக்கு மெட்ரோ ரயில்களில் இலவச பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அப்போது, கவுன்சில் … Read more

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்கு – 813 வங்கிக் கணக்குகள் முடக்கம்

தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்திலில் ஈடுபட்டால் கடத்தல்காரர்கள் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என தென்மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைக் கொண்ட காவல்துறை தென் மண்டல ஐஜியாக அஷ்ரா கார்க் நியமிக்கப்பட்டதிலிருந்து கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்படை மற்றும் வாகன சோதனையை தீவிரப்படுத்துதல் போன்ற … Read more

உதயநிதியை அமைச்சர் ஆக்க தீர்மானம்: திருப்புமுனை உருவாக்கும் திருச்சி தி.மு.க

தமிழகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் சலுகைகள் இல்லை என்று திமுக அரசு ஒவ்வொரு மேடையிலும கூறி வந்தாலும், மறுப்பக்கம் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் கட்சியில் பதவிகள் பெற்று வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை குறிப்பிட்டு சொல்லும் வகையில் தற்போது திருச்சியில் நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சொல்லலாம். முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் திருச்சியில் மாவட்ட … Read more

தர்மபுரி || சட்டவிரோதமாக கருகலைப்பு செய்ய உதவியவர் கைது..!

சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவத்தில் செவிலியரின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருகலைப்பு நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, நேற்று முன் தினம் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்வதாக 7 பேரை தருமபுரி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய செவிலியர் கற்பகம் என்பவரின் கணவர் விஜயகுமார் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், விஜயகுமாரை கைது செய்த காவல்துறையினர் அவரிட, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் கைதாகியுள்ள … Read more

மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் அடுத்த தேவனேரியில் 100 அடி உயர கம்பத்தில் பாமக கொடியை ஏற்றி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கல்பாக்கம் அணுமின் நிலைய வேலை வாய்ப்புகளில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார். Source link

மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 3,000 பேர் வேலைநிறுத்தம்: தெருக்களில் குவிந்த குப்பைகள்

மதுரை: மதுரை மாநகராட்சியில் 3,000 தூய்மைப் பணியாளர்கள், பொறியியல் பணியாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியதால் சாலைகள், தெருக்களில் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்திருந்தன. மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவில் 1,900 பணியாளர்கள், 1,900 தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள், 2,200 அவுட் சோர்ஸிங் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த பல ஆண்டாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகமும் அவர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை … Read more