கலிபோர்னியாவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10-ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மான்டேரி பூங்காவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்த நிலையில், இரவு 10 மணியவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். Source link

விவசாய நிலங்களை, உயர்தர விவசாய நிலங்களாக மேம்படுத்தும் சீனா..!

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், சீனாவிலுள்ள விவசாய நிலங்கள் உயர்தர விவசாய நிலங்களாக மேம்படுத்தப்பட்டுவருகின்றன. உயர்தர பாசன வசதிகள், விவசாயத் தேவைகளுக்கு மின் பகிர்மானம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த உயர்தர விவசாய நிலங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. கடந்த ஒரு ஆண்டில், 74 லட்சம் ஏக்கர் உயர்தர விவசாய நிலங்களை அமைக்க திட்டமிட்ட சீனா, நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக, ஒரு கோடியே 73 லட்சம் ஏக்கர் உயர்தர விவசாய நிலங்களை அமைத்துள்ளது. Source link

அமெரிக்காவில் சீன மக்கள் மீது துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி.!

துப்பாக்கி வன்முறை என்பது அமெரிக்காவில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. துப்பாக்கி வன்முறை காப்பக இணையதளத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் பொதுவெளியில் 647 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தநிலையில் … Read more

ஜப்பானில் மூன்றடுக்கு மாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு..!

ஜப்பானில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயமடைந்தனர். கோபி நகரில் உள்ள மூன்றடுக்குமாடி கட்டிடத்தின், முதல் தளத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்காண காரணம் … Read more

புத்தாண்டை வரவேற்ற சீனர்கள்: கரோனாவிலிருந்து விடுபட உருக்கமான பிரார்த்தனை

பீஜிங்: சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்டியிருக்க இன்னொருபுறம் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், அவரின் கூற்றின்படி ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாககவும் சர்வதேச ஊடகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கணக்கு கேட்கும் உலக சுகாதார நிறுவனம்: ஜனவரி … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் நீதித்துறை அதிகாரிகள் சோதனை.. மேலும் 6 ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் நீதித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதிபர் ஜோ பைடன் தொடர்பான இடங்களில் இதற்குமுன் 3 முறை சோதனை நடைபெற்றபோது 10க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. துணை அதிபராக பதவிவகித்த காலக்கட்டத்தை சேர்ந்த ரகசிய ஆவணங்கள் அவரது இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, டெலவேர் மாநிலத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், 1973 ஆம் ஆண்டு முதல் … Read more

சீனாவில் ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு

பீஜிங்: சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்டியிருக்க இன்னொருபுறம் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், அவரின் கூற்றின்படி ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாககவும் சர்வதேச ஊடகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கணக்கு கேட்கும் உலக சுகாதார நிறுவனம்: ஜனவரி … Read more

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. நடன அரங்கில் இந்த … Read more

ஸ்வீடன் நாட்டில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து ஸ்வீடன் தேசியக்கொடியை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்..!

ஸ்வீடன் நாட்டில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து துருக்கியில் நடைபெற்ற போராட்டத்தில் ஸ்வீடன் தேசியக்கொடி எரிக்கப்பட்டது. ஆப்ரிக்க நாடுகளிலிருந்து ஸ்வீடனில் தஞ்சமடையவரும் இஸ்லாமியர்களை கண்டித்து, அந்நாட்சின் தீவிர வலதுசாரி கட்சி தலைவர் ஒருவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டது. இதனை கண்டித்து துருக்கியின் இஸ்தான்புல், அங்காரா நகரங்களிலுள்ள ஸ்வீடன் தூதரகத்தின்முன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நேட்டோ அமைப்பில் சேர்வது தொடர்பாக துருக்கி வரயிருந்த ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சரின் சுற்றுப்பயணத்தையும் துருக்கி அரசு ரத்து செய்துள்ளது. Source link