உலக மனநல தினம்: தமிழகமெங்கும் ஈஷா சார்பில் "மிராக்கிள் ஆப் மைண்ட்" தியான நிகழ்ச்சி!

World Mental Health Day: உலக மனநல தினத்தையொட்டி ஈஷா சார்பில் தமிழகமெங்கும் “மிராக்கிள் ஆப் மைண்ட்” தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் பலர் பங்கேற்னர்.

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம்: சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரையில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை யாகப்பாநகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (31). இவரை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா மற்றும் காவலர்கள் விசாரணைக்காக வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வண்டியூர் அருகே கால்வாயில் தினேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையின் போது போலீஸார் தாக்கியதில் தினேஷ்குமார் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் நேற்று முன்தினம் அண்ணாநகர் காவல் நிலையம் அருகே சாலை மறியல் … Read more

நேர்மையான டெலிவரி பாய்! பாராட்டும் பொதுமக்கள்-நடந்தது என்ன?

Chennai Delivery Boy Gets Appreciation : டெலிவரி பாயின் நேர்மையை பாராட்டும் பொதுமக்கள்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

“திமுகவுக்கு ஜால்ரா போடுபவருக்கே காங்கிரஸில் தலைவர் பதவி” – பழனிசாமி விமர்சனம்

ஈரோடு: “நூற்றாண்டு விழா கண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. அந்தக் கட்சியில் விசுவாசமாக உள்ளவர்களுக்கு இடமில்லை. ஆனால், திமுகவுக்கு யார் ஜால்ரா போடுகிறாறோர் அவர்தான் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்குவார்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அவல்பூந்துறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: ”ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு … Read more

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது அம்பலம்

திண்டுக்கல் மருத்துவக் கல்லூரிக்கு முன்பே கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சித்து வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது.

“ராமதாஸுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன்!” – அன்புமணி ஆவேசம்

சென்னை: “பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கும் ராமதாஸை தூங்க விடுவதில்லை. அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன்” என பாமக தலைவர் ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “ஐயாவுக்கு 87 வயதை எட்டிவிட்டது என்பதால், சாதாரண பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று இருக்கிறார். இது திட்டமிட்ட பரிசோதனைதான். ஆனால் ஒரு சிலர் ஐயாவை பார்க்க வரச் சொல்லி … Read more

தமிழக அரசை கட்டம் கட்டிய நீதிமன்றங்கள்… 'ஒரே நாளில் 4 உத்தரவு' – சுட்டிக்காட்டிய அண்ணாமலை

Annamalai: திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும் நீதிமன்றங்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளதாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவு இங்கு காணலாம்.

30 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு ஹரி கிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து, படகுகளிலுந்த 30 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அக்.23 வரையிலும் நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் … Read more

ராமதாஸ் என்ன காட்சி பொருளா? ஏதாவது நடந்தால்.. தொலைச்சிடுவேன்.. அன்புமணி ஆவேசம்!

Anbumani Ramadoss: டாக்டர் ராமதாஸ் என்ன காட்சி பொருளா? என்றும் டாக்டர் ஐயாவுக்கு ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன். தொலைச்சிடுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் அவேசமாக பேசி உள்ளார். 

21 குழந்தைகள் உயிரிழக்க காரணமான இருமல் மருந்து: தமிழக அரசுக்கு அதிமுக 5 கேள்விகள்!

சென்னை: 21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் திரும்பப் பெறப்படுவதாக திமுக அரசு அறிவித்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது. இது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவில், ‘திமுக அரசுக்கு 5 கேள்விகள்: 21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்க காரணமான ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் திரும்பப் பெறப்படுவதாக திமுக அரசு அறிவித்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் … Read more