பெருவில் அசுர வேகத்தில் பறவை காய்ச்சல் – 600 கடற்சிங்கங்கள் பலி!

பெரு நாட்டில் பரவிய பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் 600 கடற்சிங்கங்கள் உயிரிழந்து உள்ளன. பெரு நாட்டில் சமீப வாரங்களாக எச் 5 என் 1 வகை பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், பாதுகாக்கப்பட்ட 8 கடலோர பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் உயிரிழந்த பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. இது தவிர, பாதுகாக்கப்பட்ட 7 கடல்வாழ் பகுதிகளில் இருந்து 585 கடற்சிங்கங்கள் உயிரிழந்து உள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதனை செர்னான்ப் என்ற இயற்கை பகுதிகளை பாதுகாக்கும் … Read more

கிரீஸ் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து 3 பேர் பலி..!

கிரீஸ் கடற்பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிரிழந்தனர். உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சமடைய ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், லெஸ்போஸ் தீவுக்கு அருகே உள்ள கடற்பாறையில் அகதிகள் படகு மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்த கடலோர காவல்படையினர் விரைந்து சென்று நீரில் தத்தளித்த 16 பேரை உயிருடன் மீட்டனர்.  Source link

பூகம்பம் | துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு 8,300 ஆக அதிகரிப்பு

அங்காரா – டமஸ்கஸ் : சிரியா – துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,364 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்க பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, ”இது காலத்திற்கு எதிரான ஓட்டம். நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட இடங்களுக்கு எங்களது மருத்துவக் குழுவை நாங்கள் அனுப்பி இருக்கிறோம். நிலநடுக்கத்திற்கு இதுவரை சிரியா – துருக்கியில் 8,364 பேர் பலியாகி உள்ளனர். இதில் துருக்கியில் 5,894 பேரும், சிரியாவில் 2,470 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்திற்கு … Read more

பாகிஸ்தானில் சாலை விபத்தில் 30 பேர் பலி; 15 பேர் காயம்| 30 killed in road accident in Pakistan; 15 people were injured

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கோஹிஸ்தான் மாவட்டத்தில் காரகோரம் நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது, பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பஸ் மற்றும் கார் அருகேயிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதில், 30 பேர் உயிரிழந்து உள்ளனர். 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா … Read more

கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை! துருக்கி & சிரியாவில் மக்களின் நிலை திண்டாட்டம்

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8500 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் தற்போதுவரை எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், துருக்கியில் நிலவும் கடும் பனிப்பொழிவு மீட்புப்பணிகளுக்குத் தடையாக உள்ளது. இதனால், உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. சிரியாவில் ஏற்கனவே நிலைமை மோசமாக இருந்தது. உறைய வைக்கும் குளிர், காலரா தொற்று நோய், மோசமான உள்கட்டமைப்பு … Read more

துருக்கி, சிரியாவில் 8,000-ஐ தாண்டிய பலி: கடும் குளிருக்கு மத்தியில் மீட்பு படை போராட்டம்| Turkey-Syria Earthquake Deaths Top 8,300

அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அங்கு, கடும் பனிக்கு மத்தியில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்திய சார்பில் மீட்பு படையினர் நிவாரண பொருட்களுடன் விரைந்துள்ளனர். துருக்கியின் தென்மேற்கே உள்ள காசியன்டெப்பை மையமாக வைத்து கடந்த திங்கட்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து 7.5, 6.6 ரிக்டர் அளவுகள் என … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் உடல் அவரது சொந்த ஊரான கராச்சியில் அடக்கம்..!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் உடல் அவரது சொந்த ஊரான கராச்சியில் அடக்கம் செய்யப்பட்டது. 1999 ராணுவப் புரட்சிக்குப் பின் பாகிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய முஷாரப், உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி துபாயில் காலமானார். இதையடுத்து அவர் உடல் சிறப்பு விமானம் மூலம் கராச்சி அருகே உள்ள மாலிர் என்ற இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராணுவக் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னாள் ராணுவத் தளபதிகள் மட்டும் இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர். Source … Read more

துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7.700-ஐ தாண்டியது: தோண்ட தோண்ட பிணங்கள்

அங்காரா, துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இவ்விரு நாடுகளும் பேரழிவைச் சந்தித்துள்ளன. அங்கு பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. நிலநடுக்க மையப்பகுதிக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஹட்டாய் மாகாணத்தில் மட்டும் 1,500 கட்டிடங்கள் தரை மட்டமாகி இருக்கின்றன. … Read more

சீன உளவு பலூன்; வெளிவரும் மர்மங்கள்… தேடிக் கண்டுபிடித்த அமெரிக்கா!

அமெரிக்காவின் வான் பகுதியில் சீன பலூன் ஒன்று பறந்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது வானிலையை ஆய்வு செய்ய பறக்க விடப்பட்டது என்றும், அதிக காற்றின் காரணமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து விட்டதாகவும் சீனா விளக்கம் அளித்தது. ஆனால் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அருகிலேயே பலூன் பறந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. பலூனில் இருக்கும் அம்சங்கள் அதுமட்டுமின்றி பலூனில் சென்சார், கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலூனாக … Read more

பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 30 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயணிகள் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததில், 30 பேர் உயிரிழந்தனர். கில்கித்தில் இருந்து நேற்றிரவு ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் எதிரே வந்த கார் மீது மோதி இரு வாகனங்களும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தன. இதில் 30 பேர் சம்பவ இடத்திலே உடல்நசுங்கி உயிரிழந்த நிலையில், மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படுகாயம் … Read more