கனடா: பஸ் பயணம் பாதுகாப்பு என நினைத்து சென்ற இந்தியர் உள்பட 4 பேர் விபத்தில் பலி

ஒட்டாவா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் கடும் குளிர் மற்றும் பனிப்புயல் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. உறைபனி சாலையெங்கும் படர்ந்து காணப்படுகிறது. இதனால், வார இறுதி வரை மக்கள் வீடுகளில் பாதுகாப்புடன் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த சூழலில் கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வான்கோவர் பகுதியில் இருந்து கெலோவ்னா நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று பனி படர்ந்த பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், இந்திய வம்சாவளியான பஞ்சாப்பின் அமிர்தசரஸ் … Read more

50 ஆண்டுகளில் இல்லாத பனிபுயல்… 60 பேர் பலி… அமெரிக்க துயரம்!

அமெரிக்காவில் வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர் காலத்தில் பனிபுயல் வீசி வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்திலும் பணி மூடிக் கிடக்கிறது. சாலைகளில் 25 சென்டிமீட்டர் உயரத்துக்கு பனி மூடிக் கிடப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்றுள்ளதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூயார்க், நியூ ஜெர்சி, கலிஃபோர்னியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிபுயல் வீசுவதால், அவசர மருத்துவ தேவைக்கான ஆம்புலன்ஸ்கள் கூட … Read more

வெளிநாட்டவர் தனிமைப்படுத்துதல் ரத்து செய்தது சீன அரசு | The Chinese government has lifted the quarantine of foreigners

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் :சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு பயணியருக்கான கட்டாய தனிமைப்படுத்துதல் உத்தரவை ஜன., 8 முதல் ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில் 2019 டிச., மாதம் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகையே ஸ்தம்பிக்க செய்தது. பின் உலகம் முழுதும் தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவிட்ட நிலையில், சீனாவில் கடந்த சில மாதங்களாக … Read more

ரஷ்யா லாஸ்ட் வார்னிங்; உக்ரைன் கொடுத்த ‘நச்’ பதில்!

ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் அதிக நெருக்கம் காட்டிய உக்ரைன் திடீரென கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய முடிவெடுத்தது. உக்ரைன் எடுத்த இந்த முடிவால் தங்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக கூறி உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது ரஷ்யா. கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்ய போர் 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிகவும் பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் … Read more

தைவானில் கட்டாய ராணுவ சேவை 4 மாதங்களில் இருந்து ஒரு வருடமாக நீட்டிப்பு

வரும் 2024-ஆம் ஆண்டு முதல், கட்டாய ராணுவ சேவையை நான்கு மாதங்களில் இருந்து ஒரு வருடமாக அதிகரிக்கவுள்ளதாக, தைவான் அரசு அறிவித்துள்ளது. ராணுவ, ராஜதந்திர மற்றும் பொருளாதார ரீதியில் சீனா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை தைவான் எடுத்துள்ளது. அதிகரித்து வரும் சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க, தற்போதைய ராணுவ அமைப்புகள் திறனற்றதாகவும், போதுமானமானதாகவும் இல்லை என குறிப்பிட்ட தைவான் அதிபர் சாய் இங்-வென், அதனால் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  Source … Read more

ரொனால்டோவிற்கு அவரது காதலி ஜார்ஜினா புதிய ரோல்ஸ் ராய்ஸ் பரிசாக வழங்கியுள்ளார்..!

போர்ச்சுகல் நாட்டு நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு, அவரது காதலி ஜார்ஜினா, விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை, கிறிஸ்துமஸ் பரிசாக அளித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளை நிற  Rolls-Royce Dawn convertible காரை, ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் பரிசாக அளித்து ரொனால்டோவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவரது குழந்தைகளுக்கும் பரிசளித்த காட்சிகளை ஜார்ஜினா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Source link

“போரில் இருந்து ராணுவத்தை உக்ரைன் விலக்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல்…” – ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: போரில் ஈடுபட்டு வரும் தனது ராணுவத்தை உக்ரைன் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ரஷ்யா, இல்லாவிட்டால் தாங்கள் அதைச் செய்யவாம் என எச்சரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்ய போர், 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலம் வாய்ந்த ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் ராணுவம் திணறி வருகிறது. இதன் காரணமாக, இந்தப் போரில் பல பகுதிகளை ரஷ்யாவிடம் உக்ரைன் இழந்துள்ளது. எனினும், அமெரிக்கா மற்றும் … Read more

வடகொரியாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்திய தென்கொரியா

சியோல்: எல்லைத் தாண்டி வந்த வடகொரியாவின் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “திங்கட்கிழமை வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள் தென்கொரிய எல்லையைக் கடந்தன. அவற்றை நாங்கள் சுட்டு விழ்த்தினோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள், தென் கொரிய வான்வெளி எல்லையில் நுழைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர்தான் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வடகொரியா இரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த நிலையில், வடகொரியாவின் ஆளில்லா விமானங்கள், … Read more

நியூயார்க்கை புரட்டி போடும் பனி பனிப்புயல்! இது வரை 50 பேர் பலி!

நியூயார்க்: இந்தியாவில் மக்கள் 5 டிகிரி வெப்பநிலையை தாங்க முடியாமல் நடுங்கும் நிலையில், -50 டிகிரி வெப்பநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் நிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த நேரத்தில் வட அமெரிக்காவின் பல பகுதிகளில் வானிலை மிக மிக மோசமாக ஆகி வருகிறது. மின்சாரம் இல்லாததால், ஹீட்டர் மற்றும் பிற சாதனங்களும் இயங்கவில்லை. மிகவும் நவீனமான மற்றும் நாகரீகமான நியூயார்க் நகரத்தின் பல இடங்களிலும் பனி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.  நியூயார்க்கில் … Read more

இந்திய அரசின் மனிதாபிமான உதவிகள், ஆதரவுக்கு நன்றி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆதரவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியின் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது தனது அமைதி திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மோடி ஜெலன்ஸ்கியிடம் கோரிக்கை வைத்தார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய … Read more