பாக்.கில் உணவு பஞ்சம் மானிய விலையில் மாவு வாங்க சென்றவர் உயிரிழப்பு

லாகூர்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், சிந்து மாகாண அரசு மானிய விலையில் மாவு விற்பனையை மேற்கொண்டுள்ளது. மிர்புர்காஸ் மாவட்டத்தில், நேற்று முன்தினம் லாரிகளில் தலா 10 கிலோ எடையுள்ள மாவு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ மாவு ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்குவதற்கு கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 வயது தொழிலாளி ஹர்சிங் கோல்ஹி என்பவர் உயிரிழந்தார். … Read more

ஹைபர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்ய போர்க் கப்பல் அட்லாண்டிக் கடலில் ரோந்து: அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை

மாஸ்கோ: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்யாவின் போர்க்கப்பல் கர்ஷ்கோவ் அட்லாண்டிக் கடலில்ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறும்போது, “ரஷ்யாவுக்கு எதிரி நாடுகளால் ஆபத்து உள்ளது. எனவே நாட்டை பாதுகாக்கும் பணியில் கர்ஷ்கோவ் போர்க்கப்பல் ஈடுபடும். இந்த போர்க்கப்பலில் உள்ள அதிநவீன ஏவுகணைகள் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும்’’ என்று தெரிவித்தார். ரஷ்ய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு: சீனாவில் இந்திய மருந்துகளின் தேவை பல மடங்கு அதிகரிப்பு…!

பிஜீங், சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் உச்சம் பெற்று வருகிறது. உயிரிழப்பு, சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீனா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் இந்திய மருந்துப்பொருட்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளான பிரிமொவிர், பக்சிஸ்டா, மல்னுநெட், மல்நட்ரிஸ் ஆகிய 4 … Read more

கொலம்பியாவில் சட்ட விரோதமாக விமான சக்கரத்தில் அமர்ந்து பயணித்த 2 பேர் சாவு

வடஅமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சிலி நாட்டின் சாண்டியாகோவில் இருந்து ஏவியன்கா நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் விமான ஊழியர்கள் விமானத்தில் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது விமானத்தின் அடிப்பகுதியில் முன்பக்க சக்கரத்தில் மனித உடல் போல ஏதோ ஒன்று தென்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சோதனை செய்தபோது 2 வாலிபர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் … Read more

சீனாவில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் பரிதாப சாவு

சீனாவின் கிழக்கு பகுதியில் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரில் காலை இறுதி ஊர்வலம் ஒன்று நடந்தது. ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர். மயானத்தை அடைவதற்கு முன்பாக இறந்துபோனவரின் உடலை சாலையோரத்தில் வைத்து மக்கள் இறுதி சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய லாரி சாலையோரத்தில் இறுதி சடங்கில் பங்கேற்றிருந்தவர்களின் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் அங்கு நின்று … Read more

வானூட்டு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை

தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு வானூட்டு. சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக அந்த நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று … Read more

டுவிட்டரில் அதிரடி மாற்றங்களை அறிவித்த எலான் மஸ்க்…!

வாஷிங்டன், இந்த நவீன உலகில் அனைத்துமே இணையதளங்களிலேயே நடந்து வருகிறது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்திற்கும் தனித்தனியாகச் செயலிகள் வந்துவிட்டன. இதனால் பலரும் இணையதளங்களையே நம்பி உள்ளனர். இந்தநிலையில், எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில்‛‛ப்ளூ டிக்கிற்கு’ இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் சில டுவிட்டர் பதிவுகள் செய்துள்ளார். அதில், ‛‛ப்ளூடிக் வாங்கும் … Read more

துனீசியாவில் படகு மூழ்கியதில் 5 ஆப்பிரிக்கர்கள் உயிரிழப்பு, 10 பேர் மாயம்

வட ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் கடல் மார்க்கமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்நிலையில், மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றபோது, ஸ்ஃபாக்ஸ் பிராந்தியம் அருகே பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து வந்த கடலோர … Read more

செனகலில் பஸ் விபத்து; 40 பேர் பலியான பரிதாபம்| Bus accident in Senegal; It is a pity that 40 people died

டகார் : ஆப்ரிக்க நாடான செனகலில் நேற்று நடந்த இரண்டு பஸ்கள் மோதிய விபத்தில், 40 பேர் பலியாகினர்; 80 பேர் காயமடைந்தனர். செனகலின் காப்ரின் நகர் அருகே உள்ள கினிவி கிராமத்தில் நேற்று அதிகாலையில் இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டன. இதில் பயணம் செய்த, 40 பேர் பலியாகினர்; 80 பேர் காயமடைந்தனர். காயமடைந்துள்ள சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது … Read more