இஸ்லாமியரின் புனிதநூல் எரிப்பு போராட்டத்துக்கு அனுமதி கொடுத்த ஸ்வீடன் அரசு நேட்டோ உறுப்பினருக்கான ஆதரவை எதிர்பார்க்க கூடாது என துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார், ஸ்வீடனில் நடைபெற்ற புனிதநூல் எரிப்பு போராட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எர்டோகன், இது அனைவருக்கும் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு அவமானம் என்றும் இந்த போராட்டத்துக்கு அனுமதி அளித்த ஸ்வீடன் அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
துருக்கி அல்லது இஸ்லாமியர்களுக்கு ஸ்வீடன் மரியாதை கொடுக்கவில்லை என்றால் நேட்டோ விவகாரத்தில் தங்களிடம் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியாது என்றும் எர்டோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.