அதிமுக துரோகம் இழைத்ததா? தேமுதிக கூட்டணியில் உள்ளது – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

Edappadi Palanisamy : கோவை விமான நிலையத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக தெரிவித்துள்ளார்.   

ஒரு வாரத்துக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி: தென்காசியில் மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் இன்று (ஜூன் 1) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக மழை தீவிரம் அடைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழையும், பிற பகுதிகளில் லேசான … Read more

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதா? – அன்புமணி கண்டனம்

சென்னை: தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்துக்கான புதிய ரயில் பாதை திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்: “தமிழ்நாட்டில் திண்டிவனம் – திருவண்ணாமலை, சென்னை – மாமல்லபுரம்- கடலூர் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.728 கோடியை ரயில்வே … Read more

அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம் – ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

உண்மையும், நேர்மையும் கொண்ட  ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒட்டி தேமுதிகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்: பிரேமலதா சூசகப் பேச்சு

சென்னை: “அரசியல் பயணம் தேர்தலை ஒட்டியே இருக்கும் என்பதால், தேமுதிகவின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்” என்று தேசிய முற்போக்கு திராவிட கழக்கத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2026 மாநிலங்களவைத் தேர்தலில்தான் தேமுதிகவுக்கு சீட் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னையில் இன்று (ஜூன் 1) தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் ஏற்கெனவே உறுதி அளிக்கப்பட்டது. … Read more

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி; தேமுதிகவுக்கு 2026-ல் சீட் என உறுதி!

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும், கூட்டணியில் தொடரும் தேமுதிகவுக்கு 2026-ல் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. இதனை, இன்று (ஜூன்.1) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிவித்தனர். தமிழகம் சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, பி.வில்சன், எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, அன்புமணி ராமதாஸ், என்.சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் … Read more

மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவின் 2 வேட்பாளர்கள் அறிவிப்பு… அப்போ தேமுதிகவுக்கு…?

Rajya Sabha Election 2025: அதிமுக சார்பில் போட்டியிட உள்ள மாநிலங்களவை அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். வழக்கறிஞர் இன்பதுரை , தனபால் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கே.கே.நகரில் விதிகளை மீறி செயல்பட்ட வணிக வளாகத்துக்கு சீல்

கே.கே.நகரில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த பிரபல வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம், 136-வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில் பிரபல வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் கட்டுவதற்காக மாநகராட்சி வழங்கிய அனுமதியில், இதன் தரை தளத்தை வாகன நிறுத்தமாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அங்கு கடை நடத்தி வந்ததை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து, விதிமீறலில் … Read more

மதுரையில் 48 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக பொதுக்குழுக் கூட்டம்: 22 கி.மீ. ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் ஸ்டாலின்

மதுரையில் நேற்று மாலை 22 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் இன்று காலை நடைபெறும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். மாலை 5.30 மணியளவில் பெருங்குடி பெரியார் சிலை அருகில் ரோடு ஷோவை தொடங்கினார். வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவா நகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் சாலை, காளவாசல், குரு … Read more

ராமதாஸ் – அன்புமணி பிரச்சினைக்கு நானோ அல்லது பிற கட்சிகளோ காரணம் என்பதை ஏற்க முடியாது: ஜி.கே.மணி

அன்புமணி-ராமதாஸ் இடையேயான பிரச்சினைக்கு பிற கட்சிகள்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்களுக்கும் (செய்தியாளர்களுக்கும்), கட்சியினருக்கும் தெரியாமல் எங்கேயாவது சென்றுவிடுவது அல்லது உயிருடன் இருக்கக்கூடாது என்று இரு முடிவுகளை நான் எடுத்துள்ளேன். அந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 45 ஆண்டுகளாக … Read more