தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேர் போட்டியின்றி தேர்வு.!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வானதாக சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அறிவித்துள்ளார்.

திமுக சார்பில் ராஜேஸ்குமார், கிரிராஜன், கல்யாணசுந்தரம் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். அதிமுகவின் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும் மாநிலங்களவைக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, தேர்வானர்களுக்கு சீனிவாசன் சான்றிதழ்களை வழங்கினார். இதனிடையே,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.