உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.29 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,800,782 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் … Read more

கிரீசில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

ஏதென்ஸ், கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இருந்து அந்த நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான தெசலோனிகிக்கு நேற்று முன்தினம் இரவு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயிலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 350-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் நள்ளிரவில் டெம்பே என்ற நகருக்கு அருகே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஒன்று எதிர்பாராதவிதமாக பயணிகள் ரெயில் சென்ற அதே தண்டவாளத்தில் … Read more

பயங்கர ரயில் விபத்து எதிரொலி: கிரீஸில் வெடித்தது மக்கள் போராட்டம்

ஏதென்ஸ்: கிரீஸில் பயணிகள் ரயிலுடன், சரக்கு ரயில் மோதி 43 பேர் பலியான நிகழ்வு, அந்நாட்டு மக்களை போராட்டத்தில் இறங்க வைத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கிரீஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து நெசலோனிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் , எதிர் மார்க்கத்தில் நெசலோனியில் இருந்து லாரிசா நகர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து கிரீஸ் மக்களிடையே கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. … Read more

ரஷியாவில் அடுத்தடுத்து 'டிரோன்' தாக்குதல்: எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ, உக்ரைன் மீதான ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷிய பகுதிகளில் அவ்வப்போது ‘டிரோன்’ தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உக்ரைனின் எல்லையோரம் உள்ள ரஷியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து ‘டிரோன்’ தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை இரவு ரஷியாவின் மேற்கு பெல்கொரோட் பிராந்தியத்துக்குள் 3 டிரோன்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும், இதில் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தொடர்ச்சியாக ஏற்படும் நிலநடுக்கங்கள் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. Earthquake of Magnitude 4.1 on the Richter Scale strikes Afghanistan pic.twitter.com/GU7P9OIMFu — ANI … Read more

டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா – அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

வாஷிங்டன், சீனாவை சேர்ந்த பிரபல `டிக்-டாக்’ செயலி உலகமெங்கும் கொடி கட்டி பறந்தது. பின்னர் ‘டிக்-டாக்’ செயலியால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் அந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் அரசு ஊழியர்கள் `டிக்-டாக்’ செயலியை பயன்படுத்த அமெரிக்க அரசாங்கம் தடை விதித்தது. இதனிடையே அமெரிக்காவில் அரசின் மின்னணு சாதனங்களில் `டிக்-டாக்’ செயலியை நிரந்தரமாக தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதன்படி அரசின் மின்னணு சாதனங்களில் இருந்து … Read more

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி – வீரர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் எரிபொருள், உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ உணவகங்களிலும் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 2 வேளை உணவுகூட முறையாக வழங்க … Read more

கிரீஸ் நாட்டில் கோர விபத்து – ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 36 பேர் உயிரிழப்பு

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயிலும்சரக்கு ரயிலும் நேருக்கு நேர்மோதியதில் 36 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 85 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டில் நடந்த மிக மோசமான விபத்து இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் நகரிலிருந்து தெசலோனிகி நகரத்துக்கு செவ்வாய் இரவு 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்றும் வந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு ரயில்களும் ஒன்றோடொன்று மோதின. லரிசா நகரம் அருகே: இதனால் ரயில்வே … Read more

அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்பாறைகள் – விஞ்ஞானிகள் அச்சம்

அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் முந்தைய கோடை காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வேகமாக உருகி வருவது, செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2014 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில், 10,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், முந்தைய கோடை காலங்களைக் காட்டிலும், 22 சதவீதம் வேகமாக பனிப்பாறைகள் உருகிவருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேகமாக மாற்றம், கடல்நீர் மட்ட உயர்வுக்கு வித்திடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பனிப்பாறைகள் உருகுவதால், கடந்த 1992 முதல் … Read more

தீவிரவாதத்தை ஊக்குவிப்போர் மீது உறுதியான நடவடிக்கை அவசியம் – ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

ஜெனீவா: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 52-வது கூட்டம் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய் சங்கர் வீடியோ பதிவு மூலம் தனது கருத்தை அனுப்பி உள்ளார். அதில் அவர் பேசியதாவது: கரோனா தொற்றால் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகள் எரிபொருள், உரம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் கடன்களால் கடுமையாக பாதித்துள்ளன. இதற்கு நடுவே, உலக நாடுகளுக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. தீவிரவாதத்தை உலக … Read more