அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை| Hindu Temple In US Raided By Thieves, Valuables Stolen: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாசில், உள்ள ஹிந்து கோவிலில் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. டெக்சாசின் பிரேஜோ வேலி பகுதியில் ஸ்ரீஓம்காரநாதர் கோயில் உள்ளது. இங்கு அமைந்துள்ள ஹிந்து கோவில் இது ஒன்றே ஆகும். இங்கு, கடந்த 11ம் தேதி கோவிலின் சுவரின் பக்கவாட்டில் உள்ள ஜன்னலை உடைத்து, விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டுள்ளன. இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில், உள்ளே வந்த மர்ம நபர் … Read more

இந்திய – சீன எல்லையில் உள்ள சீன வீரர்களுடன் ஷி ஜின்பிங் ஆலோசனை| Chinese President Inspects Combat Readiness Of Troops Stationed Along LAC Near Ladakh

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சீன ராணுவ வீரர்களுடன், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார். கிழக்கு லடாக் பகுதியில் தான் 2020ம் ஆண்டு மே மாதம் இந்திய சீன வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், பதற்றம் உண்டானது. இதனையடுத்து இரு … Read more

உலகிற்கு இந்தியப் பிரதமர் மோடியின் தலைமை முக்கியம்: உலகப் பொருளாதார மன்ற நிறுவனர்

தாவோஸ்: பலவாறாக பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை முக்கியமானது என்று உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான க்லாஸ் ஸ்வாப் (Klaus Schwab) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அமைச்சரவைக் குழுவையும், மிக முக்கிய இந்திய தொழிலதிபர்கள் குழுவையும் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உலக சுகாதாரம், பெண்கள் தலைமையிலான பொருளாதார முன்னேற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான பொது கட்டமைப்பு ஆகியவற்றில் … Read more

நாங்கள் மீண்டதற்கு காரணம் இந்தியா: இலங்கை வெளியுறவு அமைச்சர் நன்றி| Sri Lanka conveys its ‘profound’ gratitude to PM Modi: Sri Lankan Foreign Minister to Jaishankar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஓரளவு மீண்டதற்கு முக்கிய காரணம் இந்தியா எனவும், அதற்காக நன்றி என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது ஜெய்சங்கர் மற்றும் அலி சப்ரி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அலி சப்ரி … Read more

இந்திய எல்லையை ஒட்டி இருக்கும் சீன படையினர் மத்தியில் அதிபர் ஜி ஜின்பிங் உரை – விழிப்புடன் இருக்க உத்தரவு

பெய்ஜிங்: இந்திய எல்லையை ஒட்டி இருக்கும் படைகளுடன் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், போருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இந்திய – சீன எல்லையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் வீரர்களுடன் காணொலி காட்சி வாயிலாக அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார். ஜின்ஜியாங் மாகாண ராணுவ தலைமையின் கீழ் இயங்கும் பகுதியான குன்ஜெராப் எனும் எல்லைப் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் … Read more

“இந்தியாவால்தான் ஓரளவு மீண்டோம்” – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இலங்கை

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை ஓரளவு மீண்டிருப்பதற்கு இந்தியாவின் உதவியே மிக முக்கிய காரணம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ஜெய்சங்கரும், அலி சப்ரியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அலி சப்ரி, ”நாங்கள் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில், … Read more

குஜராத் கலவர ஆவணப்பட சர்ச்சை: பிரதமர் மோடிக்கு ரிஷி சுனக் ஆதரவு

லண்டன், கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது, குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே, லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி கொஸ்டின்’ என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி, கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி, 23-ந் தேதி … Read more

கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கொசோவோ நகரங்கள்

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால், ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். தொடர் மழை பெய்த வண்ணம் இருப்பதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் தண்ணீர் சுத்திரிகரிப்பு தொழிற்சாலைகள் மாசுபட்டதால், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. Source link

திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாப பலி

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தில், தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவு, பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. மேலும் இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல்கள் புதன்கிழமை இரவில் தெரிய வந்தது. அங்கு தேடல் மற்றும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்துக்கு 131 மீட்பு படையினரும், 28 அவசரகால வாகனங்களும் … Read more