முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி சென்னையில் மழை முன்னெச்சரிக்கையாக 215 முகாம்கள் அமைப்பு

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை முன்​னெச்சரிக்கை நடவடிக்​கை​யாக சென்​னை​யில் 215 நிவாரண முகாம்​கள் அமைக்கப்பட்டு, 1.47 லட்​சம் பேருக்கு காலை உணவு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அக்​.16-ம் தேதி வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கியது. இதையடுத்து தமிழகம் முழு​வதும் பரவலாக மழை பெய்து வரு​கிறது. இதனால் பொது​மக்​கள் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, அனைத்து பாது​காப்பு நடவடிக்​கைகளை​யும் உடனடி​யாக மேற்​கொள்ள மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். மேலும் அக்​.19-ம் தேதி சென்னை எழில​கத்​தில் மாநில அவசர​கால செயல்​பாட்டு மையத்​திலிருந்து … Read more

ரேஷன் கார்டு வைத்துள்ள கள்ளக்குறிச்சி மக்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு

Ration Card : ரேஷன் கார்டு வைத்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் மனிதநேய மக்கள் கட்சி

மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக 2009-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2009 மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 3 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது ஆம்பூர், ராமநாதபுரம் தொகுதிகளில் அக்கட்சிக்கு வெற்றி கிட்டியது. 2014 மக்களவை மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிட்டது மமக. 2019 மற்றும் 2024 மக்களவை … Read more

பெரியார் சிலை மீது கை வைத்தால் கை துண்டாகும் – வைகோ கடும் எச்சரிக்கை

Vaiko : “பெரியார் சிலையை உடைப்பேன் என நினைத்தால் கை துண்டாக்கப்படும்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்மாற்றிகள் வாங்க நுகர்வோருக்கு அனுமதி: காலதாமதத்தை தவிர்க்க மின்வாரியம் ஏற்பாடு

சென்னை: மின்​மாற்​றிகளை நுகர்​வோரே வாங்க மின்​வாரி​யம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. தமிழ்​நாடு மின்​வாரி​யம் மின்​சா​ரம் உற்​பத்தி செய்து நுகர்​வோருக்கு விநி​யோகம் செய்து வரு​கிறது.தமிழத்​தில் தற்​போது 3.36 கோடி மின்​நுகர்​வோர் உள்​ளனர். உற்​பத்தி நிலை​யங்​களில் உற்​பத்​தி​யாகும் மின்​சா​ரம் ஒவ்​வொரு பகு​திக்​கும் உள்ள துணை மின்​நிலை​யங்​கள் வாயி​லாக அந்த குறிப்​பிட்ட பகு​திக்கு மின்​சா​ரம் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. இந்த நேரடி மின்​னோட்​ட​மாக செல்லும் மின்​சா​ரத்தை மாற்று மின்​னோட்​ட​மாக மாற்​ற மின்​மாற்​றிகள் பயன்படுகின்றன. ஒரு சில இடங்​களில் புதி​தாக மின்​மாற்றி அமைக்க வேண்​டிய நிலை … Read more

‘முதலில் நாம் மனிதர்கள்’ – அழுகையை விமர்ச்சித்தவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

மதுரை: ‘கல்லை கடவுளாக்க தெரிந்தவனுக்கு மனிதனாக மாறத் தெரியவில்லை, முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கரூரில் அழுததை விமர்ச்சித்தவர்களுக்கு மதுரையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘தமிழ் முழக்கம் ’ மேடைப்பேச்சு – ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம் 5 நாட்கள் நடக்கிறது. இதற்கான தொடக்க விழா இன்று நடந்தது. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை ஆட்சியர் … Read more

தமிழகத்தில் பருவ மழை தீவிரமாகிறது: 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், இது​வரை 15 அணை​கள், 1,522 ஏரி​கள் நிரம்​பி​ உள்​ளன. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​களில் அரசுத் துறை​கள் மும்​முர​மாக இறங்கி உள்​ளன. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை கடந்த அக்​.16-ம் தேதி தொடங்​கியது. அன்று முதல் தமிழகம் முழு​வதும் பரவலாக மழை பெய்து வரு​கிறது. நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில், தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 2 இடங்​களில் அதி கனமழை​யும், 23 இடங்​களில் மிக கனமழை, … Read more

நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வி: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

தஞ்சாவூர்/ திருவாரூர்: ‘‘நெல் கொள்​முதல் செய்​வ​தில் தமிழக அரசு தோல்வி அடைந்​து​விட்​டது’’ என்று அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். டெல்டா மாவட்​டங்​களில் குறுவை அறு​வடை பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அறு​வடை செய்​யப்​பட்ட நெல்லை கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகள் விற்​பனை செய்ய கொண்​டு​வந்து குவித்​துள்​ளனர். லாரி​கள் போதிய அளவு இல்​லாத​தால், கொள்​முதல் நிலை​யங்​களில் ஆயிரக்​கணக்​கான நெல் மூட்​டைகள் தேங்​கி​யுள்​ளன. அவ்​வப்​போது மழை பெய்​வ​தால், நெல்​லின் ஈரப்​ப​தம் 17 சதவீதத்​துக்கு மேல் அதி​கரித்​துள்​ளது. இதனால், … Read more

தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? வானிலை மையம் அப்டேட்!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

திருப்பத்தூர் மழை பாதிப்பு: மூதாட்டி உயிரிழப்பு, 16 வீடுகள் சேதம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். 4 கால் நடைகள் உயிரிழந்தன. 16 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கனமழையும், சில நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழக – ஆந்திர எல்லை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வாணியம்பாடி அருகேயுள்ள புல்லூர் … Read more