மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தை தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு

சென்னை: மின்​மாற்​றிகளை நுகர்​வோரே வாங்க மின்​வாரி​யம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. தமிழ்​நாடு மின்​வாரி​யம் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து நுகர்​வோருக்கு விநி​யோகம் செய்து வரு​கிறது.தமிழத்​தில் தற்​போது 3.36 கோடி மின்​நுகர்​வோர் உள்​ளனர். உற்​பத்தி நிலை​யங்​களில் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரம் ஒவ்​வொரு பகு​திக்​கும் உள்ள துணை மின்​நிலை​யங்​கள் வாயி​லாக அந்த குறிப்​பிட்ட பகு​திக்கு மின்​சா​ரம் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. இந்த நேரடி மின்​னோட்​ட​மாக செல்லும் மின்​சா​ரத்தை மாற்று மின்​னோட்​ட​மாக மாற்​ற மின்​மாற்​றிகள் பயன்படுகின்றன. ஒரு சில இடங்​களில் புதி​தாக மின்​மாற்றி அமைக்க வேண்​டிய நிலை … Read more

‘முதலில் நாம் மனிதர்கள்’ – அழுகையை விமர்ச்சித்தவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

மதுரை: ‘கல்லை கடவுளாக்க தெரிந்தவனுக்கு மனிதனாக மாறத் தெரியவில்லை, முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கரூரில் அழுததை விமர்ச்சித்தவர்களுக்கு மதுரையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘தமிழ் முழக்கம் ’ மேடைப்பேச்சு – ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம் 5 நாட்கள் நடக்கிறது. இதற்கான தொடக்க விழா இன்று நடந்தது. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை ஆட்சியர் … Read more

தமிழகத்தில் பருவ மழை தீவிரமாகிறது: 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், இது​வரை 15 அணை​கள், 1,522 ஏரி​கள் நிரம்​பி​ உள்​ளன. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் அரசுத் துறை​கள் மும்​முர​மாக இறங்கி உள்​ளன. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த அக்​.16-ம் தேதி தொடங்​கியது. அன்று முதல் தமிழகம் முழு​வதும் பரவலாக மழை பெய்து வரு​கிறது. நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில், தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 2 இடங்​களில் அதி கனமழை​யும், 23 இடங்​களில் மிக கனமழை, … Read more

நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

தஞ்சாவூர்/ திருவாரூர்: ‘‘நெல் கொள்​முதல் செய்​வ​தில் தமிழக அரசு தோல்வி அடைந்​து​விட்​டது’’ என்று அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். டெல்டா மாவட்​டங்​களில் குறுவை அறு​வடை பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அறு​வடை செய்​யப்​பட்ட நெல்லை கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகள் விற்​பனை செய்ய கொண்​டு​வந்து குவித்​துள்​ளனர். லாரி​கள் போதிய அளவு இல்​லாத​தால், கொள்​முதல் நிலை​யங்​களில் ஆயிரக்​கணக்​கான நெல் மூட்​டைகள் தேங்​கி​யுள்​ளன. அவ்​வப்​போது மழை பெய்​வ​தால், நெல்​லின் ஈரப்​ப​தம் 17 சதவீதத்​துக்கு மேல் அதி​கரித்​துள்​ளது. இதனால், … Read more

தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? வானிலை மையம் அப்டேட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

திருப்பத்தூர் மழை பாதிப்பு: மூதாட்டி உயிரிழப்பு, 16 வீடுகள் சேதம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். 4 கால் நடைகள் உயிரிழந்தன. 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கனமழையும், சில நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழக – ஆந்திர எல்லை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வாணியம்பாடி அருகேயுள்ள புல்லூர் … Read more

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது – ரிசல்ட்டை பார்ப்பது எப்படி?

TNPSC Group 4 Exam Result: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தளத்தில் உங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

கடலூர் கனமழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்தனர். கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, வேப்பூர், பண்ருட்டி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, காட்டு மன்னார் கோவில், தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகர், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. புவனகிரி, … Read more

இரவில் வெளுக்கப்போகும் மழை.. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. உஷார் மக்களே!

Tamil Nadu weather warning: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

‘நல்ல மகசூல் கிடைத்தும் வீண்…’ – டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு மழை பெய்தும், காய்ந்தும் குறுவை சாகுபடி கெட்ட நிலையில், நிகழாண்டு நன்கு விளைச்சல் அடைந்தும் கெட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த சாகுபடிக்கு தேவையான தண்ணீரை பம்பு செட் மூலமும், காவிரி ஆற்றின் பாசனத்தின் மூலமும் பெற்று சாகுபடியை மேற்கொள்கின்றனர். இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி … Read more