‘அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு முகாம் நடத்துவதா?’ – திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னை: “அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது” என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, எந்தத் துறை நிர்வாகத்தையும் கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே நாட்களைக் கடத்தி விட்டு, தற்போது, … Read more

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை போனஸ்

சென்னை: தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.16,800 வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவின் விவரம்: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக மின்வாரியத்தில் உள்ள நிறுவனங்கள் மின் பகிர்மான, உற்பத்தி, பசுமை எரிசக்தி, தொடரைப்பு கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் முழுநேர ஊழியர்களுக்கும், பயிற்சியில் உள்ள கள உதவியாளர், கணக்கீட்டாளர், கேங்மேன், அலுவலக … Read more

கரூர் நெரிசல் உயிரிழப்புக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், கரூர் நிகழ்வில் மறைந்தோர், பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை விதிகள்படி, பேரவையின் கூட்டம் 6 மாத இடைவெளியில் மீண்டும் கூட்டப்பட வேண்டும். அந்த அடிப்படையில், மார்ச் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்.29-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தொடரின் முதல் நாளான … Read more

தீபாவளி: சொந்த ஊர் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்.. ஆம்னி பேருந்துகள் கட்டணம் அதிரடி குறைப்பு!

தீப ஓளி திருவிழாவிற்கு சொந்த ஊர் சொல்பவர்கள் இடையே ஆம்னி பேருந்து நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்த நிலையில், தற்போது அரசு நடவடிக்கையால் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 

கரூரில் தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவிக்கப் போவது எப்போது?

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். எனினும், பல்வேறு காரணங்களால் விஜய்யின் கரூர் பயணம் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற, விஜய் கரூர் வந்து மக்களை சந்திப்பதற்காக தவெக சார்பில், டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதற்கு, கரூர் எஸ்.பி.யை சந்தித்து மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கரூரில் தனியார் மண்டபத்துக்கு … Read more

இதுவரை 75 தொகுதிகளில் மினி ஸ்டேடியம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: “எளியவர்களின் வெற்றிதான் நமது அரசின் வெற்றி. எத்தனையோ ஏழை வீரர்களின் கனவை விளையாட்டுத் துறை நனவாக்கி வருகிறது. எந்த மாநில அரசும் செய்யாத அளவுக்கு விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்துள்ளோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. அந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறும்போது, “தமிழகத்துக்கு பெருமை … Read more

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் வரும் அதிரடி மாற்றம்!தமிழ்நாடு அரசு- மாருதி ஒப்பந்தம்

Tamil Nadu Government : டிரைவிங் லைசென்ஸ் இனி மனித தலையீடு இன்றி தானியங்கி சோதனை முறையில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கூகுள் ஏஐ மையம் அமைவது இந்தியாவுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: பிரேமலதா வாழ்த்து

சென்னை: கூகுள் நிறுவனம் தனது பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைத்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆந்திர மாநிலத்தில் கூகுள் நிறுவனம் தனது பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைத்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப் பிரசாதமாகும். இது இந்தியாவின் வளர்ச்சிக்கும், உலக அரங்கில் வல்லரசாக உருவெடுப்பதற்கும் ஒரு முக்கிய அடையாளமாக அமைகிறது. அமெரிக்காவைத் … Read more

தீபாவளி பலகாரங்கள்: தரத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறை ஆலோசனை!

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் பலகாரங்கள் செய்து விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்: மீன் ஏற்றுமதி வா்த்தகத்தில் ரூ.10 கோடி இழப்பு!

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 8 அன்று கடலுக்குச் சென்ற ஹரி கிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்குச் சொந்தமான நான்கு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, படகுகளிலிருந்த 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டு … Read more