கேமரூன் நாட்டில் பஸ்-லாரி மோதலில் 16 பேர் சாவு

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் டூவாலா- ஈடியா நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். லிட்டோரல் பகுதி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. இதனால் எதிரே வந்த லாரி மீது பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் … Read more

சியுங் சாவ் தீவில் நடைபெற்ற வண்ணமயமான பன் திருவிழா… 60 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட பன் கோபுரம்

ஹாங்காங்கின் சியுங் சாவ் தீவில் வண்ணமயமான பன் திருவிழா நடைபெற்றது. 60 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட பன் கோபுரத்தில் ஏறிய 12 வீரர்கள், தங்களால் இயன்ற அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பன்களை கோபுரத்திலிருந்து பறித்தனர். கோபுரத்தின் உச்சியில் உள்ள பன்னை வெற்றிகரமாக பறிக்கும் நபர், அவரின் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பன் திருவிழா, கொரோனா காரணமாக 4 வருட இடைவெளிக்கு பிறகு … Read more

2-year-old given life for possessing Bible | பைபிள் வைத்திருந்ததற்காக 2 வயது குழந்தைக்கு ஆயுள்

வாஷிங்டன்,-வட கொரியாவில், ‘பைபிள்’ வைத்திருந்ததற்காக, 2 வயது குழந்தை உட்பட பல கிறிஸ்துவர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றம் சாட்டி உள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, அணு ஆயுத விவகாரத்தில் முட்டல் மோதல் நிலவி வருகிறது. இதனால், இந்த இரு நாடுகளுக்கு இடையே எந்த உறவும் இல்லை. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: வட கொரியாவில், … Read more

தைவான் எல்லையில் சீன போர் விமானங்கள் அத்துமீறல்

சீனா எச்சரிக்கை சீனாவில் 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின்னர் தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் கூறி வருகிறது. அதுமட்டுமின்றி தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரபூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தைவானை தனி நாடாக செயல்பட விடவேண்டும் என சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது. அதன்படி தைவானுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் … Read more

பைபிள் வைத்திருந்த 2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த வடகொரியா

வடகொரியா வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. தீவிரமான கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடான அங்கு ஊடகங்களின் செய்திகூட அரசின் தணிக்கைக்குப் பின்புதான் வெளியாகும். அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையும் முன்னாள் அதிபருமான 2-ம் கிம் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். அவர் உயிரிழந்த 2 நாட்களுக்குப் பின்புதான் அந்த செய்தி வெளியுலகிற்கே தெரிந்தது. ஆதலால் வடகொரியாவிலிருந்து எளிதாக எந்த செய்தியும் கசிந்துவிடாது. மேலும் அங்கு அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைல் ஈடுபடும் … Read more

அமெரிக்காவை சேர்ந்த 12 வயது சிறுவன் 5 பட்டங்கள் பெற்று புதிய சாதனை

அமெரிக்காவில் 12 வயதே ஆன குளோவில் ஹங் என்ற சிறுவன்,  5 பட்டங்கள் பெற்று, மிகச்சிறிய வயதில் அதிக பட்டம் பெற்ற  நபர் என்ற சாதனையை படைத்துள்ளார். கலிபோர்னியாவில் உள்ள புல்லர்டன் கல்லூரியில் பயிலும் அவர், வரலாறு, சமூக அறிவியல், சமூக நடத்தை மற்றும் சுய முன்னேற்றம், கலை மற்றும் மனித உணர்வுகள், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய 5 பாடங்களில் பட்டங்கள் வாங்கியுள்ளார். அடுத்த ஆண்டு மேலும் ஒரு பட்டப்படிப்பை முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து … Read more

Pakistan in crisis: Military rule four times in 75 years | நெருக்கடியில் பாக்., : 75 ஆண்டுகளில் நான்கு முறை ராணுவ ஆட்சி :

இஸ்லாமாபாத்,-பாகிஸ்தானின், 75 ஆண்டு கால வரலாற்றில், அந்நாடு நான்கு சர்வாதிகாரிகளின் பிடியில் சிக்கி, 32 ஆண்டுகள் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. நான்கு முறை ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது; மூன்று முறை அரசியலமைப்பு சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன; மூன்று முறை இந்தியாவுடன் போர் புரிந்து தோல்வி அடைந்துள்ளது. தற்போது அங்கு நிலவி வரும் அரசியல் நெருக்கடியால், அந்நாடு மீண்டும் ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பாக்., முஸ்லிம் லீக் … Read more

ஜப்பானில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்…தொழிற்சாலையை விரிவுபடுத்த கோரிக்கை

ஜப்பான், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது, ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையைப் பார்வையிட்டார். தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள, மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திடவும் கோரிக்கை … Read more

சீனாவின் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் ஓட்டுநர் இல்லாத கார் அறிமுகம்..!

தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் நடைபெற்றுவரும் சர்வதேச பிக் டேட்டா இண்டஸ்ட்ரி எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாத கார் பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகிறது. விசாலமான கேபின் உள்ள இந்த கார், ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுநர் இருக்கை இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் 4 லேசர் ரேடார்கள், 7 கேமராக்கள் மற்றும் 12 மில்லிமீட்டர்-அலை ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் சிறிய ரோந்து கார்கள் தவிர, 3டி பிரிண்டர் மற்றும் … Read more

Recommendation for Indias inclusion in NATO Plus | நேட்டோ பிளஸ் அமைப்பில் இந்தியாவை சேர்க்க பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : ‘நேட்டோ பிளஸ்’ அமைப்பை வலுப்படுத்தும் விதமாக, அதில் இந்தியாவையும் சேர்க்க, அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பு ‘நேட்டோ’ ஆகும். இந்த அமைப்புடன் இணைந்து, உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க, அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் ஐந்து நட்பு நாடுகளை ஒன்றிணைக்கும் ஏற்பாடாக ‘நேட்டோ பிளஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், பசிபிக் தீவு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிழக்காசிய … Read more