ஒரேநாளில் 120 ஏவுகணைகளை தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்; வேகம் காட்டும் ரஷ்யா .!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்ததது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த 10 மாதங்களாக நீண்டு வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கும் தயங்காது என ரஷ்ய அதிபர் புதின் கடந்த டிசம்பர் 3ம் … Read more

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ராணுவ நீதிமன்றம்| Aung San Suu Kyi jailed for a further seven years

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நைபைடவ்: மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு, ஏற்கனவே 12 வழக்குகளில் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், தற்போது 5 ஊழல் வழக்குகளில் அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (வயது 77). இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் … Read more

ஊழல் வழக்கு: ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை!

ஊழல் வழக்கில், ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக அரசை கவிழ்த்து … Read more

பிரதமர் மோடியின் தாயார் மறைவு: உலக தலைவர்கள் இரங்கல்| World Leaders Mourn Death Of PM Modi’s Mother

டோக்கியோ: தாயார் ஹீராபென் மறைவுக்காக பிரதமர் மோடிக்கு, ஜப்பான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் பிரதமர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உடல்நலக்குறைவால் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (டிச.,30) அதிகாலை 3 : 30 மணியளவில் காலமானார். வீட்டில் மரியாதை செலுத்திய பிறகு, தாயார் உடலை மோடி சுமந்து வந்தார். காந்தி நகரில் உள்ள மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. … Read more

பாகிஸ்தானில் ஹிந்து பெண் தலை துண்டித்து கொலை| Hindu woman beheaded in Pakistan

லாகூர்,-பாகிஸ்தானில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண், தலை துண்டித்து, தோல் உரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இங்கு சிந்து மாகாணத்தில் உள்ள சின்ஜ்ஹோரா நகரின் அருகேயுள்ள கிராமத்து வயல் வெளியில், சமீபத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பெண்ணின் தலை, துண்டிக்கப்பட்ட நிலையில் சற்று தொலைவில் கிடந்தது. மேலும், அந்த பெண்ணின் உடல் மற்றும் முகத்தில் உள்ள … Read more

வேகமோ 5500 KMPH; இடைவெளி வெறும் 6 மீட்டர்… நேருக்கு நேர் வந்த போர்விமானங்கள்!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு இடையே, இரு நாடுகளும் போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதலில் இருந்து நொடி நேரத்தில் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வினாடி கூட தாமதித்திருந்தால் இரு நாட்டு போர் விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கியிருக்கும். இரண்டு போர் விமானங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிர் வந்தபோது, ​​இரண்டுக்கும் இடையே 6 மீட்டர் தூரம் மட்டுமே இருந்தது. எனினும் அமெரிக்க விமானத்தை இயக்கிய விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து … Read more

காட்டில் மனைவி…கணவர் மறதி | Wife in forest…husband forget

கணவரின் மறதியால் நடுக்காட்டில் மனைவி பல மணி நேரம் தவித்தார். தாய்லாந்தை சேர்ந்த தம்பதி பூண்டோம் சாய்மூன் 55, – அம்னுவாய் சாய்மூன் 49. விடுமுறைக்காக இவர்கள் மஹா சரகம் பகுதியிலுள்ள சொந்த ஊருக்கு காரில் சென்றனர். நள்ளிரவில் நடுக்காட்டில் இயற்கை உபாதைக்காக பூண்டோம் காரை நிறுத்தியுள்ளார். மனைவியும் இறங்கியுள்ளார். அதை பூண்டோமிடமும் கூறியுள்ளார். அதை மறந்துவிட்ட பூண்டோம் மனைவி வருவதற்குள் காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். புதருக்குள் சென்ற அம்னுவாய் திரும்பிவந்து பார்த்தபோது காருடன் கணவரையும் … Read more

உக்ரைன் மீது 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் – 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா மறுப்பு

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்ய ராணுவம் தரை, வான், கடல் வழியாக நேற்று 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. உக்ரைன் முன்மொழிந்துள்ள 10 அம்ச அமைதி திட்டத்தை ஏற்க ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த 10 மாதங்களுக்கு … Read more

பீலே செஞ்ச அசாத்தியம்… நைஜீரியாவில் நடந்த அதிசயம்… கால்பந்தின் மறக்க முடியாத சுவடுகள்!

பீலே… உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர். பிரேசில் நாட்டின் தேசிய சொத்து. தனது தாய்நாட்டிற்காக மூன்று முறை உலகக்கோப்பைகளை வென்று கொடுத்தவர். சான்டோஸ் (Santos FC) கிளப்பிற்காக கோல் மழை பொழிந்தவர். உலகக்கோப்பை தொடரில் மிக இள வயதில் (17 ஆண்டுகள் 239 நாட்கள்) கோல் அடித்தவர். இப்படி சாதனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில் தனது 82வது வயதில் புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்தால் காலமானார். இது உலகம் முழுக்க உள்ள கால்பந்து ரசிகர்கள் … Read more

பிரேசிலின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் காலமானார்…!

பிரேசிலின் பிரபல கால்பந்து வீரர் பீலே உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 82 வயதான பீலேவுக்கு குடல் பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்துவந்த நிலையில், அவரது உடல்நலம் தேறாமல் இருந்து வந்தது. சாவோ பாலோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கால்பந்து வரலாற்றில் அதிக முறை ஹாட்ரிக் கோல் அடித்த பீலே, உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் 3 … Read more