படித்து வேலை இல்லாமல் இருக்கிறீர்களா? உதவித் தொகை கேட்டு உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu unemployment allowance : படித்து வேலை இல்லாமல் இருப்பவர்கள் உதவித் தொகை கேட்டு உடனே விண்ணப்பிக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசிடம் கேட்டு உரங்களை பெற்று, விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”தமிழகத்தில் காவிரிப் பாசன மாவட்டங்களிலும் கடலூர் மாவட்டத்திலும் யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு உரம் வைக்க முடியாமல் உழவர்கள் தவித்து வருகின்றனர். உழவர்களின் இந்தத் துயரத்தை அறிந்து நடவடிக்கை … Read more

கரூர் கூட்ட நெரிசல்: பின்னணியில் சதி இருக்கலாம் – சொல்வது தவெகவின் தாடி பாலாஜி!

TVK Thadi Balaji: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்றும் ஆனால் அதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட சதி இருக்கலாம் என்றும் தவெகவின் தாடி பாலாஜி பேசியுள்ளார்.

“சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் மூத்த வழக்கறிஞர் பராசரன்” – சென்னை நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம்

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் சூட்டினர். பத்ம விபூஷன் விருது பெற்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான 98 வயதாகும் கே.பராசரன், 75 ஆண்டுகாலமாக வழக்கறிஞராக பணியாற்றி வருவதை கொண்டாடும் வகையில் பவள விழாவும், 50 ஆண்டுகளாக மூத்த வழக்கறிஞராக நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் பொன் விழாவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பி்ல் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை உயர் … Read more

டெங்கு பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனர். அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு பாதிப்பும் மேலும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்கள், பெண்களுக்கு தலா 10 படுக்கைகளுடன் தனி வார்டுகள் அமைக்கப்பட்டன. அதேபோல, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 14 படுக்கைகள், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி … Read more

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் – நீதிமன்றத்தை நாட போராட்டக் குழு முடிவு

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் 15-வது முறையாக பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: பரந்தூர் புதிய … Read more

தீபாவளி ஏலச்சீட்டு, பேக்கரி வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

Tamil Nadu Government : தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி இனிப்பு விநியோகம் செய்பவர்களுக்கும், பேக்கரி வைத்திருப்பவர்களுக்கும் திருச்சி, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் – பெங்களூரு புகழேந்தி கணிப்பு

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். இதுதொடர்பாக ஓசூரில் நேற்று செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மேடையில் நின்று கொண்டு, “அதோ பாருங்கள் கொடி” என தவெக கொடியை காண்பித்து அரசியல் செய்கிறார். தவெக தலைவர் விஜய், “பாஜக தங்களுக்கு எதிரி’ என்று கூறுகிறார். பாஜகவை கூட்டணியில் வைத்துக் கொண்டு எந்த தைரியத்தில் தவெக கொடியை காண்பித்து அது வானுயரப் பறக்கிறது என்று பழனிசாமி கூறுகிறார். அதிமுக தொண்டர்தான் தவெக … Read more

கந்த சஷ்டி : திருச்செந்தூர் செல்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tiruchendur Kanda Sashti 2025 : திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா விவரம் மற்றும் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கிராமசபை கூட்டங்களில் மக்கள் முன்வைக்கும் தீர்மானம் திட்டங்களாக மாறும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி 

சென்னை: கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் முன்வைக்கும் ஒவ்வொரு பரிந்துரையும், தீர்மானங்களும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, திட்டங்களாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். 6 கிராமங்களை சேர்ந்த மக்களிடம் நேரலையில் கருத்துகளைக் கேட்டறிந்தார். இந்த கூட்டங்களில், குடியிருப்புகள், சாலைகள், தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘தாயுமானவர்’ திட்டத்தின்கீழ் பயனாளிகளை அடையாளம் கண்டு, நலிவுநிலை குறைப்பு … Read more