Stone of Destiny: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் ’விதியின் கல்’

King Charles Coronation Ceremony: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா மே 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. முடி சூட்டு விழாவில் விதியின் கல் என்ற முக்கியமான பொருளுக்கு உள்ள முக்கிய பங்கு பற்றி தெரியுமா? 

கோவிட்-19 உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிந்துவிட்டது: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

லண்டன்: கோவிட்-19 பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் கூறியது: “கோவிட்-19 பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கோவிட் 19 அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த … Read more

செர்பியாவின் பெல்கிரேட் பகுதியில் வாகனத்தில் சென்றவாறு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

செர்பியாவின் பெல்கிரேட் பகுதியில் வாகனத்தில் சென்றவாறு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். வியாழக்கிழமை அன்று Mladenovac பகுதியில், மர்ம நபர் ஒருவன் வாகனத்தை ஓட்டிக் கொண்டே, தானியங்கி ஆயுதத்தின் மூலம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் பொதுமக்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெல்கிரேட்டில் உள்ள பள்ளி ஒன்றில், 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட … Read more

திருமணத்தில் இப்படியும் செய்வாங்களா? மணமகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் சடங்கு

Weird Rituals: திருமணத்தில் மணமக்கள் எப்படி இருப்பார்கள்? அழகாக, அலங்காரங்களுடன் என்று தானே நினைக்கிறீர்கள்! மணமக்களை அழுக்காகும் திருமணச் சடங்குகளும் உண்டு. அழுகிய தக்காளி, முட்டையால் அடிவாங்க வேண்டும்….

போரில் காயமடைந்து நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை நேரில் சந்தித்து கைக்கடிகாரத்தை பரிசளித்த அதிபர் ஜெலென்ஸ்கி!

போரில் காயமடைந்து நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை நேரில் சந்தித்து பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, அவர்களுக்கு கைக்கடிகாரத்தை பரிசளித்தார். போருக்கு மத்தியில் திடீர் பயணமாக நெதர்லாந்து சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, சோஸ்டெர்பெர்க்கில் உள்ள ராணுவ தளத்திற்கு சென்று கிரேன்கள், நடமாடும் மருத்துவமனைகள், கவச ஹோவிட்சர்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அங்கு போர் பயிற்சி பெற்று வரும் உக்ரைன் வீரர்களுடன் கலந்துரையாடிய பின் பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய தீமைகளை அழிப்போம் என சூளுரைத்தார். Source link

துருக்கி உச்சி மாநாட்டில் ரஷ்ய, உக்ரைன் அரசப்பிரதிநிதிகள் மோதல்: தேசிய கொடி பறிப்பு| Russian, Ukrainian diplomats clash at Turkey summit: national flag snatched

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கியில் நடந்த சர்வதேச மாநாட்டின் போது உக்ரைன் தேசிய கொடியை பறித்து சென்ற ரஷ்ய அரசப்பிரதிநிதியை உக்ரைன் எம்.பி. தாக்கி தேசிய கொடியை மீட்ட சம்பவம் நடந்தது. துருக்கி தலைநகர் அங்காராவில் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 -வது மாநாடு துவங்கியது. இதில் ரஷ்யா, உக்ரைன், அல்பேனியா, அசர்பைஜான், உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் அரசப்பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் உக்ரைன் அரசப்பிரதிநிதியாக அந்நாட்டு பாராளுமன்ற எம்.பி., அலெக்சாண்டர் மரிகோவ்ஸ் … Read more

கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் சவுதி அரேபியா! மகிழ்ச்சியில் இந்தியா!

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கும் பட்டியலில் முதல் நாடு ரஷ்யா தான். ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளும் இந்தப் பட்டியலில் பின்தங்கியுள்ளன.

பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட வேண்டும் – எஸ்சிஓ மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

கோவா: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்சிஓ மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நடைபெற்றது. இதில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாட்டிற்கு தலைமை வகித்து ஜெய்சங்கர் ஆற்றிய உரை விவரம்: “பயங்கரவாதத்தின் மீதான பார்வையை விலக்கிக்கொண்டால் அது எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் நலன்களுக்கு தீங்கு விளைவித்துவிடும். கரோனாவுக்கு எதிராகவும், … Read more

சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரண பொருட்களை அனுப்பிய கத்தார் அரசு..!

சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கத்தார் அரசு, நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. முதற்கட்டமாக சுமார் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சரக்கு விமானம் மூலம் சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையேயான மோதல் தொடருவதால், அங்கு சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. Source link

சூடானில் கடும் சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கித் தவிப்பு: ஐ.நா. தகவல்

கார்ட்டூம்: சூடானில் கடும் சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. சபை தரப்பில், “வியாழனன்று சூடானில் போர் நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும் கடுமையான சண்டை நீடித்தது. பேச்சுவார்த்தைகளுக்கு இடையே சண்டைகள் தொடர்கின்றன. கடும் சண்டையில் குழந்தைகள் சிக்கி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தலைநகர் கார்ட்டூமில் உள்ள நிலப்பரப்பை கட்டுப்படுத்துவதில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் தொடர்கிறது. இதுகுறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் … Read more