அமெரிக்கா – ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 புராதன கோயில் சிலைகள் தமிழகம் வருகை

கும்பகோணம்: வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட, தமிழக கோயில்களுக்கு சொந்தமான 10 சிலைகள், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டன. தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் இருந்த 10 உலோக சிலைகள், டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், … Read more

திருப்பத்தூர்: சரக்கு ரயிலில் கண்டெய்னர் மேல் தூங்கியபடி பயணம் செய்த நபரால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மேற்கூரையின் மீது படுத்துத் தூங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு ரயில் மீது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ரயில் மேற்கூரையில் படுத்துத் தூங்கியபடி வந்துள்ளார். இதையடுத்து ரயில் விண்ணமங்கலம் ரயில் நிலையம் அருகே வந்தபோது இதை பார்த்த ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலை … Read more

சென்னையில் ஜூன் 6 முக்கிய பகுதிகளில் மின் தடை – உங்க ஏரியா இருக்கா செக் பண்ணுங்க

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக டான்ஜெட்கோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் – பள்ளிக்கரணை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவுள்ளது. தாம்பரம் – பள்ளிக்கரணை பகுதியில் உள்ள 200 அடி ரெடியல் சாலை, வேளச்சேரி மெயின் சாலை, ஐஐடி காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதேபோல், மயிலாப்பூரில் … Read more

இந்தியாவை அதிரவைத்த விளம்பரம்.! ஆபாசத்தின் உச்சம்., பாலியல் வன்கொடுமை., இரட்டை வசனம்.! 

வாசனை திரவிய விளம்பரம் ஒன்றில், பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விதமாகவும், அதனை இளைஞர்களை இரட்டை அர்த்தத்தில் பேச வைத்து, நடிக்க வைத்து எடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்று, பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு 88 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி விவரம் தெரிவிக்கிறது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் சிறுமி ஒருவர் அரசியல் பிரமுகர்களின் மகன்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது. இந்த … Read more

சென்னையில் அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து.!

சென்னையை அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து பட்டாபிராம் தண்டுரை மேம்பாலம் வழியாக சென்ற சமயத்தில், இரு சக்கர வாகனம் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்ணாலை பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருமங்கலத்தில் பாஜக சார்பில் 500 துப்புரவுபணியாளர்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று, அரிசி, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதேபோல, கள்ளிக்குப்பத்தில் உள்ள … Read more

சேலம்: தெருவில் செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கும் வெறிநாய்: 10-க்கும் மேற்பட்டோர் காயம்

மேட்டூர் அருகே வெறிநாய் கடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில், மூன்று சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த வீரக்கல் புதூர் மற்றும் பி.என்.பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வெறிநாய் கடித்ததில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடுமையான பாதிப்படைந்துள்ளனர். இதில் 3 பேர் குன்னூரில் உள்ள வெறிநாய் கடிக்கான மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க சென்றுள்ளதாகவும் இன்னும் சில பேர் மருத்துவமனையில் ஊசி போட்டுக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் … Read more

காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு : நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சபாநாயகர்

Three kids die of suffocation inside parked, பணகுடி  அருகே காருக்குள் விளையாடிய குழந்தைகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு நித்திஷா  என்ற 6 வயது மகளும், நித்திஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளும் பகத்துவீட்டில் வசிக்கும் சுதன் என்பவரின் 4 வயது மகன் கபி சாந்தும் தினமும் ஒன்றாக விளையாடுவது வழக்கம். … Read more

#சென்னை || அரசுப் பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்து.! ஒருவர் உயிரிழப்பு.!

சென்னையில் அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ஆவடியில் இருந்து ஆரணி நோக்கி சென்ற அரசு பேருந்து பட்டாபிராம் தண்டுறை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்த … Read more