அபுதாபியில் ஐ.ஐ.எஃப்.ஏ. விருதுகள் – நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது..!

அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்கான சாதனையாளர் விருதை கமல்ஹாசனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார். நிகழ்ச்சியில், திரிஷ்யம் 2 படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது. விக்ரம் வேதா படத்திற்காக சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோஷனுக்கும், கங்குபாய் கத்தியவாடி படத்திற்காக சிறந்த நடிகையாக ஆலியா பட்டுக்கும் விருது வழங்கப்பட்டது. விழா … Read more

போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீன பயணிகள் விமானம்…!

பிஜீங், போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய 2 நிறுவனங்களும் பயணிகள் விமான தயாரிப்பில் முன்னிலையில் உள்ளன. உலகில் செயல்பாட்டில் உள்ள பயணிகள் விமானங்கள் பெரும்பாலும் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்பே ஆகும். இந்நிலையில், போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக சீனா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தை களமிறக்கியுள்ளது. சி919 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பயணிகள் விமானம் இன்று வெற்றிகரமாக முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளது. 164 இருக்கைகளை கொண்ட இந்த விமானம் இன்று ஷாங்காயில் இருந்து 128 பயணிகளுடன் புறப்பட்டு … Read more

மூச்சு திணறலால் திறந்தேன்… நடுவானில் விமான கதவை திறந்த நபரால் பரபரப்பு

சியோல், தென்கொரியாவில் தெற்கு தீவு பகுதியான ஜீஜு நகரில் இருந்து டேகு நகருக்கு ஆசியானா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ321 என்ற ஏர்பஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. விமானத்தில், போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த தடகள வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 194 பயணிகள் இருந்து உள்ளனர். விமானம் டேகு விமான நிலையம் நோக்கி 700 அடி உயரத்தில் பறந்து சென்று கொண்டிருந்தபோது, நடுவானில், 33 வயது நபர் ஒருவர் திடீரென விமான … Read more

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரியாக வான்வழித் தாக்குதல்..!

கீவ் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நள்ளிரவு கீவ் நகரில் ரஷ்யா சரமாரியாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. ஆண்டுதோறும் மே மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கீவ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கீவ் தினத்தை கொண்டாடும் வகையில் கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தலைநகர் கீவில் நள்ளிரவுக்கு பிறகு நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில், ஒருவர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவின் 20 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் … Read more

ஜெல்லிமீன் வடிவிலான நட்சத்திர மண்டலத்தின் அமைதியான காட்சியை படம்பிடித்தது ஹப்பிள் தொலைநோக்கி..!

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, ஜெல்லிமீன் வடிவிலான நட்சத்திர மண்டலத்தின் அமைதியான காட்சியை படம்பிடித்துள்ளது. கோமா பெரனிசஸ் விண்மீன் தொகுப்பில் 900 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த JW38 ஜெல்லிமீன் நட்சத்திர கூட்டத்தின் ஒளிரும் மையம், ஒளி மற்றும் இருண்ட பொருளின் செறிவான வளையங்களால் சூழப்பட்டுள்ளது. விண்மீன் மண்டலத்தின் சுழல் கட்டமைப்புகள் அடர்த்தியான சாம்பல் நிற தூசிகளால் சூழப்பட்டுள்ளதாகவும், ஒளிரும் நீல நிற புள்ளிகள், நட்சத்திரங்கள் உருவாகும் பகுதிகளைக் குறிப்பதாகவும் நாசா விளக்கம் அளித்துள்ளது. பார்ப்பதற்கு … Read more

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் இன்று நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் பைய்ஜாபாத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. பூமிக்கடியே 79 கிலோ மீட்டர் தூர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள கட்டிடங்கள் பலமாக குலுங்கின. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. Source link

துருக்கியில் இன்று மீண்டும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு..!

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் இன்று மீண்டும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியமான தேர்தலாக பார்க்கப்படும் இந்தத் தேர்தலில், கடந்த 14-ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் அந்நாட்டு சட்டப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெறாததால் இன்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிபர் தாயிப் எர்டோகனை எதிர்த்து, 6 எதிர்க்கட்சிகள் சார்பில் பொது … Read more

Chinas first domestically built passenger plane successfully makes its maiden commercial flight | சீனா உருவாக்கிய முதல் பயணிகள் விமானம்: சேவை துவக்கம்

பெய்ஜிங்: சீனா சொந்தமாக உருவாக்கி உள்ள பயணிகள் விமானம் இன்று முதல் சேவையை துவங்கியது. சீனா முதன்முறையாக உள்நாட்டிலேயே சி919 என்ற பெயரில் புதிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 160 பேர் பயணிக்க முடியும். இதில் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் மற்றும் குறைந்த இயக்கச் செலவுகளை மேம்படுத்தும் முறை என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட … Read more

Japan and Tamil Nadu are very connected: Chief Minister Stalins speech in Tokyo | “ஜப்பானுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு மிக அதிகம்”: டோக்யோவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்யோ: ஜப்பானுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு மிக அதிகம் என டோக்யோ நகரில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார். ஜப்பானில் டோக்யோ நகரில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழை காப்பது தமிழினத்தை காப்பதாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வணிகத்திற்காக ஜப்பான் சென்றுள்ளனர். தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜப்பான் தமிழர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சி. என்றைக்கும் உங்களில் ஒருவனாக … Read more

பாலி கோவிலில் நிர்வாணமாக திரிந்து பரபரப்பை ஏற்படுத்திய ஜெர்மன் பெண்!

பாலியில் உள்ள ஒரு கோவிலில், ஜெர்மன் பெண் ஒருவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்டார். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.