அதிபர் தேர்தல் | மீண்டும் எர்டோகன் வென்றிருக்கிறார்… ஆனால் துருக்கி மாறியிருக்கிறது!

அங்காரா: துருக்கியை 21 ஆண்டுகள் ஆட்சி செய்த எர்டோகன் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அடுத்த ஐந்து வருடங்களுக்கான ஆட்சி பொறுப்பை ஏற்கவுள்ள எர்டோகனின் வெற்றியை அடுத்து அவரது ஆதரவாளர்கள் தலைநகர் அங்காரா உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் 5 சதவீத ஓட்டு வித்தியசாத்தியத்தில் அதிபர் பதவிக்கான வெற்றியை தவறவிட்ட துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லு, எர்டோகனின் வெற்றியை ”நியாயமில்லாத தேர்தல்” என்று … Read more

பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பாதிப்பு!

பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோ மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து திரும்பும் போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பெலாரசின் எதிர்க்கட்சித் தலைவரர் வலேரி செப்காலோ தெரிவித்துள்ளார்.அவரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில்,அவரது உடல் நலம் பற்றிய வதந்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. பெலாரசின் சர்வாதிகாரத் தலைவரான 68 வயதான லுக்காஷென்கோ அதிபர் புதினின் நம்பகமான நெருங்கிய நண்பராகக் கருதப்படுகிறார். அணு ஆயுதங்களை அண்மையில் … Read more

தரையிறங்கும் போது திடீரென வெடித்த விமானத்தின் சக்கரங்கள்.. எகிப்து ஏர் விமானத்தில் பரபரப்பு..!

சவூதி அரேபியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த எகிப்து ஏர் விமானத்தின் சக்கரங்கள் தரையிறக்கும்போது அதன் சக்கரங்கள் திடீரென வெடித்ததால் பரபரப்பு நிலவியது. ஆயினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் உயிர்தப்பினர். கெய்ரோவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சவூதியின் கடற்கரை நகரான ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசீஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் தரையிறங்கியது. Source link

துருக்கி அதிபர் தேர்தல் 2023: மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எர்டோகன்

அங்காரா: துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார். 69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன்பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி … Read more

சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருகிறது – அமைச்சர் ஜெய்சங்கர்!

சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை சந்தித்து வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இருநாட்டு நல்லுறவு என்பது சமநிலையில் ஏற்பட வேண்டும் என்றும் அடுத்த நாட்டின் விருப்பம் போல அமைய முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அனந்த் தேசிய பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய ஜெய்சங்கர், கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவுடனான எல்லைப் பிரச்சினை வெளிப்படையாக உள்ளது என்றார்.எல்லையில் அமைதி குறைந்தால் இருநாடுகளின் நல்லுறவு நீடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். எல்லையில் முந்தைய … Read more

பாகிஸ்தானில் பனிச்சரிவு – நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் சம்பெலி பகுதியில் உள்ள ஷவுண்டர் மலைப்பாதை ஆசாத் காஷ்மீர் எல்லைப்பகுதியையும், கில்ஜித் பகுதியின் அஸ்டோர் மாவட்டத்தையும் இணைக்கிறது. இந்த பாதையை நாடோடி பழங்குடி இன மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஷவுண்டர் மலைப்பாதையில் இன்று திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 4 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தினத்தந்தி Related … Read more

துருக்கி தேர்தல்… 20 வருட கால அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் எர்டோகன்!

உலக நாடுகள் துருக்கி தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. காரணம் துருக்கி நேட்டோ நாடுகளின் ஒரு அங்கம் என்பதுடன், அதன் நிலப்பரப்பு அமைந்துள்ள இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்று கூறப்பட்டாலும்,  ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான். 

பல்கலை பட்டமளிப்பு விழாவில் 2,500 பட்டதாரி மாணவர்களுக்கு தலா 1,000 அமெரிக்க டாலர் பரிசு.. அசத்திய அமெரிக்க கோடீஸ்வரர்..!

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அமெரிக்க கோடீஸ்வரர் ராபர்ட் ஹேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டம் பெற்ற 2 ஆயிரத்து 500 பட்டதாரி மாணவர்களுக்கு தலா ஆயிரம் டாலர் பரிசாக வழங்கினார். மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், Granite Communications நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் ஹேல் பங்கேற்று, சிறப்புரையாற்றி பட்டம் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து, பட்டதாரி மாணவர்களுக்கு தலா 500 டாலர் கொண்ட இரு கவர்களை பரிசாக வழங்கினார். அந்த … Read more

எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டவை ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி … Read more