மதுரை : சதிஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்.! தமிழக  அரசு வெளியிட்ட அறிவிப்பு.!

மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும்,கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ.5 லட்சமும் நிதி வழங்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்டம், விளாங்கிடி கிராமத்தில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சதீஷ் எனும் தொழிலாளி உயிரிழந்தார்.  சதீஷ் உயிரிழந்த தகவலை … Read more

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி.!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த நிகழ்வு குறித்து கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கன்வாடி உதவியாளராக பணியாற்றி வந்த ராஜவள்ளி என்பவர், பணிக்கு செல்ல ரெட்டியார்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனியார் பேருந்தை அவர் முந்த முயன்றதாக கூறப்படும் நிலையில், எதிர்பாராவிதமாக பேருந்து உரசியதில், நிலைதடுமாறி கிழே விழுந்தது அதன் சக்கரத்தில் சிக்கினார். இதில், ராஜவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த … Read more

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை அமைக்க திட்டம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களின் அவசர சிகிச்சைக்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. மதுரை மீனாட்சிம்மன் கோயில் உலக புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என 50,000 பேர் தினமும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிறார்கள். சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய இருக்கிறது. அப்படி வரிசையில் நிற்கும் பக்தர்கள் வயதானவர்கள், பெண்கள், நோயாளியாக இருக்கும்பட்சத்தில் திடீரென்று … Read more

மீனாட்சி கோயிலில் சாமி தரிசனம் செய்த பெற்றோர்; தொலைந்த 6 வயது குழந்தை – போலீசார் அதிரடி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழி தவறி சென்ற குழந்தையை, துரிதமாக செயல்பட்டு காவல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று நடைபெறும் மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவிற்கு சென்னையில் இருந்து தேனி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர், தங்களது … Read more

அதிமுக ரெய்டுக்கு பயந்து பேசவில்லை – பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேட்டி

பாஜக மாநிலத் தலைவரையோ, பாரதிய ஜனதா கட்சியைப் பற்றியோ பேசுவதற்கு பொன்னையனுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் அதிமுகவினர் ரெய்டுக்கு பயந்துகொண்டு சட்டசபையில் பேசவில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.வி.துரைசாமி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அண்மையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி … Read more

திருமணம் செய்து வைக்காததால் தம்பதி எடுத்த விபரீத முடிவு.. நெல்லையில் நடந்த சோகம்..!

திருமணமான ஆறே மாதத்தில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல்.  இவருக்கும் தனலெட்சுமி என்பவருக்கும் திடருமணம் நடைபெற்றது. இவர் தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று காலை அவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் செல்போனை எடுக்காததால் காவல்துறையினர் தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், … Read more

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேர் போட்டியின்றி தேர்வு.!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வானதாக சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்துள்ளார். திமுக சார்பில் ராஜேஸ்குமார், கிரிராஜன், கல்யாணசுந்தரம் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். அதிமுகவின் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும் மாநிலங்களவைக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தேர்வானர்களுக்கு சீனிவாசன் சான்றிதழ்களை வழங்கினார். இதனிடையே,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி … Read more

“அண்ணாமலை கர்நாடகா சென்று மேகேதாட்டு அணையைக் கட்ட விடாமல் தடுப்பாரா?” – அன்புமணி கேள்வி

சேலம்: “மத்தியிலும் கர்நாடகாவிலும் பாஜகதான் ஆட்சி செய்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று மேகேதாட்டு அணைக்கட்டும் திட்டம் கொண்டுவர மாட்டோம் என்று சொல்வாரா, அணையை கட்ட விடாமல் தடுத்து நிறுத்துவாரா?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பாமக 2.0 என்ற புதிய செயல் திட்டத்தின் மூலம் கல்வி, மேலாண்மை, சுற்றுச்சூழல், மது ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி … Read more

மதுரை: 400 ஆண்டுகள் பழமையான கலைநுட்பத்துடன் கூடிய மாலைக்கோயில் கண்டுபிடிப்பு

மதுரை விமான நிலையம் அருகே பரம்புபட்டியில் 400 ஆண்டுகள் பழமையான, 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மாலைக்கோவில் கண்டறியப்பட்டுள்ளது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனீஸ்வரன், முனைவர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொள்ளும் போது, விமான நிலையம் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் கலை நுட்பத்துடன் கூடிய கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட சதிக்கல் தோரணவாயில் கலைநயத்தோடு 4 அடி உயரம் 3 … Read more

ஆளாளுக்கு ஒன்ன பேசணும்… ஆனா, ஒரே மாதிரி பேசணும்

தமிழ்நாடு அரசியலில் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு மையமாக இருந்த கலைஞர் மு கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்றைக்கு கலைஞர் கருணாநிதியைப் புகழ்ந்து நிறைய மீம்ஸ்களைப் போட்டுள்ளனர். மீம்ஸ் கிரியேட்டர்கள் வெறுமனே அரசியல் தலைவர்களை விமர்சிப்பதற்காக மட்டுமே மீம்ஸ்கள் போடப்படுகின்றன. மீம்ஸ் கிரியேட்டர்கள் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கு வேகமாக சாட்டையைச் சுழற்றி உள்ளனர். இன்று கவனம் பெற்ற அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம். பாக்டீரியா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “விதவை என்று எழுதுகிறேன். எழுத்தில்கூட … Read more