பனையூர் பார்ட்டி லீடர் விட்ட டோஸ் | உள்குத்து உளவாளி

பனையூர் பார்ட்டி லீடரின் அணுகுமுறைகளில் இப்போது பெரிய அளவில் மாற்றம் தெரிகிறதாம். ‘நெரிசல்’ சம்பவத்துக்குப் பிறகு களத்தில் இருந்து காரியமாற்றி இருக்க வேண்டிய ‘மகிழ்ச்சி’ மனிதரை, எங்காவது ‘எஸ்கேப்’ ஆகிவிடும் படி ‘புஸ்’ பண்ணியது கட்சியின் ‘ஆரோக்கிய’ புள்ளிதானாம். இதை நம்பி அவர் பதுங்கு குழிக்குள் பதுங்கிக் கொண்டது பனையூர் தலைவரின் அரசியல் பிரவேசத்தையே கேலிக்குரியதாக்கும் வகையில் விமர்சனங்களை கிளப்பிவிட்டதாம். இதனால் கட்சியின் அடுத்தகட்ட நிர்வாகிகளும் என்ன செய்வது… யாரைக் கேட்பது என்று தெரியாமல் முடங்கிப் போனார்களாம். … Read more

பணி நியமன ஊழல்: கே.என். நேருவுக்கு அனைத்தும் தெரியும்… வெளியான பரபரப்பு தகவல்கள்!

TN Cash For Job Scam: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களின் வாட்ஸ்அப் உரையாடல் மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக திருட்டு வழக்கில் 3 பேர் கைது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு சம்​பவம் தொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசு வழக்​கறிஞர் வாதிடும்​போது, “சிறுநீரக திருட்டு தொடர்​பாக 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்” என்​றார். மனு​தா​ரர் தரப்​பில், “சிறுநீரக திருட்டு வழக்​கின் முதல் தகவல் அறிக்கை நகல் வழங்க வேண்​டும்” … Read more

தவெக விஜய்யுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையா…? அமித்ஷா டக்குனு சொன்ன பதில்!

Amit Shah About TVK: தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அளித்த பதிலை இங்கு விரிவாக காணலாம்.

சிக்கனமாக செலவு செய்து அஞ்சலகத்தில் சேமிப்போம்: உலக சிக்கன தினத்தில் முதல்வர் அறிவுரை

சென்னை: சிக்​க​ன​மாக செலவு செய்து அஞ்​சல​கத்​தில் சேமிக்க வேண்​டும் என்று உலக சிக்கன தினத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வலி​யுறுத்​தி​யுள்​ளனர். உலக சிக்கன தினம் இன்று அக்​.30-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்டு முதல்வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட வாழ்த்​துச் ​செய்​தி: ஒவ்​வொருவரும் தமது வரு​வா​யில் ஒரு பகு​தி​யை சேமிக்க வேண்​டும். அத்​தகைய சேமிப்​பும் பாது​காப்​பான​தாக அமைய வேண்​டும். ஒரு​வர் சேமிக்​கும் தொகை​யானது முது​மை​யில் நம்​பிக்​கை​யை​யும், பாது​காப்​பை​யும் அளிக்​கிறது. சிறுகச் சிறுகச் சேமிப்​ப​தன் மூலம் … Read more

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தலைவர்கள் வலியுறுத்தல் 

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 ​பணி​யிட நியமனங்களில் முறை​கேடு நடை​பெற்​றுள்​ள​தாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசா​ரிக்க உத்​தர​விட அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: எங்​கும் ஊழல் – எதி​லும் ஊழல். திமுக ஆட்​சி​யின் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​களில் காலி பதவி​களுக்கு புதிய ஊழியர்​களை நியமிக்க நடை​பெற்ற தேர்​வில் முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக​வும், இதில் சுமார் ரூ.800 கோடிக்கு மேல் பணப்​பரி​மாற்​றம் நடந்​துள்​ள​தாக​வும் புகார்​கள் எழுந்​துள்​ளன. இதுதொடர்​பாக அமலாக்​கத் … Read more

பசும்பொன் செல்லும் முதல்வர்: மதுரை நான்கு வழிச்சாலை தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் மயக்கம்

மதுரை: மதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்திக்கு செல்லும் தமிழக முதல்வரை வரவேற்கும் வகையில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் இருந்து மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில், அந்தந்த ஊராட்சிகள் சார்பில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் சிலைமான் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்காததால் மயங்கினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்.30-ம் தேதி நடைபெறும் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் … Read more

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பருவமழையினால் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி பெருகியுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்த ஆண்டு இதுவரை சுமார் 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; சுமார் 9 பேர் மரணமடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. குறிப்பாக … Read more

நகராட்சி நிர்வாகப் பணி நியமன முறைகேட்டில் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும்: இபிஎஸ்

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. தமிழக பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் eடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்’ என்று ஊரை அடித்து, உலையில் போடும் இந்த திமுக ஆட்சியின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த … Read more

சிபிஆர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை: போலீஸ் விளக்கத்தில் உடன்பாடு இல்லை – வானதி சீனிவாசன்

கோவை: கோவை டவுன் ஹால் பகுதியில் குடியரசு துணைத் தலைவர் பாதுகாப்பு வளையத்திற்குள் இளைஞர்கள் நுழைந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை கொடுத்த விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை சாய் பாபா காலனி பகுதியில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று நடந்த அடையாள அட்டைகள் வழங்கும் விழாவில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய … Read more