மாண்புமிகுக்களின் ‘மணி’ விஷயம் | உள்குத்து உளவாளி

தங்களுக்கு மட்டுமல்லாது தங்கள் பகுதியில் உள்ள சில பல தொகுதிகளுக்கும் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிற அளவுக்கு சில மாண்புமிகுக்கள் ‘மணி’ விஷயத்தில் கொஞ்சம் மதமதப்பாக இருப்பார்கள். அப்படியான மதமதப்பு புள்ளிகளை எல்லாம் லிஸ்ட் எடுத்திருக்கும் டெல்லி தலைமை, சமயம் பார்த்து அவர்களை சுற்றி ‘வளைத்து’ நெருக்கடியை உண்டாக்கத் தயாராக இருக்கிறதாம். முக்கியமாக, ஆன்மிக புகழ்பெற்ற இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாண்புமிகு தலைவர்கள் இருவரையும், கரூர் கம்பெனியாரையும் முன்னமே கண்காணிப்பில் வைத்திருக்கிறார்களாம், இந்த இம்சைகள் எல்லாம் … Read more

வெளுத்து வாங்கப்போகும் மழை.. 10 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை! விரைத்த பேரிடர் மீட்பு குழு

TN Weather Update: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்பு குழு 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். 

டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவு தெரிந்து விடும்: டிடிவி.தினகரன் புதுக் கரடி

எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை. அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை. அதுபோல், அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வரமுடியாது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியதாவது: பிஹார் தேர்தலுக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமில்லை. அதனால் அம்மாநில தேர்தல் முடிவுகள் … Read more

விஜய் என் புத்தக்கத்தை படித்தால்… SIR போராட்டத்தை நிறுத்திவிடுவார் – தமிழிசை தடாலடி

Tamilisai Soundararajan: நான் எழுதிய எஸ்ஐஆர் குறித்த புத்தகத்தை படித்தால் விஜய் ஆர்ப்பாட்டமே வேண்டாம் என முடிவு செய்வார் என தமிழிசை சௌந்தரராஜன் பேசி உள்ளார். 

எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய்

தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்குரிமை என்பது ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. இதைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்ட உடனே, எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் யாருக்குமே ஓட்டு போடும் உரிமையே இல்லை என்று கூறி … Read more

வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நம்பிக்கை 

மதுரை: பெண் வழக்​கறிஞர்​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால், வருங்​காலத்​தில் பெண் நீதிப​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தெரி​வித்​தார். உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞர்​கள் சங்​கம் (எம்​பிஏ) சார்​பில், நீதித்​துறை தேர்​வுக்​குத் தயா​ராகி வரும் இளம் வழக்​கறிஞர்​களுக்​கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. சங்​கத் தலை​வர் எம்​.கே.சுரேஷ் தலைமை வகித்​தார். செயலர் ஆர்​.வெங்​கடேசன் வரவேற்​றார். பயிற்சி வகுப்​பைத் தொடங்​கி​வைத்து உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் … Read more

நீட் விலக்கு மசோதா: ஜனாதிபதியை எதிர்த்து… உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

NEET Exemption Bill: நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து குடியரசுத் தலைவர் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயன்பெறும் வகையிலான இந்த திட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 3 ஷிப்ட்களில் பணியாற்றும் 31,373 தூய்மைப்பணியாளர்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூய்மைப் பணியாளர்களுக்கு … Read more

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை. அதிகாரிகள் மீது வழக்கு

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கீழ் செயல்​படும் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களுக்கு முறை​கே​டாக அங்​கீ​காரம் வழங்​கியது தொடர்​பாக, அண்ணா பல்கலைக்கழக அதிகாரி​கள் உள்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்​புத் துறை வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் கீழ் 470-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன. இதற்​கிடையே 224 தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​களில் 353 ஆசிரியர்​கள் ஒரே நேரத்​தில் ஒன்​றுக்​கும் மேற்​பட்ட கல்​லூரி​களில் பணிபுரிவ​தாக கணக்கு காட்​டப்​பட்​டுள்​ளது என்று அறப்​போர் இயக்​கம் குற்​றம்​சாட்​டியது. மேலும், விதி​முறை​களை பின்​பற்​றாமல் … Read more

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் முடிவுக்கு எதி​ராக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் மற்​றும் வழக்​கறிஞர் மிஷா ரோஹ்தகி தாக்​கல் செய்​துள்ள மனு​வில், நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலை​வரின் நடவடிக்கை சட்​ட​விரோத​மானது. குடியரசுத் தலை​வரது இந்த நடவடிக்​கையை ரத்து செய்து நீட் விலக்கு மசோ​தாவுக்கு ஒப்புதல் அளித்​த​தாக அறிவிக்க வேண்​டும் அல்​லது … Read more