தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை. அதிகாரிகள் மீது வழக்கு

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கீழ் செயல்​படும் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கியது தொடர்​பாக, அண்ணா பல்கலைக்கழக அதிகாரி​கள் உள்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்​புத் துறை வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கீழ் 470-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன. இதற்​கிடையே 224 தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களில் 353 ஆசிரியர்​கள் ஒரே நேரத்​தில் ஒன்​றுக்​கும் மேற்​பட்ட கல்​லூரி​களில் பணிபுரிவ​தாக கணக்கு காட்​டப்​பட்​டுள்​ளது என்று அறப்​போர் இயக்​கம் குற்​றம்​சாட்​டியது. மேலும், விதி​முறை​களை பின்​பற்​றாமல் … Read more

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் முடிவுக்கு எதி​ராக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் மற்​றும் வழக்​கறிஞர் மிஷா ரோஹ்தகி தாக்​கல் செய்​துள்ள மனு​வில், நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் நடவடிக்கை சட்​ட​விரோத​மானது. குடியரசுத் தலை​வரது இந்த நடவடிக்​கையை ரத்து செய்து நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்புதல் அளித்​த​தாக அறிவிக்க வேண்​டும் அல்​லது … Read more

11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 11 மாவட்​டங்​களில் புதி​தாக மருத்​து​வக் கல்​லூரி​களு​டன் கூடிய மருத்​து​வ மனை​கள் கட்​டப்பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாகக் கூறி முன்னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ராக சிபிஐ விசா​ரணை கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டது. இதுதொடர்​பாக திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலம் தாலுகா முடி​கொண்​டானைச் சேர்ந்த என்​.ராஜசேகரன் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​த மனு: கடந்த அதி​முக ஆட்​சி​யில் ராம​நாத​புரம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வள்​ளூர், அரியலூர், நாகப்​பட்​டினம், விருதுநகர், திருப்​பூர், கிருஷ்ணகிரி, நீல​கிரி, நாமக்​கல், திண்​டுக்​கல் … Read more

“நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை தரக்கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது” – உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை: நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசின் புதுப்பிக்கப்பட்ட வெண்கல சிலையை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “2026 தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுர ஆகிய 2 மாவட்டங்களிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அடிமை கட்சி அதிமுக, பாசிச பாஜகவை வீழ்த்தி 2-வது முறையாக … Read more

ஐந்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளி ஊழியர் கைது..

5th Standard Student Harassed : பள்ளியின் கழிவறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த காலை உணவு திட்ட ஊழியர் கைது

‘எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு’ – நவ.17-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் என இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: “தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டும் அதிமுக, இதனைக் கண்டித்து வரும் 17-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை … Read more

4.95 கிலோ கருப்பை கட்டி ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! தனியார் மருத்துவமனை சாதனை

47 வயதுப் பெண்மணி ஒருவரது உடலில் இருந்த 4.95 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான கருப்பை நார்த்திசுக் கட்டி (Fibroid) ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

“பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு எஸ்ஐஆர் ஒரு காரணம்” – சீமான்

திருச்சி: “பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எஸ்.ஐ.ஆர் ஒரு காரணம்தான். திட்டமிட்டு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா என்கிற அச்சம் உள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பிஹாரில் நிதிஷ் குமார் தனது பெயரை கெடுத்துக் கொள்ளவில்லை. எஸ்.ஐ.ஆர் மூலம் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இன்னும் 5 மாதங்கள் … Read more

சென்னை சென்ட்ரலில் மிக பிரம்மாண்ட ப்ராஜெக்ட்… விவரம் என்ன பார்க்கலாம்?

New Central Square Tower : சென்னை சென்ட்ரலின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படும் New Central Square Tower திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது 

“தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்” – வி.பி.துரைசாமி நம்பிக்கை

நாமக்கல்: “பிஹார் தேர்தல் முடிவு தமிழகத்திலும் எதிரொலிக்கும். பாஜக, அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி நம்பிக்கை தெரிவித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பிஹார் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் விழா நாமக்கல் மணிக்கூண்டு அருகில் இன்று நடைபெற்றது. மாவட்ட பாஜ தலைவர் சரவணன் தலைமை வகித்தார். … Read more