அதிகாரம், பதவியை இழந்த நிலையில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் கோத்தபய

கொழும்பு: அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அவர் இனி வெளிநாட்டிலேயே வசிக்கப் போவதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவும் பதவி விலகினர். கடந்த ஜூலை 9-ம் தேதி கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் … Read more

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனி சூறாவளி மின்சார வினியோகம் பாதிப்பு; 32 பேர் பலி| The snow storm that hit the US affected power supply; 32 people died

நியூயார்க், அமெரிக்காவில் மூன்று நாட்களுக்கு மேலாக வீசி வரும் பனி சூறாவளியால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நகரங்களில், மின்சார வினியோக பாதிப்பு தொடர்கிறது. பனிப் பொழிவு தொடர்பான சம்பவங்களில், ௩௨ பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான குளிர்கால பனி சூறாவளி வீசி வருகிறது. அனைத்து மாகாணங்களிலும் உறைநிலைக்கு கீழே வெப்பநிலை பதிவாகியுள்ளது. பனிப்பொழிவு தொடர்வதால், வீடுகள், வாகனங்கள் பனியால் மூடப்பட்டுள்ளன. மிகவும் குறைந்தபட்சமாக கடந்த ௨௩ம் தேதி, … Read more

நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் பிரசண்டா| Prasanda was sworn in as the Prime Minister of Nepal

காத்மாண்டு, நேபாளத்தில் தேர்தல் முடிந்து ஒரு மாதமாக இழுபறி நீடித்த நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்பகமல் பிரசண்டா, 68, மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றார். நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில், ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், ௮௯ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. தேர்தலுக்கு முன் நேபாளி காங்கிரஸ் மற்றும்நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இடையே ஒப்பந்தம் … Read more

ஆற்றில் பஸ் கவிழ்ந்து 6 ேபர் பரிதாப பலி| Bus overturned in the river, 6 people lost their lives

மாட்ரிட், ஸ்பெயினில் நேற்று முன் தினம் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில், ஆறு பயணியர் பரிதாபமாக உயிரிழந்தனர்; இருவர் படுகாயமடைந்தனர். ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பென்டேவேத்ரா மாகாணத்திலிருந்து, செர்டெடோ பகுதிக்கு எட்டு பயணியருடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இது, கலீசியா பகுதியில் லெரெஸ் ஆற்றின் மீதுள்ள பாலத்தை கடக்க முயன்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. உள்ளூர்வாசி மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பஸ்சிலிருந்து ஆறு … Read more

இஸ்லாமாபாத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு – அமெரிக்கா

பாகிஸ்தானில் சமீப வாரங்களாக தொடர்ச்சியாக பயங்கர தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாடாளுமன்றத்துக்கு அருகே நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகினர். இந்த தாக்குதல் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக அமெரிக்கர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் … Read more

ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 11 ஆண்டுகள் சிறை

சுற்றுலாவுக்கு பெயா்பெற்ற தீவுநாடான மாலத்தீவின் அதிபராக கடந்த 2013 முதல் 2018 வரை பதவி வகித்தவர் அப்துல்லா யாமீன் (வயது 63). இவர் தன்னுடைய பதவி காலத்தில் அரசுக்கு சொந்தமான தீவு ஒன்றை குத்தகைக்கு அளிக்க லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முன்தினம் நடந்தது. இதில் அப்துல்லா யாமீன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி … Read more

பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் முன்தினம் கிறிஸ்துமஸ் தினத்தன்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. டஜன் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண … Read more

தைவானை நோக்கி 71 போர் விமானங்கள் மற்றும் 7 போர்க்கப்பலை அனுப்பிய சீனா…!

சொந்தம் கொண்டாடும் சீனா சீனாவில் கடந்த 1927-ம் ஆண்டில் தொடங்கி 1949-ல் முடிவுக்கு வந்த உள்நாட்டு போருக்கு பின் பல தீவுகூட்டங்களை உள்ளடக்கிய தைவான் தனிநாடாக உருவெடுத்தது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் சீனா, தைவான் இப்போதும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. அதோடு தைவானுடன் பிறநாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் சீனாவின் எதிர்ப்பைப் புறந்தள்ளி விட்டு தைவானுடனான நட்புறவை அமெரிக்கா தொடர்ந்து ஆழப்படுத்தி வருகிறது. … Read more

ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு: 17 பேர் பலி; 93 பேர் காயம்

டோக்கியோ, அமெரிக்காவில் சில நாட்களாக கடுமையான குளிர் தாக்கி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி எனப்படும் பனிப்புயலால் இதுவரை 39 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், ஜப்பானின் வடபகுதிகளில் கடந்த வார தொடக்கத்தில் இருந்தே கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், சாலைகள், நெடுஞ்சாலைகளில் பனி படர்ந்து காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் வழியிலேயே தேங்கி விட்டன. பொருட்கள் வினியோக சேவையும் முடங்கி உள்ளது. இந்நிலையில், ஜப்பானில் கிறிஸ்துமஸ் வாரஇறுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் மொத்த … Read more