அமெரிக்காவில் 17 சீக்கியர்கள் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் வன்முறையில் ஈடுபட்ட 17 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஸ்டாக்டன் நகரில் குருத்வாரா அமைந்துள்ளது. கடந்த ஆண்டு அந்த வழிபாட்டுத் தலத்தில் நடைபெற்ற விழாவின்போது இரு சீக்கிய குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாணம், யுபா நகர போலீஸார் விசாரணை நடத்தி 17 சீக்கியர்களை கைது செய்துள்ளனர். இதுகுறித்து சட்டர் கவுன்டி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜெனிபர் … Read more

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக இம்ரான் கட்சி எம்.பி. தேர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சவுத்ரி அன்வருல் ஹக் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ‘பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் (பிடிஐ)’ கட்சியை சேர்ந்த சர்தார் தன்வீர் இலியாஸ் கான் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “நீதித்துறையால் அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. தடை உத்தரவுகள் மூலம் அரசின் செயல்பாடுகளில் நீதித்துறை குறுக்கிடுகிறது” … Read more

உக்ரைன் போர்: தவறுதலாக சொந்த நகரிலேயே குண்டு வீசிய ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் விமானம் தவறுதலாக தங்களது நகரிலேயே குண்டு வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் போர் விமானம் Su-34 , உக்ரைனின் எல்லைப்புறத்தில் உள்ள பெல்கோரோட் நகரில் தவறுதலாக குண்டு வீசியது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து பிராந்திய ஆளுநர் கிளாகோவ் கூறும்போது, ”ரஷ்யா வீசிய குண்டால் நகரத்தின் மையப் பகுதியில் பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். பல … Read more

ராணுவத்திடம் பணிந்தது துணை ராணுவம்? சூடானில் தற்காலிக போர் நிறுத்தம் அமல்.. என்ன நடக்கிறது?

கார்ட்டோம்: சூடானில் ராணுவம், துணை ராணுவத்துக்கு இடையே நடைபெற்று வந்த பயங்கர போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்தராமையா கர்நாடகா காங்கிரஸின் கதாநாயகன் ஆனது எப்படி? ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பெரிய நாடுகளில் ஒன்றான சூடானில் உள்நாட்டு போர் உச்சத்தை எட்டியுள்ளது. இங்கு அதிபர் அல் பஷீர் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த சூழலில், சூடான் ராணுவமும், … Read more

6 மாத இடைவெளிக்குப்பின் சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை..!!

கோலாலம்பூர், சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி போதைப்பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்கராஜு … Read more

சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம்: ஐ.நா. அழைப்பை ஏற்றது ராணுவம், துணை ராணுவம்

கார்த்தும்: சூடானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் 72 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். மக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாகவும், விரும்புவோர் வேறு இடங்களுக்கு பெயரத் தோதாகவும் 72 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. இதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவமும், துணை ராணுவப்படையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் செய்தியாளர்களிடன் கூறுகையில், “சூடான் கலவரம் தொடர்பாக … Read more

போருக்கு பின்னர் முதன்முறையாக நேட்டோ பொதுச்செயலாளர் உக்ரைன் பயணம்

கீவ், உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்தது. இது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதி ரஷியா ஆரம்பம் முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உக்ரைன் அதன் முடிவில் உறுதியாக இருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி 1 வருடம் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேட்டோ அமைப்பின் பொதுச் … Read more

தீவிரவாதத்துக்கு நிதி வழங்கிய வழக்கில் இந்திய வம்சாவளி ஆடிட்டர் இங்கிலாந்தில் கைது

லண்டன்: தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆடிட்டர் சுந்தர் நாகராஜன் (65) கைது செய்யப்பட்டார். லெபனானை சேர்ந்த தொழிலதிபர் நசீம் அகமது (50). இவர் அமெரிக்காவில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதோடு விலை உயர்ந்த கலை பொருட்களையும் விற்பனை செய்து வந்தார். இதில் கிடைத்த வருவாயை, லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புக்கு நசீம் அகமது வழங்கி வந்தார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்திருந்தது. … Read more

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 17 சீக்கியர்களில் 2 பேர் மீது இந்தியாவில் கொலை வழக்கு..!!

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராக்களில், கடந்த மாதம் மற்றும் கடந்த 2022-ம் ஆண்டில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தன. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், வடக்கு கலிபோர்னியாவின் பல பகுதிகளில் போலீசார் சமீபத்தில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பயங்கர ஆயுதங்களுடன் 17 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் 2 குழுக்களாக இயங்கி வந்ததும், அவர்களுக்கு … Read more

கோவாவில் நடைபெறும் எஸ்சிஓ கூட்டத்தில் பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பங்கேற்பு

இஸ்லாமாபாத்: கோவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ பங்கேற்பார் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை 2001-ம் ஆண்டு உருவாக்கின. அடுத்த சில ஆண்டுகளில், இந்த அமைப்பு பிராந்தியங்களுக்கு இடையேயான வலுவான சர்வதேச அமைப்பாக உருவெடுத்தது. இந்த அமைப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 2017-ம் ஆண்டில் நிரந்தர … Read more