டாஸ்மாக் சரக்குக்கு பாதுகாப்பு; நெல்லுக்கு இல்லை- சீமான் அனல் பேச்சு

நம்முடைய அரசு டாஸ்மாக் சரக்குகளை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அதற்கு பாதுகாப்பு வழங்குகிறது ஆனால் உயிர் தேவையான நெல்லை கொள்முதல் செய்யாமல் வீதியில் விட்டு விடுகிறது என சீமான் தெரிவித்தார்.

தமிழகத்தில் எஸ்ஐஆர்: திமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் – மு.க. ஸ்டாலின்

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுமானால் அதனை திமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாகத் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற பிஹார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 லட்சத்தக்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இதே … Read more

மோந்தா புயல்.. நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம்?

நாளை (அக்டோபர் 27) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

‘பைசன்’ பார்க்க நேரம் இருக்கிறது; விவசாயிகளை பார்க்க நேரமில்லையா? – முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

சென்னை: ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது. விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய நேரம் இருக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க … Read more

3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தஞ்சை நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு – விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கை

தஞ்சாவூர்: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக தஞ்சாவூர் அருகே ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், சுமார் 6.50 லட்சம் ஏக்கரில்,குருவை சாகுபடி செய்யப்பட்டு, 80 சதவீத அறுவடை பணிகள் முடிந்துள்ளன. இதில், அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர். இந்நிலையில், லாரிகள் போதிய அளவு இல்லாததால், ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களில், ஆயிரக்கணக்கான நெல் … Read more

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

M.K. Stalin : தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குமரியில் கனமழை: கோதையாறு, வள்ளியாறு, தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,850 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 3 நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து கொட்டிய கனமழை நேற்று காலை வரை தொடர்ச்சியாக பெய்தது. நேற்று காலை 8 மணி வரையான … Read more

தமிழ்நாடு விவசாயிகள் அனைவருக்கும் பிஎம் கிசான் நிதி – மத்திய அமைச்சர் அறிவிப்பு

PM Kisan : தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் நூற்றாண்டு விழா நவ.23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.19, 21 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06091), மறுநாள் மதியம் 2.15 மணிக்கு ஆந்திர மாநிலம் குண்டக்கல் சென்றடையும். மறுமார்க்கமாக, குண்டக்கலில் … Read more