மின் வாரியத்தில் 10,000 ‘கேங்மேன்’களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?

மதுரை: மின் வாரியத்தில் 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 10,000 ‘கேங் மேன்’கள் தற்போது வரை வயர்மேன், எலக்ட்ரீஷியன் போன்ற களப்பணி உதவியாளர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் விரைவில் தேர்வு செய்யப்படும் 1,794 பேர் களப்பணி உதவியாளராக நியமிக்கப்பட உள்ளதால், ‘கேன்மேன்’களாக பணிபுரிவோர் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்வாரியத்தில் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பராமரிப்பில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மின் வாரிய ஊழியர்களுக்கு மிக அதிகமான பணிச்சுமையும், மக்களுக்குச் … Read more

சொந்த வீடு வைத்திருப்பவரா நீங்கள்? மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என சென்னை மாநகராட்சி சார்பில்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும்

திருச்சி வந்தடைந்த விஜய்: தொண்டர்கள் குவிந்ததால் பிரச்சார இடத்தை அடைவதில் தாமதம்

திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை விமான நிலையம் முதலே தொடரத் தொடங்கினர். காவல்துறை நிபந்தனைகளை எல்லாம் மீறி தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து செல்கிறது. காலை 10.35 மணிக்கு விஜய் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை … Read more

மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Diwali Gift 2025: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தீபாவளி பண்டிகையில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் விவகாரம்: சீமானுக்கு கெடு விதித்தது உச்ச நீதிமன்றம் 

புதுடெல்லி: தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக்​ கூறி பாலியல் ரீதி​யாக ஏமாற்​றி​விட்​ட​தாக நடிகரும், நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சீமான் மீது நடிகை விஜயலட்​சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசர​வாக்​கம் காவல் நிலை​யத்​தில் பாலியல் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் சீமான் மீது பாலியல் துன்​புறுத்​தல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்​குப் பதிவு செய்​திருந்​தனர். இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி சீமான் தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற … Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வடக்கு ஆந்திர – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 … Read more

குடியரசு துணைத் தலைவராகும் சி.பி. ராதாகிருஷ்ணன்! அவருக்கு கிடைக்கும் சலுகைகள்!

Cp Radhakrishnan Vice President Of India: துணைக் குடியரசுத் தலைவர் பதவி என்பது, நாட்டின் முக்கிய பதவியாக மட்டுமல்லாமல், சம்பளம், சலுகைகள் மற்றும் ஒரு கௌரவமான பொறுப்பாக திகழ்கிறது.

பொதுக்கூட்ட இடங்களில் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த டிஜிபி சுற்றறிக்கை!

மதுரை: பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என காவல் ஆணையர்கள், கண்காணிப் பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அன்று வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தபோது நோயாளி சந்திராவை அழைத்துக்கொண்டு கூட்டம் … Read more

தீபாவளி பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

Diwali Firecracker Shop License in Tamil Nadu : தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

“கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு” – திருப்பூரில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திருப்பூர்: கேபிள் டிவி சேவையில் செட்டாப் பாக்ஸ் மூலம் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருப்பூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். திருப்பூர் மாநகர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் பரப்புரையில் இன்று (செப்.9) பேசியது: ”திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக இன்றைக்கு பொறுப்பேற்றுள்ளார். இந்த மண்ணில் பிறந்தவருக்கு மிகப் பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையான, … Read more