வாக்காளர் பட்டியல் திருத்தம் : பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்

Tamil Nadu voter list 2025 : வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் தொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

விளையாட்டை வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும்: அன்பில் மகேஸ் அறிவுரை

தஞ்சாவூர்: விளையாட்டை வெறும் விளையாட்டுதான் என கருதாமல், அதையும் வாழ்க்கை மேம்பாட்டுக்காக மாற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகள போட்டியின் தொடக்க விழா இன்று (அக்.29) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். எம்.பி. க்கள் கல்யாண சுந்தரம், முரசொலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். … Read more

TVK 2.0: விஜய் எடுத்த அதிரடி முடிவு? முக்கியமான நிர்வாகி மிஸ்ஸிங்! என்ன காரணம்?

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஒருவித தயக்கம் காட்டி வந்த தவெக, கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்தது. தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.

நவ.5-ல் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்: விஜய் அறிவிப்பு

சென்னை: நவம்பர் 5 ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’ அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது. … Read more

அதிமுக உடன் கூட்டணியா…? தவெக நிர்மல் குமார் சொன்ன பதில் என்ன?

TVK Latest News Updates: அதிமுக கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கொடி இருந்தது குறித்த கேள்விக்கு தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார். 

பள்ளிக்கரணை சதுப்பு நில குடியிருப்பு விவகாரம்: ஐகோர்ட்டில் அதிமுக பொதுநல மனு

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, சதுப்பு நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கவில்லை எனவும் சதுப்பு நிலத்திற்கு வெளியே தனியார் பட்டா நிலத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அரசு … Read more

நகராட்சி துறை பணி நியமனத்தில் முறைகேடா? அமைச்சர் கேஎன் நேரு எச்சரிக்கை

K.N. Nehru : நகராட்சி நிர்வாகத் துறையின் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அதனை அமைச்சர் கே.என்.நேரு மறுத்துள்ளார்.

என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசியில் முதல்வர் பேச்சு

தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வரவேற்று பேசினார். தொடர்ந்து, 2,44,469 பயனாளிகளுக்கு ரூ.587.39 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை … Read more

ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்?; திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு – யார் யாருக்கு தொடர்பு?

Cash For Jobs Scam Allegations: நகராட்சி துறையில் சுமார் 2,538 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க, ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு, மொத்தம் ரூ.888 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்லையப்பர் கோயிலுக்கு குட்டி யானையை கொண்டு வர தடை கோரிய வழக்கு: வனத்துறை, கோயில் நிர்வாகம் பதிலளிக்க  உத்தரவு

சென்னை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தராகண்டில் இருந்து குட்டி யானையை கொண்டு வர தடை கோரிய வழக்கில், தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தது. இந்நிலையில், கோயிலுக்கு உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து 5 வயது குட்டி யானையை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 4 ஆயிரம் … Read more