செங்கோட்டையன் டெல்லி பயணம்: அமித்ஷாவுடன் சந்திப்பா?

புதுடெல்லி: டெல்லி புறப்பட்டுச் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கெடு விதித்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை பறித்து பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும், அவருடன் கோபி, நம்பியூரைச் … Read more

கோவை டூ காஞ்சிபுரம்.. நாளை 11 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது!

Tn Weather Alert: தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 09) 11 கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நயினாரை ‘டார்கெட்’ செய்யும் டிடிவி தினகரன்: பின்னணியில் அண்ணாமலையா?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அடுத்த விக்கெட்டாக வெளியேறியிருக்கிறார் டிடிவி தினகரன். தான் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம் என்று அவர் சொன்னதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது. மேலும், அவர் அண்ணாமலையை புகழ்ந்து பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இப்போது பாஜகவின் ஒரே இலக்கு. இதன் காரணமாகவே, பல்வேறு வியூகங்கள் மூலமாக அதிமுகவை வளைத்து கூட்டணிக்குள் கொண்டு வந்தார்கள். இதையெல்லாம் விட முக்கியமாக, தங்கள் … Read more

முதல்வரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

Anbumani Ramadoss Slams MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி அடைந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

“அதிமுக கட்சியே ஆம்புலன்ஸில் செல்லும் நிலைமை விரைவில் வரும்” – உதயநிதி ஸ்டாலின் கருத்து

சென்னை: “அதிமுக கட்சி விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக மருத்துவத் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ரூ.28.75 கோடியில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மக்களை சந்தித்து வருகிறார். அவர் ஒரு … Read more

ரேஷன் கடையில் கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கோவில்பட்டியில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க நீண்ட நேரமாக வரிசையில் நின்ற கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

“பாஜக நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனை சந்திக்க தயாராக இல்லை” – கே.பி.ராமலிங்கம்

நாமக்கல்: “எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்படும் செங்கோட்டையன் உள்பட யாரையும், பாஜகவினர் சந்திக்க மாட்டார்கள்” என மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார். நாமக்கல் மாவட்டத்தில் செப்.19, 20, 21 ஆகிய நாட்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது சுற்றுப்பயணத்தில் பாஜகவினர் திரளாக பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தார். அதில், … Read more

கும்பகோண கொலை வழக்கு! 5 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு..பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Kumbakonam Murder Case : ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் பாஜக கூட்டணிக்குள் நடப்பது மன வருத்தம் அளிக்கிறது” – நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேற நான்தான் காரணம் என கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. தற்போது கூட்டணிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் எனக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சந்திர கிரகணம் இரவு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. தற்போது தமிழகத்தில் கிரகணம் பிடித்த ஆட்சி உள்ளது. அந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். கடந்த … Read more

திருப்பூர் ரிதன்யா வழக்கு: “எந்த பலனும் இல்லை..” சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன கருத்து!

Tirupur Rithanya Death Case Madras HC : திருப்பூர் ரிதன்யாவின் மரண வழக்கு குறித்த விசாரணை இன்று நடந்தது. இதில், உயர்நீதிமன்றம் சொன்ன கருத்து குறித்து இங்கு பார்ப்போம்.