தலைநகர் கிளர்ச்சி எதிரொலி: பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம்..!!

பிரேசிலியா, பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார். இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் இனாசியோ லுடா சில்வா கடந்த 1-ந் தேதி பதவியேற்றார். இதற்கிடையில் லுடா அதிகாரத்தை கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் … Read more

உணவுப் பாதுகாப்பு பிரச்சினைக்கு ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் – அமெரிக்கா

உணவுப் பாதுகாப்பு பிரச்சினை அதிகரிக்க ரஷ்யாவும் சீனாவும் தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆப்பிரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் இவ்விரு நாடுகளே காரணம் என்றும அமெரிக்க கருவூல அமைச்சர் ஜேனட் யெல்லன் குற்றம் சாட்டியுள்ளார்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதே போல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடுகளை நெருக்கும் சீனாவின் கடன் கொள்கை குறித்தும் அவர் விமர்சனம் தெரிவித்தார் Source link

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மரியாதை

கீவ், உக்ரைன் நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் மழலையர் பள்ளி ஒன்றின் பின்புறம் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அந்த நாட்டின் உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, ராஜாங்க மந்திரி எவ்ஹென் யெனின் உள்பட 18 பேர் பலியானது அங்கு தீராத சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் உள்துறை மந்திரி பலியானதால், தற்காலிக உள்துறை மந்திரியாக உக்ரைன் தேசிய போலீஸ் படையின் தலைவர் இஹோர் கிளைமென்கோ நியமிக்கப்பட்டார். … Read more

அமெரிக்காவில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்

வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிராசோஸ் நகரில் ஸ்ரீ ஓம்கர்நாத் கோவில் உள்ளது. பிராசோஸ் நகரில் உள்ள ஒரே இந்து கோவில் இதுவாகும். பிராசோஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் இந்து சமூகத்தினர் தினமும் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இந்த கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் சிலர் ஜன்னலை உடைத்து கோவிலுக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் இருந்த உண்டியலையும், நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் … Read more

தலீபான் கொடியுடன் ஐ.நா அதிகாரிகள் புகைப்படம்; ஐ.நா. மன்னிப்பு கேட்டது

ஆப்கானிஸ்தானில் கடந்த 1½ ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் தலீபான்கள் பெண்கள் கல்வி கற்க, வேலைக்கு செல்ல, தனியாக பயணம் செய்ய என பல்வேறு தடைகளை விதித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தலீபான்களை கண்டித்து வரும் ஐ.நா. பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக தலீபான் அரசின் அதிகாரிகளை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐ.நா. துணை பொதுச் செயலாளர் அமீனா முகமது தலைமையிலான அதிகாரிகள் குழு 4 … Read more

சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு அபராதம்: சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் நடவடிக்கை

லண்டன்: சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அமல்படுத்தப்போகும் புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த பிரதமர் ரிஷி சுனக் முடிவு செய்தார். இதற்காக ரிஷி சுனக் அண்மையில், தனது காரில் பயணித்தபடி வீடியோ மூலம் சமூக வலைதளங்களில் பேசினார். அப்போது அவர் காரின் சீட் பெல்ட்டை அணியாமல் பயணித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது அங்கு பெரும் … Read more

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த பிரதமர் மோடியால் மட்டும் முடியும்| Only PM Modi can stop Ukraine-Russia war

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-‘உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வருவதற்கான முயற்சி நடந்தால், அது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே சாத்தியமாகும்’ என, பிரான்சைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இது ஓராண்டை எட்ட உள்ள நிலையில், தற்போது இரு தரப்பும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளரான லாரா ஹயீம், … Read more

நியூசிலாந்தின் அடுத்த பிரதமராக கல்வி அமைச்சர் ஹிப்கின்ஸ் தேர்வு| Education Minister Hipkins chosen as New Zealands next Prime Minister

வெலிங்டன்,-நியூசிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக, ஆளும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும், தற்போதைய கல்வி அமைச்சருமான கிறிஸ் ஹிப்கின்ஸ், 44, விரைவில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன், ௨௦௧௭ முதல் பதவி வகித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை, இவர் கையாண்ட விதம், உலகெங்கும் பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெசிந்தா ஆர்டன் சமீபத்தில் அறிவித்தார். … Read more

‘அதெற்கெல்லாம் பயப்படுகிற ஆளா நான்.!’ – இம்ரான் கான் பளீர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1996ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கு ஒரேயொரு எம்.பி. கிடைத்த நிலையில் 2007ஆம் ஆண்டு தேர்தலில் 80 எம்.பி.க்கள் கிடைத்தனர். 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார். சுமார் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த … Read more

சீன மக்கள் தொகையில் 80% பேருக்கு கொரோனா; உலகநாடுகள் பீதி.!

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, சுகாதாரத் துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் அத்தியவசிய மருந்துகளின் தேவை அதிகரித்து வருவதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபமெடுத்து உள்ளது, இந்தியா உட்பட உலக நாடுகளை கதி … Read more