காதலிக்காக சொத்துக்களை வாங்கி குவிக்கும் புடின்| Putin buys properties for his girlfriend

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது காதலிக்காக சொத்துக்களை வாங்கி குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 71 வயதாகும் ரஷ்ய அதிபர் புதின் , 1999-ல் அரசியலில் நுழைந்து அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சினின் நம்பிக்கைகுரியவரக இருந்தார். போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தவுடன் செயல் அதிபராக புடின் பொறுப்பேற்றார். 2008-ல் பிரதமராக பதவியேற்றார். அதன்பின் நடந்த தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று அதிபராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் ரஷ்யாவின் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா … Read more

காதல் குறுந்தகவல்களை பச்சை குத்திய பாக்., தம்பதி| Pakistani couple tattooed love messages

இஸ்லாமாபாத் : காதல் மலர்ந்த நாட்களின் போது, பரஸ்பரம் அனுப்பிக் கொண்ட, ‘வாட்ஸ் ஆப்’ குறுந்தகவல்களை தங்கள் கைகளில், பச்சை குத்திக் கொண்ட பாகிஸ்தான் தம்பதியின் செயல், சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானின், இஸ்லாமாபாதைச் சேர்ந்த இளம் தம்பதி அப்பான் – செய்ரட். இவர்கள் காதலித்து திருமணம் செய்து மூன்றாண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், அப்பான் தன் சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில், இவர்கள் நண்பர்களாக பழகத் துவங்கி, அது காதலாக … Read more

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற கைலாசா பெண் பிரதிநிதி | UN Female representative of Kailash participated in the meeting

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ஐ.நா. குழு கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதி பங்கேற்று பேசினார். பல வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா, தலைமறைவாக உள்ள நிலையில், தான் கைலாசா நாட்டில் இருப்பதாகவும் தனியாக ஒரு தீவை வாங்கி, அதற்கு கைலாசா என பெயர் சூட்டி, தனி பாஸ்போர்ட், பணம், வங்கி என அனைத்து சேவைகளையும் ஏற்படுத்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் … Read more

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை| US Secretary of State visits India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஜி – 20 அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு புதுடில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் புதுடில்லி வந்தனர்.இந்நிலையில் இன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டரி பிளிகன்ட், டில்லி வந்திறங்கினார். அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். புதுடில்லி: ஜி – 20 அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு … Read more

“கிழக்கு உக்ரைன் நகரமான பாக்முட்டை சுற்றி மோதல் தீவிரம்” – அதிபர் ஜெலன்ஸ்கி

கிழக்கு உக்ரைன் நகரமான பாக்முட்டை சுற்றி நடைபெற்றுவரும் மோதல் தீவிரமடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் வெளியிட்டுள்ள உரையில் தெரிவித்துள்ளார். நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும், ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் கடுமையாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாக்முட் நகரை விட்டுக்கொடுக்க மாட்டோம் என களத்தில் உள்ள உக்ரைன் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.   Source link

பிபிசி விவகாரம் குறித்து ஜெய்சங்கரிடம் பேசினேன்: இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்

புதுடெல்லி: இந்தியாவில் பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார். ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி இந்தியா வந்துள்ளார். மாநாட்டின் இடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, ஜேம்ஸ் கிளவர்லி சந்தித்து உரையாடினார். அப்போது, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த மாதம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை … Read more

ரஷ்ய கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா.. இந்திய சந்தையை விரிவாக்கம் செய்ய ரஷ்யா விருப்பம்..!

இந்தியாவை விட தினமும் சராசரியாக 4 லட்சத்து 50,000 பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய்யை கூடுதலாக சீனா இறக்குமதி செய்துவந்தாலும், இந்திய சந்தையை விரிவாக்கம் செய்யவே ரஷ்யா விரும்புவதாக வணிகத்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடையை சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும், சீனாவும் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவருகின்றன. சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சொந்த கப்பல்கள் மூலம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை கொண்டு வரும் நிலையில், இந்தியாவிற்கோ, ரஷ்ய நாட்டு சரக்கு கப்பல்கள் … Read more

நாளை புதுடில்லி வருகிறார் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் | The Chinese Foreign Minister is coming to New Delhi tomorrow

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: புதுடில்லியில், நாளை நடக்கவுள்ள, ‘ஜி – 20’ நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் காங் பங்கேற்கிறார். கிழக்கு லடாக்கில், இந்தியா – சீனா இடையே எல்லை விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்ததை தொடர்ந்து, இருநாடுகளுக்கு மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. இருதரப்பு தலைவர்களும் பரஸ்பரம் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஜி – 20 அமைப்புகளுக்கு இந்தியா தலைமை … Read more

கிரீசில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 32 பேர் பலி | 32 killed in Greece train head-on collision

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஏதென்ஸ்: கிரீசில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகரத்திற்கு இன்று(பிப்.,01) 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது லரிசா நகரின் தெம்பி பகுதியில் ரயில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயிலின் சில … Read more

இராக் மக்களுக்கு ஐ.நா. எப்போதும் உறுதுணைபுரியும்: அண்டோனியா குத்தரெஸ்

பாக்தாத்: ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இராக் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இராக் பயணம் குறித்து அண்டோனியா குத்தரெஸ் பேசும்போது, “இராக் மக்கள் மற்றும் அதன் அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் உறுதுணைபுரியும். இராக்கியர்கள் அவர்களது சிரமங்களையும் சவால்களையும் பரந்த, ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் எதிர்கொள்ள முடியும் ” என்று கூறியிருக்கிறார். இவர் தனது இராக் பயணத்தில், அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். அதன் ஓர் அங்கமாக இன்று … Read more