‘வரலாற்றுத் தருணம்’ – நேட்டோவில் பின்லாந்து இணைவதால் ரஷ்யாவுக்கு நெருக்கடி

பிரஸ்ஸல்: நேட்டோ அமைப்பில் 31-வது நாடாக பின்லாந்து இணைய இருப்பதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறும்போது, “நேட்டோ அமைப்பில் 31-வது நாடாக பின்லாந்து இணைய உள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வாரம். வரும் மாதங்களில் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்றார். இதனைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ அலுவலக கட்டிடத்தில் பின்லாந்து கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. நேட்டோவில் இணைவது குறித்து பின்லாந்து வெளியுறவுத் … Read more

காங்கோவில் உள்ள பொலோவா கிராமத்தில் நிலச்சரிவு… பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டோர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள பொலோவா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அச்சமயம் அங்கு மலையடிவாரத்தில் உள்ள ஓடையில், துணிகளை சலவை செய்துக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் என 25க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். மண்சரிவுகளில் இருந்து ஏழு பெண்கள் மற்றும் 14 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடருகின்றன. Source link

டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது ஆஸ்திரேலியா

சிட்னி: பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவில் டிக் டாக் செயலி பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. டிக்டாக் மூலம் பயனர்களின் தரவுகளை எடுக்க சீனா, ByteDanceLtd என்ற நிறுவனத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சத்தின் பேரிலேயே இந்தத் தடையை ஆஸ்திரேலியா விதித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்தத் தடை சீனாவுக்கும் – ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான வர்த்தக உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்றும் ஊடகச் செய்திகளில் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க ஆஸ்திரேலியாவின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று … Read more

கடலில் தவறி விழுந்து ராட்சத அலைகளில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில், கடலில் தவறி விழுந்து ராட்சத அலைகளில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். புயலின் காரணமாக ரியோ டி ஜெனிரோ கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படுவதோடு, ராட்சத அலைகள் எழுகின்றன. 2 புள்ளி 5 முதல் 3 மீட்டர் அளவுக்கு ராட்சத அலைகள் எழக்கூடும் என்பதால், நீச்சல் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பிரேசில் கடற்படையினர் கடற்கரையில் சிவப்பு நிற கொடிகளை வைத்துள்ளனர். எனினும் சிலர், ஆபத்தான முறையில் … Read more

பேரிடர் ஏற்படும்போது உலகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: பேரிடர் ஏற்படும்போது உலகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பேரிடரை எதிர்கொள்வதற்கான உள்கட்டமைப்பு 2023-க்கான சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ”பேரிடர் ஏற்படும்போது உலகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏனெனில், நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ள இந்த உலகில், ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் பேரிடர், அதற்கு தொடர்பே இல்லாத மற்றொரு பிராந்தியத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டே பேரிடரை எதிர்கொள்வதற்கான உள்கட்டமைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. … Read more

இந்தியா-ரஷ்யா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது – சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்!

இந்தியா-ரஷ்யா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. புதிய வெளியுறவுக் கொள்கையை வெளியிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், சீனா மற்றும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த இராஜாங்க ரீதியாக முன்னுரிமை அளிக்கப்படுமென தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, கருத்து தெரிவித்திருந்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் பெரும் சக்திகளாக வளர்ந்து வருகின்றன, எனவே, இருநாடுகளுக்கிடையேயான உறவுகளை அதிகரிக்க பெய்ஜிங் தயாராக உள்ளதாக … Read more

பறந்து போன குருவி… ஒடி வந்த நாய்… ட்விட்டரில் பெரும் பரபரப்பு!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கியதை தொடர்ந்து  பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார். “நீல நிற குருவிக்கு பதில் நாய்” லோகோவாக மாற்றப்பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது. … Read more

நிலவிற்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது நாசா

வாஷிங்டன்: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் குழுவை நாசா அறிவித்துள்ளது. நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா. இந்தத் திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என்றும் நாசா பெயர் சூட்டியுள்ளது. கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி இருந்தது நாசா. அதன் பிறகு இப்போது இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2022 நவம்பரில் ஆர்ட்டெமிஸ் 1 … Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறைகளை தடுக்கக்கோரி மாணவர்கள் பேரணி.!

அமெரிக்காவின் நாஷ்வில் நகரில், துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் டென்னசி மாகாண தலைமையகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். கடந்த மார்ச் 27ம் தேதி நாஷ்வில்லில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலியான நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 28 வயதான பள்ளியின் முன்னாள் மாணவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில் பள்ளிகளில் நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து ஊர்வலமாக சென்ற மாணவர்கள், டென்னசி தலைமையகம் … Read more

குருவிக்கு பதில் நாய்: டுவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்| Elon Musk Changed Twitter Logo into Doge

வாஷிங்டன்: டுவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக நீல நிற குருவி இருந்துவந்த நிலையில் அதனை நாய் படமாக மாற்றியுள்ளார், அந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். டுவிட்டர் நிறுவனத்தை உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில் முக்கிய பணியாளர்களை வேலையில் இருந்து தூக்கிய அவர், பின்னர் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உணர்த்தும் ‛ப்ளூ டிக்’கிலும் 3 பிரிவுகளை கொண்டுவந்து அதற்கு கட்டணமும் நிர்ணயித்தார். அடுத்ததாக டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ … Read more