என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ முடியும்: சசிகலா

மதுரை: என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ தான் முடியும் என அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மதுரையில் இன்று தெரிவித்தார். மதுரையில் இன்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாதங்களில் மாவட்டந்தோறும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. பள்ளி அளவில் போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திமுக அரசின் கண் அசைவு இல்லாமல் போதைப்பொருள் இந்தளவுக்கு புழக்கம் வருவதற்கு வேலை இல்லை. … Read more

மாணவர்கள் கவனத்திற்கு.. சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் -கல்வி அலுவலர் அறிவிப்பு

Tiruvallur District Local News: திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முக்கியத் தகவல். வரும் சனிக்கிழமை (நவம்பர் 01, 20225) பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

வானிலை முன்னறிவிப்பு: நவ.5 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.5-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்.31) முதல் நவ.4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 5-ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் … Read more

பழனி செல்வோர் கவனத்திற்கு..ரோப் கார் சேவை இல்லை! மீண்டும் எப்போது தொடங்கும்?

Palani Temple Rope Car Services Stalled : பழனி முருகன் கோவிலில், நாளை ஒரு நாள் ரோப் கார் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படும் அவலம்!

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினாலும் , சிறை தண்டனை மற்றும் அபராதம் கட்டியப் பிறகும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை. அந்தவகையில் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மற்றும் புதுச்சேரி … Read more

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ்ய அதினியம் என்ற பெயர்களும் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2024 ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. … Read more

மதுரையில் ஓபிஎஸ்ஸுடன் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை: ஒரே காரில் பசும்பொன் பயணம் செய்ததால் பரபரப்பு!

மதுரை: அதிமுகவில் அதிருப்தியுடன் பயணம் செய்துவந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் திடீரென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, இருவரும் ஒரே காரில் பசும்பொன் புறப்பட்டு சென்றனர். இருவரும் அதிமுகவில் பழனிசாமிக்கு எதிரானவர்களை ஒன்றினைக்க நடக்கும் முயற்சியாக பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை, செல்வாக்கு மிக்க நபராக இருந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா இவரை அவ்வப்போது ஒதுக்கி வைப்பதும், மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் கொடுத்தும் முக்கியத்துவம் … Read more

ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன்… இபிஎஸ் வார்த்தையில் சொன்ன பதில்…!

Edappadi Palanisamy: ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பசும்பொன்னுக்கு பயணம் செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதிலை இங்கு காணலாம்.

கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு அரசு வீடு வழங்க வேண்டும்: அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னை: கபடி வீராங்​கனை கார்த்​தி​கா​வுக்கு வீடு வழங்க வேண்​டும் என தமிழக அரசுக்கு பாமக தலை​வர் அன்​புமணி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லாளர் பெ.சண்​முகம், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கோரிக்கை விடுத்​துள்​ளனர். பஹ்ரைனில் நடை​பெற்ற ஆசிய இளை​யோர் போட்​டி​யில் தங்​கம் வென்ற இந்​திய மகளிர் கபடி அணி​யின் துணைத் தலை​வ​ரான சென்னை கண்​ணகி நகரைச் சேர்ந்த கார்த்​தி​காவை, அவரது இல்​லத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செயலாளர் பெ.சண்​முகம் நேற்று முன்​தினம் சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தார். … Read more

அரசியல் பிரேக்கிங்! அதிமுகவுக்குள் சலசலப்பு.. ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்

AIADMK Political Breaking News: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தது, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.